வளமான வாழ்வு தரும் வைகாசி விசாக திருநாள்

Jun 02, 2023,09:40 AM IST
சென்னை : தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்குரிய முக்கிய விரத நாட்களில் ஒன்று வைகாசி விசாகம். சிவ பெருமானின் வெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகள், சரவண பொய்கையில் உள்ள தாமரை மலர்களால் ஆறு குழந்தைகளாக தவழ்ந்தன. அப்படி முருகப் பெருமான் அவதரித்த தினம் தான் இந்த வைகாசி விசாக திருநாள். 

வைகாசி மாதத்தில் வரும் பெளர்ணமியும், விசாக நட்சத்திரமும் இணையும் நாளே வைகாசி விசாகமாகும். விசாகன் என்றால் மயில் மீது ஏறி பவனி வருபவன் என்று பொருள். இதனாலேயே முருகப் பெருமானுக்கு விசாகன் என்ற திருநாமமும் உண்டு. வைகாசி விசாகத்தன்று முருகப் பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் அப்படியே நடக்கும் என்பது ஐதீகம். 



வைகாசி விசாகத்தன்று உலகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், காவடி தூக்கியும் பாதயாத்திரையாக வந்து வழிபடுவது வழக்கம். முருகப் பெருமான், தீப்பொறியில் இருந்து உருவானர் என்பதால் அவரை குளிர்விக்க இந்த நாளில் பால் அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். பால் அபிஷேகம் செய்து முருகனை குளிரச் செய்தால், அவர் மனம் மகிழ்ந்து நாம் வேண்டும் வரங்களை தருவார் என்பது நம்பிக்கை.

2023 ம் ஆண்டில் வைகாசி விசாகமானது ஜூன் 02 ம் தேதி, மங்களகரமான வெள்ளிக்கிழமையில் வருகிறது. வெள்ளிக்கிழமையில் வரும் வைகாசி விசாகம் என்பதால் இந்த நாளில் முருகப் பெருமானையும், மகாலட்சுமியையும் வழிபடுவது செல்வத்தை பெருக்கும். பொதுவாக முருகப் பெருமானை வழிபட்டாலே சிவன் மற்றும் பார்வதியின் அருளை பெற்று விடலாம். வைகாசி விசாகத்தன்று முருகப் பெருமானுக்குரிய ஆறெழுத்து மந்திரமான ஓம் சரவணபவ என்றும் மந்திரத்தை சொல்லி வழிபடுவது சிறப்பானதாகும்.

சரவணபவ என்ற மந்திரத்திற்குள் அனைத்து தெய்வங்களும் அடக்கம் என்பதால், இந்த நல்ல நாளில் இந்த அற்புதமான மந்திரத்தை சொல்லி வழிபட்டால் அனைத்து தெய்வங்களின் அருளையும் பெறலாம்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்