டெல்லி: 2022 ம் ஆண்டுக்கு Good bye சொல்லி அனுப்பி விட்டு, 2023 ம் ஆண்டை உற்சாகம் பொங்க, வழக்கமாக புத்தாண்டு கொண்டாட்டத்துடன் சிறப்பாக வரவேற்று உலக மக்கள் குதூகலித்து வருகின்றனர். மக்களின் முகங்களில் மட்டுமல்ல மனங்களிலும் உற்சாகமும், நம்பிக்கையும், கொண்டாட்டமும் அருவியாய் கொட்டிக் கொண்டிருக்கிறது.
.jpg)
2020, 2021 ஆகிய இரு ஆண்டுகளும் திக்...திக்...என்ற பயம், பதற்றம், சோகத்துடன் சென்றது. கொரோனா தந்த பயத்தை போக்கி, மீண்டும் இயல்பு வாழ்க்கையை தந்தது 2022. இருந்தாலும் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ, மீண்டும் வீட்டிற்குள் முடங்கும் நிலை வந்து விடுமோ என்ற பயம் அனைவருக்குள்ளும் இருக்கத் தான் செய்தது.
ஆனால் கடந்த 3 ஆண்டுகள் தந்த சிறை வாழ்க்கை, கட்டுப்பாடுகள் அத்தனையும் உடைக்கப்பட்டு, சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகளாய், துள்ளும் மனதுடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் 2023 ம் ஆண்டை உலக மக்கள் வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். 2023 ம் ஆண்டு நிச்சயம் நமக்கு மகிழ்ச்சியான ஆண்டாக, வெற்றியான ஆண்டாகும் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன. இளைஞர்களின் வான வேடிக்கை கொண்டாட்டங்கள் ஒரு பக்கம், பெரியவர்களின் பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும் மறு பக்கம் என நிறைவான புத்தாண்டாக 2023 அமைந்துள்ளது.
2023 ம் ஆண்டினை welcome சொல்லி வரவேற்றுள்ளனர் மக்கள். முகம் தெரியாதவர்களுக்கும் Happy New Year சொல்லி, இனிப்புக்கள் வழங்கி சந்தோஷத்தை பகிர்ந்து, அதை இரட்டிப்பாக்கிக் கொண்டிருக்கிறது உலகம். இந்த புத்தாண்டில் புதிதாக பிறந்த குழந்தைகளை போல் மீண்டும் வாழ்க்கையையும், விலகிப் போன உறவுகளையும் புதிதாய் தொடர்வோம்.
நியூசிலாந்தில் தொடங்கி படிப்படியாக உலகின் ஒவ்வொரு அங்கமாக மலர்ந்து வந்த புத்தாண்டு தற்போது ஒட்டுமொத்த உலக மக்களையும் புதிய நம்பிக்கை மற்றும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று மலர்ந்த இந்த புத்தாண்டின் உற்சாகம் ஆண்டு முழுவதும் தொடரும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் கொண்டாடித் தீர்த்துக் கொண்டுள்ளனர்.
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}