கட்டுக்கட்டாக பணத்துடன்.. செல்பி எடுத்த இன்ஸ்பெக்டர் மனைவி.. உ.பியில் பரபரப்பு!

Jul 03, 2023,10:55 AM IST
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தனது கணவர் குழந்தைகளுடன், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்களை படுக்கையில் பரப்பி வைத்து செல்பி எடுத்த மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் சந்திர சஹானி. இவர் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். சமீபத்தில் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் புகைப்படத்தில் சஹானி, அவரது மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.



படுக்கையில் 500 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக் கட்டாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த நோட்டுக் கட்டுக்களுடன் சஹானி மனைவி, குழந்தைகள் மற்றும் சஹானி ஆகியோர் செல்பி எடுத்துள்ளனர். மொத்தம் ரூ. 14 லட்சம் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது. இது லஞ்சப் பணம் என்றும் புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து சஹானி இடமாற்றம் செய்யப்பட்டார்.

சொத்து விற்ற பணம் - சஹானி விளக்கம்

ஆனால் இது சொத்து விற்று அதன் மூலம் கிடைத்த பணம். 2021ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி இது எடுக்கப்பட்டது. இது லஞ்சப் பணம் அல்ல என்று சஹானி விளக்கம் அளித்துள்ளார். குடும்பச் சொத்தை விற்றுக் கிடைத்த பணத்துடன் தனது குடும்பத்தினர் செல்பி எடுத்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்