வளமான வாழ்வு தரும் வைகாசி விசாக திருநாள்

Jun 02, 2023,09:40 AM IST
சென்னை : தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்குரிய முக்கிய விரத நாட்களில் ஒன்று வைகாசி விசாகம். சிவ பெருமானின் வெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகள், சரவண பொய்கையில் உள்ள தாமரை மலர்களால் ஆறு குழந்தைகளாக தவழ்ந்தன. அப்படி முருகப் பெருமான் அவதரித்த தினம் தான் இந்த வைகாசி விசாக திருநாள். 

வைகாசி மாதத்தில் வரும் பெளர்ணமியும், விசாக நட்சத்திரமும் இணையும் நாளே வைகாசி விசாகமாகும். விசாகன் என்றால் மயில் மீது ஏறி பவனி வருபவன் என்று பொருள். இதனாலேயே முருகப் பெருமானுக்கு விசாகன் என்ற திருநாமமும் உண்டு. வைகாசி விசாகத்தன்று முருகப் பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் அப்படியே நடக்கும் என்பது ஐதீகம். 



வைகாசி விசாகத்தன்று உலகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், காவடி தூக்கியும் பாதயாத்திரையாக வந்து வழிபடுவது வழக்கம். முருகப் பெருமான், தீப்பொறியில் இருந்து உருவானர் என்பதால் அவரை குளிர்விக்க இந்த நாளில் பால் அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். பால் அபிஷேகம் செய்து முருகனை குளிரச் செய்தால், அவர் மனம் மகிழ்ந்து நாம் வேண்டும் வரங்களை தருவார் என்பது நம்பிக்கை.

2023 ம் ஆண்டில் வைகாசி விசாகமானது ஜூன் 02 ம் தேதி, மங்களகரமான வெள்ளிக்கிழமையில் வருகிறது. வெள்ளிக்கிழமையில் வரும் வைகாசி விசாகம் என்பதால் இந்த நாளில் முருகப் பெருமானையும், மகாலட்சுமியையும் வழிபடுவது செல்வத்தை பெருக்கும். பொதுவாக முருகப் பெருமானை வழிபட்டாலே சிவன் மற்றும் பார்வதியின் அருளை பெற்று விடலாம். வைகாசி விசாகத்தன்று முருகப் பெருமானுக்குரிய ஆறெழுத்து மந்திரமான ஓம் சரவணபவ என்றும் மந்திரத்தை சொல்லி வழிபடுவது சிறப்பானதாகும்.

சரவணபவ என்ற மந்திரத்திற்குள் அனைத்து தெய்வங்களும் அடக்கம் என்பதால், இந்த நல்ல நாளில் இந்த அற்புதமான மந்திரத்தை சொல்லி வழிபட்டால் அனைத்து தெய்வங்களின் அருளையும் பெறலாம்.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்