"வந்தே சாதாரண்".. விரைவில் நான் ஏசி வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம்!

Jul 07, 2023,11:09 AM IST

டெல்லி: வந்தே பாரத் ரயில்களின் அடுத்த வெர்ஷனை இந்திய ரயில்வே அறிமுகம் செய்யவுள்ளது. இந்த முறை, வந்தே சாதாரண் என்ற பெயரில் இந்த ரயில்கள் அறிமுகமாகின்றன. இவை முழுக்க முழுக்க "நான் ஏசி" பெட்டிகளைக் கொண்டவை ஆகும்.


இந்தியாவின் அதி வேக ரயிலாக அறிமுகமானவைதான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள். இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு இடையே தற்போது 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி கொண்டவை. பல்வேறு அதி நவீன வசதிகளுடன் கூடியவை. குறைந்த நேரத்தில் அதிக தொலைவில் உள்ள நகரங்களை சென்றடைய முடிவதால் மக்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளன.




வந்தே பாரத் ரயில்களில் உள்ள ஒரே குறை. இவற்றில் கட்டணம் அதிகமாக இருப்பதுதான். இந்தக் குறையைத் தீர்க்க தற்போது ரயில்வே புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. சாமானிய மக்களும் எளிதாக வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் வகையில் வந்தே சாதாரண் என்ற பெயரில் புதிய ரயிலை அது அறிமுகப்படுத்தவுள்ளது.


வந்தே பாரத் ரயில் போன்றதுதான் இதுவும். ஆனால் ஏசி மட்டும் இருக்காது. மற்றபடி தற்போது அனைத்து வசதிகள், வேகம் ஆகியவற்றில் எந்தக் குறைவும் இருக்காதாம்.  வந்தே சாதாரண் எக்ஸ்பிரஸ் ரயில்களின் என்ஜின்களும், வந்தே பாரத்தில் பயன்படுத்தப்படும் அதே என்ஜின்களாகத்தான் இருக்குமாம். மேலும் வந்தே சாதாரண் பெட்டிகளை சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் கோச்சில் தயாரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இங்குதான் வந்தே பாரத் பெட்டிகளும் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இறுதியில் முதல் வந்தே சாதாரண் ரயில் அறிமுகமாகும் என்றும் தெரிகிறது.


வந்தே சாதாரண் ரயிலில் மொத்தம் 24 பெட்டிகள் இருக்குமாம்.  இதில் முன்னும், பின்னும் இரண்டு என்ஜின்கள் பொருத்தப்பட்ட பெட்டிகள் இருக்கும்.  வந்தே பாரத் ரயில்களில் தற்போது உள்ளது போல தானியங்கிக் கதவுகள், பயோ டாய்லெட்டுகள், பயணிகளுக்கான தகவல் தொடர்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் இருக்கும். சிசிடிவி கேமராக்களும் ரயிலில் பொருத்தப்பட்டிருக்கும். ஏசி கிடையாது என்பதால் கட்டணமும் குறைவாகவே இருக்கும். எனவே அனைத்துத் தரப்பு மக்களும் இதில் எளிதாக பயணிக்க முடியும்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்