கட்டுக்கட்டாக பணத்துடன்.. செல்பி எடுத்த இன்ஸ்பெக்டர் மனைவி.. உ.பியில் பரபரப்பு!

Jul 03, 2023,10:55 AM IST
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தனது கணவர் குழந்தைகளுடன், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்களை படுக்கையில் பரப்பி வைத்து செல்பி எடுத்த மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் சந்திர சஹானி. இவர் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். சமீபத்தில் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் புகைப்படத்தில் சஹானி, அவரது மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.



படுக்கையில் 500 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக் கட்டாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த நோட்டுக் கட்டுக்களுடன் சஹானி மனைவி, குழந்தைகள் மற்றும் சஹானி ஆகியோர் செல்பி எடுத்துள்ளனர். மொத்தம் ரூ. 14 லட்சம் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது. இது லஞ்சப் பணம் என்றும் புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து சஹானி இடமாற்றம் செய்யப்பட்டார்.

சொத்து விற்ற பணம் - சஹானி விளக்கம்

ஆனால் இது சொத்து விற்று அதன் மூலம் கிடைத்த பணம். 2021ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி இது எடுக்கப்பட்டது. இது லஞ்சப் பணம் அல்ல என்று சஹானி விளக்கம் அளித்துள்ளார். குடும்பச் சொத்தை விற்றுக் கிடைத்த பணத்துடன் தனது குடும்பத்தினர் செல்பி எடுத்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்