எம்எல்ஏ திருமகன் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து கண்ணீர் இரங்கல்

Jan 05, 2023,09:02 AM IST
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வும் காங்கிரஸ் பொது செயலாளர்களில் ஒருவருமான திருமகன் ஈவெரா நேற்று (ஜனவரி 04) மாரடைப்பால் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார்.

திருமகன் ஈவெரா, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும், தந்தை ஈவெரா பெரியாரின் கொள்ளு பேரனும் ஆவார். 46 வயதாகும் திருமகன், முதல் முறையாக எம்எல்ஏ.,வாக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் சட்டசபைக்கு சென்றனர். இவரது மறைவிற்கு தமிழக கவர்னர், முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள், காங்கிரஸ் பிரமுகர்கள் உள்ளிட்டோர் இரங்கில் தெரிவித்து வருகின்றனர். நேரிலும் சென்று பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.





இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, திருமகன் ஈவெரா மறைவிற்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :




பெரியார் பரம்பரை
திருமகன் இறந்தது
பேரதிர்ச்சி

நான் போயிருக்கலாம்;
மகன் இருந்திருக்கலாம்
என்றார் இளங்கோவன்
கட்டிய குரலில்

மரணம் கண்தெரியாத
காற்று
அதற்கு மலர் எது சருகு எது
என்று தெரிவதில்லை

கனத்த மனத்தோடு
கண்ணீர் இரங்கல்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்