வெறிச்சோடிய சென்னை சாலைகள்...3 நாள் விடுமுறையால் ஊரே காலியாகிடுச்சு

Apr 14, 2023,12:00 PM IST
சென்னை : தொடர்ந்து இரண்டாவது வாரமாக வார இறுதி நாட்களுடன் சேர்த்து விடுமுறை நாளும் வருவதால் எப்போதும் பரபரப்பாக போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் சென்னை சாலையில் தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன.

ஏப்ரல் 7 ம் தேதி வெள்ளிக்கிழமை புனித வெள்ளி விடுமுறை நாளாகும். இதோடு சேர்த்து வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்தால் சென்னையில் தங்கி, வேலை செய்யும் பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இருந்தால் அப்போதும் சர்ச்க்கு செல்பவர்கள் உள்ளிட்டவர்களால் சாலையில் ஓரளவு வாகன நடமாட்டம் இருந்தது. 



ஆனால் தொடர்ந்து இரண்டாவது வாரமாக ஏப்ரல் 14 ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழ் புத்தாண்டு என்பதால் அரசு விடுமுறையானது. இதோடு சேர்த்து சனி, ஞாயிற்றுகிழமை வருவதால் பலரும் சனிக்கிழமை அலுவலகங்களுக்கு லீவ் எடுத்துக் கொண்டு சொந்த ஊர்களுக்கு புத்தாண்டு கொண்டாட சென்று விட்டனர். இன்னும் சிலர் பள்ளி கோடை விடுமுறை காரணமாக வெளியூர்களுக்கு சுற்றுலா சென்று விட்டனர். இதனால் சென்னையின் முக்கிய சாலைகள் அனைத்து ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

தொடர்ந்து மூன்றாவது வாரமாக வரும் வாரத்திலும் ரம்ஜான் பண்டிகை வெள்ளிக்கிழமையே கொண்டாடப்படுவதாக பல இடங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மூன்றாவது வாரத்திலும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால் அலுவலகம் செல்வோர் கூட செம குஷியாகி உள்ளனர். அது மட்டுமல்ல அதற்கு அடுத்து வரும் வாரத்திலும் மே 01 ம் தேதி திங்கட்கிழமை வருவதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்