கட்டுக்கட்டாக பணத்துடன்.. செல்பி எடுத்த இன்ஸ்பெக்டர் மனைவி.. உ.பியில் பரபரப்பு!

Jul 03, 2023,10:55 AM IST
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தனது கணவர் குழந்தைகளுடன், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்களை படுக்கையில் பரப்பி வைத்து செல்பி எடுத்த மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் சந்திர சஹானி. இவர் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். சமீபத்தில் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் புகைப்படத்தில் சஹானி, அவரது மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.



படுக்கையில் 500 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக் கட்டாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த நோட்டுக் கட்டுக்களுடன் சஹானி மனைவி, குழந்தைகள் மற்றும் சஹானி ஆகியோர் செல்பி எடுத்துள்ளனர். மொத்தம் ரூ. 14 லட்சம் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது. இது லஞ்சப் பணம் என்றும் புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து சஹானி இடமாற்றம் செய்யப்பட்டார்.

சொத்து விற்ற பணம் - சஹானி விளக்கம்

ஆனால் இது சொத்து விற்று அதன் மூலம் கிடைத்த பணம். 2021ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி இது எடுக்கப்பட்டது. இது லஞ்சப் பணம் அல்ல என்று சஹானி விளக்கம் அளித்துள்ளார். குடும்பச் சொத்தை விற்றுக் கிடைத்த பணத்துடன் தனது குடும்பத்தினர் செல்பி எடுத்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்