எம்எல்ஏ திருமகன் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து கண்ணீர் இரங்கல்

Jan 05, 2023,09:02 AM IST
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வும் காங்கிரஸ் பொது செயலாளர்களில் ஒருவருமான திருமகன் ஈவெரா நேற்று (ஜனவரி 04) மாரடைப்பால் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார்.

திருமகன் ஈவெரா, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும், தந்தை ஈவெரா பெரியாரின் கொள்ளு பேரனும் ஆவார். 46 வயதாகும் திருமகன், முதல் முறையாக எம்எல்ஏ.,வாக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் சட்டசபைக்கு சென்றனர். இவரது மறைவிற்கு தமிழக கவர்னர், முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள், காங்கிரஸ் பிரமுகர்கள் உள்ளிட்டோர் இரங்கில் தெரிவித்து வருகின்றனர். நேரிலும் சென்று பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.





இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, திருமகன் ஈவெரா மறைவிற்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :




பெரியார் பரம்பரை
திருமகன் இறந்தது
பேரதிர்ச்சி

நான் போயிருக்கலாம்;
மகன் இருந்திருக்கலாம்
என்றார் இளங்கோவன்
கட்டிய குரலில்

மரணம் கண்தெரியாத
காற்று
அதற்கு மலர் எது சருகு எது
என்று தெரிவதில்லை

கனத்த மனத்தோடு
கண்ணீர் இரங்கல்

சமீபத்திய செய்திகள்

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

அதிகம் பார்க்கும் செய்திகள்