- டிலாணி ஸ்ரீதரன்
உலகத்திற்கே கூரையாய் படர்ந்த வானும்
உள்ளத்திற்கும் உறக்கத்திற்கும் குளிர்ச்சியான நிலவும்!
ஒளிக்கும் விழிக்கும் விடியலான பரிதியும்!
அரணாக அலங்கரித்து
உலாவும் விணமீனும்!
வெண்பஞ்சாய் நாணத்தில் நடைபழகும் முகிலினங்களும்!
தூவானமாய் பொழிந்து
துணையாகும் மழையும்!

பொதிகையிலிருந்து
தவழ்ந்து சுவாசமாகும் தென்றலும்!
அலைகளாகத் திரண்டு அணிவகுக்கும் ஆழியும்!
வழித்தேடி தொய்வில்லாமல் தொடரும் அருவியும்!
சிகரத்திலிருந்து
தரையிறங்கி மனங்கவரும்
நீர்வீழ்ச்சியும்!
இச்சையாய் மெய் தீண்டும் பச்சையமும்!
காற்றோடு கலந்து
கதைப்பேசும் தாவரங்களும்!
இருமாப்பாய் அழகு சேர்க்கும் புள்ளினங்களும்!
"இயற்கையின் மடியில்" அனைத்தும் அற்புதங்களே!
இறைவன் நமக்களித்த
இன்றியமையாத கருவூலங்களே!
பள்ளிப் பயண வழியில்!
ஐம்பதைத் தாண்டியும் ஆழ் மனதின் ஓரத்தில்!
இயற்கையின் மடியில்!
அபுதாபி செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இலவச நுழைவு விசா
தாய் தரும் அமுதம் (தாய்ப்பால் வாரக் கவிதை)
Short Story: நல்ல மருமகள்!
சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம்.. விவாதத்திற்குப் பின் நிறைவேறியது
பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாதது பெரும் ஏமாற்றம்: பாமக சௌமியா அன்புமணி பேச்சு!
புன்னகை ப் பூவே
{{comments.comment}}