"பிரதமர் மோடி முன்பு பாடப் போகிறேன்"... நெகிழ்ச்சியில் அமெரிக்கப் பாடகி மேரி மில்பன்!

Jun 18, 2023,12:18 PM IST
வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபலமான கருப்பர் இனத்தைச் சேர்ந்த பாடகியான மேரி மில்பன், பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயத்தின்போது முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடவுள்ளார். 

ஆப்பிரிக்க அமெரிக்கரான மேரி மில்பன் ஹாலிவுட் நடிகையும் கூட. சிறந்த பாடகியான இவர் நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கா வருமாறு அழைப்பு  விடுத்துள்ளார் அதிபர் ஜோ பைடன். இதை ஏற்று பிரதமர் மோடி, அமெரிக்கா செல்கிறார். அடுத்த வாரம் அவரது அமெரிக்க பயணம் இடம் பெறுகிறது. இந்த பயணத்தின்போது அவர் நியூயார்க்கிலும், வாஷிங்டனிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.




ஜூன் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்வார். ஜூன் 22ம் தேதி அவருக்கு அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் இரவு விருந்து அளித்துக் கெளரவிக்கவுள்ளனர்.

ஜூன் 22ம் தேதி காலை பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசவுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் 2 வது முறையாக உரை நிகழ்த்தவுள்ளார் பிரதமர் மோடி. அப்படிச் செய்யும் 2வது உலகத் தலைவர், முதல்வர் இந்தியத் தலைவர் மோடி மட்டுமே.

23ம் தேதி வாஷிங்டனில் உள்ள சர்வதேச வர்த்தக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தியர்களுடனான சந்திப்பிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார்.

ஜூன் 21ம் தேதி நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 9வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியில்தான் நடிகை மில்பன் பாடவுள்ளார். அதேபோல வாஷிங்டன் இந்தியர்கள் சந்திப்பிலும் இவர் பாடவுள்ளார். இவர் ஏற்கனவே பாடியுள்ள ஜன கன மன தேசி கீதமும், ஓம் ஜெய் ஜெகதீஷ் பாடலும் இந்தியர்கள் மத்தியில் பிரபலமானவை. 




38 வயதாகும் மேரி மில்பன் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பாடவுள்ளது பெருமையும் கவுரமும் தருவதாக கூறியுள்ளார்.  இதுகுறித்து மேரி மில்பன கூறுகையில், ஐ.நா. பொதுச் செயலாலர் சாபா கோரோசி உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து பிரதமர் மோடியை வரவேற்பதில் பெருமைப்படுகிறேன். மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் மேரி.

கடந்த ஆகஸ்ட் 2022ம் ஆண்டு இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவில் அமெரிக்காவின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரப்பூர்வ விருந்தினராக மேரி மில்பன் டெல்லி வந்திருந்தார்.  இந்திய சுதந்திர தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட முதல் கருப்பர் இன அமெரிக்கப் பெண் என்ற பெருமையும் மேரி மில்பனுக்கு உண்டு. அந்த வகையில் மேரி மில்பனுக்கு இந்த பிரதமர் மோடி நிகழ்ச்சி மிகப் பெரிய சந்தோஷமான விஷயம் என்பதில் சந்தேகமில்லை.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்