டெல்லி: வந்தே பாரத் ரயில்களின் அடுத்த வெர்ஷனை இந்திய ரயில்வே அறிமுகம் செய்யவுள்ளது. இந்த முறை, வந்தே சாதாரண் என்ற பெயரில் இந்த ரயில்கள் அறிமுகமாகின்றன. இவை முழுக்க முழுக்க "நான் ஏசி" பெட்டிகளைக் கொண்டவை ஆகும்.
இந்தியாவின் அதி வேக ரயிலாக அறிமுகமானவைதான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள். இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு இடையே தற்போது 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி கொண்டவை. பல்வேறு அதி நவீன வசதிகளுடன் கூடியவை. குறைந்த நேரத்தில் அதிக தொலைவில் உள்ள நகரங்களை சென்றடைய முடிவதால் மக்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளன.
வந்தே பாரத் ரயில்களில் உள்ள ஒரே குறை. இவற்றில் கட்டணம் அதிகமாக இருப்பதுதான். இந்தக் குறையைத் தீர்க்க தற்போது ரயில்வே புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. சாமானிய மக்களும் எளிதாக வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் வகையில் வந்தே சாதாரண் என்ற பெயரில் புதிய ரயிலை அது அறிமுகப்படுத்தவுள்ளது.
வந்தே பாரத் ரயில் போன்றதுதான் இதுவும். ஆனால் ஏசி மட்டும் இருக்காது. மற்றபடி தற்போது அனைத்து வசதிகள், வேகம் ஆகியவற்றில் எந்தக் குறைவும் இருக்காதாம். வந்தே சாதாரண் எக்ஸ்பிரஸ் ரயில்களின் என்ஜின்களும், வந்தே பாரத்தில் பயன்படுத்தப்படும் அதே என்ஜின்களாகத்தான் இருக்குமாம். மேலும் வந்தே சாதாரண் பெட்டிகளை சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் கோச்சில் தயாரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இங்குதான் வந்தே பாரத் பெட்டிகளும் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இறுதியில் முதல் வந்தே சாதாரண் ரயில் அறிமுகமாகும் என்றும் தெரிகிறது.
வந்தே சாதாரண் ரயிலில் மொத்தம் 24 பெட்டிகள் இருக்குமாம். இதில் முன்னும், பின்னும் இரண்டு என்ஜின்கள் பொருத்தப்பட்ட பெட்டிகள் இருக்கும். வந்தே பாரத் ரயில்களில் தற்போது உள்ளது போல தானியங்கிக் கதவுகள், பயோ டாய்லெட்டுகள், பயணிகளுக்கான தகவல் தொடர்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் இருக்கும். சிசிடிவி கேமராக்களும் ரயிலில் பொருத்தப்பட்டிருக்கும். ஏசி கிடையாது என்பதால் கட்டணமும் குறைவாகவே இருக்கும். எனவே அனைத்துத் தரப்பு மக்களும் இதில் எளிதாக பயணிக்க முடியும்.
நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
தாய்!!!
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
{{comments.comment}}