சென்னை: சென்னையில் தக்காளி விலை ரூ. 130 முதல் ரூ. 140 வரை விற்கிறது. விலை சற்றும் குறையாமல் உயர்ந்து வருவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் சமீப காலமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் கவலை அடைந்தனர். ரூ. 100ஐத் தாண்டி விலை எகிறியதால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தற்போது அதையும் தாண்டிப் போய் விட்டது தக்காளி விலை.
தக்காளியைப் பார்த்து விட்டு ஏக்கத்தோடு வேறு காய்கள் பக்கம் திரும்பும் நிலையில்தான் மக்கள் உள்ளனர். தக்காளி விலை இன்னிக்கு என்னப்பா என்று கடையில் கேட்டால் தங்கத்தின் விலையா என்று கடைக்காரர்களே கிண்டலாக கேட்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.
இடையில் சில நாட்கள் விலை சரிவு காணப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ. 130 ஆக உள்ளது. சில்லறை விற்பனையில் ரூ. 140 வரை விற்கப்படுகிறது. இதனால் மக்கள் கால் கிலோ, அரை கிலோவுடன் நின்று கொள்ளும் நிலைக்குப் போய் விட்டனர்.
தக்காளி விலை இன்னும் சில நாட்களுக்கு பெரிய அளவில் சரியாது என்று கடைக்காரர்களே கூறுகின்றனர். இதனால் எப்படி சமையல் செய்வது என்ற கவலையில் உள்ளனர் குடும்பத் தலைவிகள்.
சாம்பார் வெங்காயம்
இதேபோல இன்னொரு அதிர வைக்கும் விலையுடன் காணப்படுவது சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம். இதுவும் கிலோ ரூ. 130 முதல் 140 வரை விற்கப்படுகிறது. இதனால் சாம்பார் வெங்காயத்தையும் மக்கள் பார்த்துப் பார்த்து வாங்கும் நிலையில் உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான வீடுகளில் அசைவம் சமைப்பார்கள். அந்த நாள் பார்த்து தக்காளி விலை அதிகரித்துக் காணப்பட்டதால் மக்கள் அயர்ந்து போயுள்ளனர்.
41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!
மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
{{comments.comment}}