லாஸ் ஏஞ்சலெஸ்: 1984ம் ஆண்டு சென்னையில் ஜெயப்பிரகாஷ் என்பவர் தனது சகோதரி குடும்பத்தை மொத்தமாக தீர்த்துக் கட்டிய சம்பவம் போல அமெரிக்காவில் ஒரு பயங்கரம் அரங்கேறியுள்ளது.

கடந்த 1984ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் விருகம்பாக்கத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். அப்போது தனது சகோதரி, அவரது கணவர், குழந்தைகள் உள்பட மொத்த குடும்பத்தினர் 9 பேரை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றார். அப்போது இந்த வழக்கு தமிழகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. ஆனால் இங்கு சகோதரிக்குப் பதில், மனைவி மற்றும் குழந்தைகளை சுட்டுக் கொன்றுள்ளார் இந்த அமெரிக்கர்.
எனோச் நகரில் உள்ள உடா குடியிருப்புப் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்த நபரின் மனைவி விவாகரத்து கோரி விண்ணப்பித்திருந்தார். இதனால் கணவன் - மனைவி இடையே பிரச்சினை வெடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் தனது மனைவி உள்பட வீட்டில் இருந்த 7 பேரை சுட்டுக் கொன்றார். இதில் 5 குழந்தைகள் அடக்கம். கடைசியில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலையும் செய்து கொண்டார்.
இறந்த 5 குழந்தைகளில் ஒன்றுக்கு 4 வயதுதான் ஆகிறது என்பது பரிதாபமானது. கொலை செய்து தற்கொலையும் செய்து கொண்ட நபரின் பெயர் மிக்கேல் ஹைட் என்றும் அவருக்கு 42 வயது என்றும் தெரிய வந்துள்ளது.
கொலை செய்யப்பட்டவர்கள் - மிக்கேலின் மனைவி, மாமியார், மிக்கேலின் 5 குழந்தைகள் (3 பெண்கள், 2 பையன்கள், 4 முதல் 17 வயது வரையிலானவர்கள்)
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}