கட்டுக்கட்டாக பணத்துடன்.. செல்பி எடுத்த இன்ஸ்பெக்டர் மனைவி.. உ.பியில் பரபரப்பு!

Jul 03, 2023,10:55 AM IST
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தனது கணவர் குழந்தைகளுடன், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்களை படுக்கையில் பரப்பி வைத்து செல்பி எடுத்த மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் சந்திர சஹானி. இவர் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். சமீபத்தில் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் புகைப்படத்தில் சஹானி, அவரது மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.



படுக்கையில் 500 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக் கட்டாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த நோட்டுக் கட்டுக்களுடன் சஹானி மனைவி, குழந்தைகள் மற்றும் சஹானி ஆகியோர் செல்பி எடுத்துள்ளனர். மொத்தம் ரூ. 14 லட்சம் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது. இது லஞ்சப் பணம் என்றும் புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து சஹானி இடமாற்றம் செய்யப்பட்டார்.

சொத்து விற்ற பணம் - சஹானி விளக்கம்

ஆனால் இது சொத்து விற்று அதன் மூலம் கிடைத்த பணம். 2021ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி இது எடுக்கப்பட்டது. இது லஞ்சப் பணம் அல்ல என்று சஹானி விளக்கம் அளித்துள்ளார். குடும்பச் சொத்தை விற்றுக் கிடைத்த பணத்துடன் தனது குடும்பத்தினர் செல்பி எடுத்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்