எம்எல்ஏ திருமகன் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து கண்ணீர் இரங்கல்

Jan 05, 2023,09:02 AM IST
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வும் காங்கிரஸ் பொது செயலாளர்களில் ஒருவருமான திருமகன் ஈவெரா நேற்று (ஜனவரி 04) மாரடைப்பால் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார்.

திருமகன் ஈவெரா, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும், தந்தை ஈவெரா பெரியாரின் கொள்ளு பேரனும் ஆவார். 46 வயதாகும் திருமகன், முதல் முறையாக எம்எல்ஏ.,வாக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் சட்டசபைக்கு சென்றனர். இவரது மறைவிற்கு தமிழக கவர்னர், முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள், காங்கிரஸ் பிரமுகர்கள் உள்ளிட்டோர் இரங்கில் தெரிவித்து வருகின்றனர். நேரிலும் சென்று பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.





இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, திருமகன் ஈவெரா மறைவிற்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :




பெரியார் பரம்பரை
திருமகன் இறந்தது
பேரதிர்ச்சி

நான் போயிருக்கலாம்;
மகன் இருந்திருக்கலாம்
என்றார் இளங்கோவன்
கட்டிய குரலில்

மரணம் கண்தெரியாத
காற்று
அதற்கு மலர் எது சருகு எது
என்று தெரிவதில்லை

கனத்த மனத்தோடு
கண்ணீர் இரங்கல்

சமீபத்திய செய்திகள்

news

CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

அதிகம் பார்க்கும் செய்திகள்