ஒடிசா ரயில் விபத்து : ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்த தமிழக அரசு

Jun 03, 2023,12:31 PM IST
சென்னை : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த பயணிகளுக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசேரில் நேற்று இரவு நடந்த ரயில் விபத்தில் 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 900 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. 



இந்நிலையில் சென்னையில் உள்ள மாநில அவசர கால மீட்பு மையத்திற்கு நேரில் சென்று ஒடிசாவில் நடக்கும் மீட்புப் பணிகள் குறித்த விபரங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கேட்டறிந்தார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடனும் அவர் தொலைப்பேசியில் உரையாடினார். தமிழக அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார். 

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், இந்த விபத்து பற்றி கேள்விப்பட்டதும் நவீன் பட்நாயக்கிடம் நான் பேசினேன். தமிழக அரசால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக உறுதி அளித்துள்ளேன். ஆனால் தற்போதுள்ள நிலையில் உதவிகள் ஏதும் தேவைப்படாது. அவர்களே நிலைமையை சமாளிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவ சங்கர், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் ஒடிசா விரைந்துள்ளனர். நேற்று முதல் மாநில அவசர கால மையம் சார்பில் ரயில் விபத்து தொடர்பான அனைத்து செயல்பாடுகளையும் கண்காணித்து வருகிறார்கள். தேவையானவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்கள்.  

இதுவரை எத்தனை தமிழர்கள் உயிரிழந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்ற எண்ணிக்கை சரியாக கிடைக்கவில்லை. ஒடிசா அரசு அதிகாரிகளுடன் நமது அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்து வருகிறார்கள் என்றார். மேலும் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்