பிரமாண்ட சென்டிரல் விஸ்டா.. கோலாலகல திறப்பு விழா.. புது நாடாளுமன்றத்தில் என்ன!

May 27, 2023,04:10 PM IST
டில்லி : டில்லியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டிடம் மே 28 ம் தேதியான நாளை திறக்கப்பட உள்ளது. 

பிரதமர் மோடி இந்த புதிய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவை 20 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ள நிலையில் 25 அரசியல் கட்சிகள் கலந்து கொள்ள உள்ளன. 



மங்கல நிகழ்வுகளுடன் துவங்கப்பட உள்ள இந்த விழாவில் சைவ புரோகிதர்கள் பிரதமர் மோடியிடம் செங்கோலை ஒப்படைக்க உள்ளனர். இந்த செங்கோல் சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் புதிய பார்லிமென்ட்டின் உட்புறம் என்னவெல்லாம் சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை விளக்கும் வீடியோ ஒன்று மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், மாடர்ன் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கம், நூற்றுக்கணக்கான எம்.பி.,க்கள் அமரும் வகையிலான அறை என அனைத்தும் இடம்பெற்றுள்ளது. தாமரை, மயில், அரச மரம் ஆகிய மூன்று தேசிய சின்னங்களின் தீம்களும் இந்த பிரம்மாண்ட அரங்கில் இடம்பிடித்துள்ளன.  முக்கோண வடிவில், நான்கு அடுக்குகளைக் கொண்டதாக 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்திற்கு மூன்று நுழைவு வாயில்கள் உள்ளன. 



தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பார்லிமென்ட் கட்டிடம் 1927 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். ஏறக்குறைய நூறு ஆண்டுகள் ஆகி விட்டது. புதிய பார்லிமென்ட் கட்டிடம் டாடா ப்ராஜெக்ட் லிமிடெட் நிறுவனத்தால் இந்தியாவின் ஜனநாயக மரபை வெளிப்படுத்தும் வகையிலான அமைப்புக்கள், எம்பி.,க்களுக்கான அறை, நூலகம், ஏராளமான கூட்டம் நடத்தும் அரங்குககள், சாப்பிடும் அறை, பிரம்மாண்ட பார்க்கிங் ஏரியா என அமைக்கப்பட்டுள்ளது.

புதிய பார்லிமென்ட் வீடியோவை பார்த்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, புதிய பார்லிமென்ட் கட்டிடம் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளும் விதமாக இருக்கும். இந்த தனித்துவமான கட்டிடத்தின் சிறப்பு அம்சங்களை இந்த வீடியோ எடுத்துக்காட்டி உள்ளது. இந்த வீடியோவை உங்களின் பக்கங்களில் பகிர்ந்து, உங்களின் கருத்துக்களை பகிரும் படி கேட்டுக் கொள்கிறேன். அதில் சிலவற்றை ரீ ட்வீட் செய்துள்ளேன்.  #MyParliamentMyPride என் ஹெஷ்டேக்கை பயன்படுத்த மறக்காதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு - நிகழ்ச்சி நிரல்

காலை 7.30 மணி: பூஜை நிகழ்ச்சி ஒரு மணி நேரம் நடைபெறும். காந்தி சிலை அருகே பந்தல் அமைக்கப்பட்டு அங்கு பூஜை நிகழ்வுகள் நடைபெறும். பிரதமர் நரேந்திர மோடி, லோகச்பா சபாநாயகர் ஓம் பிர்லா, அமைச்சர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.

8.30 மணி:  தமிழ்நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல், புதிய லோக்சபாவில் நிறுவப்படும் நிகழ்வு. 

9 மணி:  அனைத்து மத குருமார்கள் கலந்து கொள்ளும் பிரார்த்தனை கூட்டம். 

பிற்பகல் 12 மணி: தேசிய கீதத்துடன் 2வது கட்ட  திறப்பு விழா நிகழ்வுகள் தொடங்கும். 2 குறும்படங்கள் திரையிடப்படும். நாடாளுமன்றத்தின் வரலாறு, முக்கியத் தலைவர்களின் பேச்சுக்கள் இதில் இடம் பெறும்.



குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் வாழ்த்துச் செய்தியை, ராஜ்யசபா துணைத் தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான ஜகதீப் தங்கர் வாசிப்பார். 

இதைத் தொடர்ந்து ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் உரை நிகழ்த்த அழைக்கப்படுவார். ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இருக்கிறார். அவரது கட்சி விழாவை புறக்கணிப்பதால் கார்கேவின் உரை இடம் பெற வாய்ப்பில்லை. அதைத் தொடர்ந்து லோக்சபா சபாநாயகர் உரை இடம் பெறும்.

புதிய நாடாளுமன்றத் திறப்பைத் தொடர்ந்து ரூ. 75 நாணயம் வெளியிடப்படும். பிரதமர் நரேந்திர மோடி அதை வெளியிட்டு சிறப்பிப்பார். அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்துவார். அத்துடன் விழா நிறைவுறும்.

சமீபத்திய செய்திகள்

news

புதுச்சேரி, அசாம், கேரளா சட்டசபை தேர்தல் 2026: இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது

news

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை

news

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை

news

இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்

news

Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!

news

கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?

news

சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!

news

Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்