தெற்கில் வென்ற காங்கிரஸ் தலைவர்கள்.. வரலாறை மாற்றி எழுதுவாரா மோடி?

Jan 27, 2023,02:25 PM IST
சென்னை: தென் மாநிலங்களைச் சேராத தேசிய தலைவர்கள் தெற்கில் போட்டியிட்டு வென்ற வரலாறு இதுவரை இந்திரா காந்தி குடும்பத்திடம் மட்டுமே உள்ளது. இந்த வரலாற்றை பிரதமர் நரேந்திர மோடி மாற்றி எழுதுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



தமிழ்நாட்டு மக்கள் பிரதமர் நரேந்திர மோடியை,அந்நியராக பார்க்கவில்லை மாறாக தங்களுக்குரியவராகவே பார்க்கிறார்கள். அவர் ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அவர் போட்டியிட வேண்டும் என்று மக்கள் ஆசைப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இந்த நிலையில் வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்க்கலாம்.

இந்திய அரசியலைப் பொறுத்தவரை குறிப்பாக தென் மாநிலங்களில் இதுவரை, தென் மாநிலங்களைச் சேராத தேசிய  தலைவர்கள் (காங்கிரஸ், பாஜகவிலிருந்து) யாரெல்லாம் போட்டியிட்டுள்ளார்கள் என்று பார்த்தால் இந்திரா காந்தி குடும்பத்தினர் மட்டுமே போட்டியிட்டுள்ளார்கள், வென்றுள்ளார்கள் என்று வரலாறு கூறுகிறது.

1978ம் ஆண்டு கர்நாடகத்தின் சிக்மகளூரு லோக்சபா தொகுதியில் இந்திரா காந்தி போட்டியிட்டார். அதேபோல 1980ம் ஆண்டு தேர்தலில் ஆந்திர மாநிலம்,  மேடக் தொகுதியில் அவர் போட்டியிட்டு வென்றார்.

இந்திரா காந்தியின் மருமகளும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி 1999ம் ஆண்டு  பெல்லாரி தொகுதியிலும், அமேதி தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டிலும் வென்றார். பின்னர் பெல்லாரி தொகுதியை ராஜினாமா செய்து விட்டார்.

சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி தனது தாயார், பாட்டி வழியில் தென் மாநிலங்களில் போட்டியிட விரும்பி கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும், அமேதி தொகுதியிலும் போட்டியிட்டார். அதில் வயநாடு தொகுதியில் அபார வெற்றி பெற்றார். அமேதியில் தோல்வியைத் தழுவினார்.

காந்தி குடும்பத்தினர் தமிழ்நாட்டைத் தவிர மற்ற 3 தென் மாநிலங்களிலும் போட்டியிட்டு வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  அதேசமயம், பாஜகவைச் சேர்ந்த, தென் மாநிலங்களைச் சாராத எந்த தேசிய தலைவரும் இதுவரை தமிழ்நாட்டிலோ அல்லது பிற தென் மாநிலங்களிலோ போட்டியிட்டதில்லை.  இந்த முறை பிரதமர் நரேந்திர மோடி இந்த வரலாற்றை மாற்றி எழுதுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இருப்பினும் மூத்த தலைவர்களான அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும்  அத்வானியிடம் ஒரு சாதனை உள்ளது. வாஜ்பாய் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்தவர். ஆனால் குவாலியரில் அவர் ஒருமுறைதான் போட்டியிட்டு எம்.பி. ஆனார். மற்ற அனைத்து தேர்தல்களிலும் அவர் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லியில்தான் வென்றுள்ளார்.

மூத்த தலைவரான அத்வானி, தற்போதைய பாகிஸ்தானில் பிறந்தவர். அவர் குஜராத் மாநிலத்தில்தான் போட்டியிட்டு வென்று வந்தார். இந்த இரு பெரும் தலைவர்களும் தேசிய அளவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்களாக உள்ளனர். இருப்பினும் இவர்கள் தெற்கில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்��னவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கன்னியாகுமரியில் போட்டியிட வேண்டும் என்று ஒட்டுமொத்த காங்கிரஸாரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்