டெல்லி: வந்தே பாரத் ரயில்களின் அடுத்த வெர்ஷனை இந்திய ரயில்வே அறிமுகம் செய்யவுள்ளது. இந்த முறை, வந்தே சாதாரண் என்ற பெயரில் இந்த ரயில்கள் அறிமுகமாகின்றன. இவை முழுக்க முழுக்க "நான் ஏசி" பெட்டிகளைக் கொண்டவை ஆகும்.
இந்தியாவின் அதி வேக ரயிலாக அறிமுகமானவைதான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள். இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு இடையே தற்போது 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி கொண்டவை. பல்வேறு அதி நவீன வசதிகளுடன் கூடியவை. குறைந்த நேரத்தில் அதிக தொலைவில் உள்ள நகரங்களை சென்றடைய முடிவதால் மக்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளன.
வந்தே பாரத் ரயில்களில் உள்ள ஒரே குறை. இவற்றில் கட்டணம் அதிகமாக இருப்பதுதான். இந்தக் குறையைத் தீர்க்க தற்போது ரயில்வே புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. சாமானிய மக்களும் எளிதாக வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் வகையில் வந்தே சாதாரண் என்ற பெயரில் புதிய ரயிலை அது அறிமுகப்படுத்தவுள்ளது.
வந்தே பாரத் ரயில் போன்றதுதான் இதுவும். ஆனால் ஏசி மட்டும் இருக்காது. மற்றபடி தற்போது அனைத்து வசதிகள், வேகம் ஆகியவற்றில் எந்தக் குறைவும் இருக்காதாம். வந்தே சாதாரண் எக்ஸ்பிரஸ் ரயில்களின் என்ஜின்களும், வந்தே பாரத்தில் பயன்படுத்தப்படும் அதே என்ஜின்களாகத்தான் இருக்குமாம். மேலும் வந்தே சாதாரண் பெட்டிகளை சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் கோச்சில் தயாரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இங்குதான் வந்தே பாரத் பெட்டிகளும் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இறுதியில் முதல் வந்தே சாதாரண் ரயில் அறிமுகமாகும் என்றும் தெரிகிறது.
வந்தே சாதாரண் ரயிலில் மொத்தம் 24 பெட்டிகள் இருக்குமாம். இதில் முன்னும், பின்னும் இரண்டு என்ஜின்கள் பொருத்தப்பட்ட பெட்டிகள் இருக்கும். வந்தே பாரத் ரயில்களில் தற்போது உள்ளது போல தானியங்கிக் கதவுகள், பயோ டாய்லெட்டுகள், பயணிகளுக்கான தகவல் தொடர்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் இருக்கும். சிசிடிவி கேமராக்களும் ரயிலில் பொருத்தப்பட்டிருக்கும். ஏசி கிடையாது என்பதால் கட்டணமும் குறைவாகவே இருக்கும். எனவே அனைத்துத் தரப்பு மக்களும் இதில் எளிதாக பயணிக்க முடியும்.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}