என்னப்பா சொல்றீங்க.. ஒரு மாம்பழத்தோட விலை ரூ.19,000 ஆ?

May 10, 2023,03:26 PM IST

டோக்கியோ :  ஜப்பானின் ஹொக்காடியோ தீவில் விவசாயி ஒருவர் விளைவித்துள்ள ஒரு மாம்பழத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ.19,000 மாம். இது தான் இன்றைய தேதிக்கு உலகின் மிக காஸ்ட்லியான மாம்பழமாகும்.

நககாவா என்ற விவசாயி 2011 ம் ஆண்டு முதல் ஜப்பானின் வடக்கு தீவான் பனி படர்ந்த டோகாச்சி பகுதியில் மாம்பழங்களை பயிர் செய்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் விளையும் ஒவ்வொரு மாம்பழத்தையும் தலா 230 டாலர்களுக்கு விற்பனை செய்து வருகிறார். 



இந்த மாம்பழங்களில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா? அதற்கும் அவரே பதில் சொல்லி உள்ளார். 62 வயதாகும் இவர் முதலில் பெட்ரோலிய கம்பெனி ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதில் ஆர்வமில்லாமல் வித்தியாசமாக  ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து, அதுவும் இயற்கை முறையில் செய்ய வேண்டும் என நினைத்துள்ளார். இதனால் தனது பண்ணையில் க்ளீன் ஹவுஸ் பண்ணை ஒன்றை அமைத்து, அதில் ரசாயன கலப்பு இல்லாமல் முற்றிலும் இயற்கையான முறையில் மாம்பழங்களை பயிர் செய்துள்ளார்.

டிசம்பர் மாதங்களில் வெளியில் மைனஸ் 8 டிகிரி செல்சியஸ் இருக்கும் போது கூட இவரது க்ரீன் ஹவுசிற்குள் 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும் இதனால் இவரால் அனைத்து சீசன்களிலும் மாம்பழங்களை விளைவிக்க முடிகிறது. ஒரு சீசனுக்கு சுமார் 5000 மாம்பழங்கள் வரை விளைவிக்கிறார். இவற்றை இவரே பேக் செய்து, விற்பனையும் செய்கிறார். அதனால் தான் இந்த மாம்பழங்கள் இத்தவை காஸ்ட்லி. 

இந்த மாம்பழங்களை விற்பனை செய்வதற்காக இவர் தனி இணையதளமே நடத்தி வருகிறாராம். அவரே எதிர்பாராத அளவிற்கு இதில் அமோக லாபம் கிடைத்து வருகிறது. இருந்தாலும் அவர் திருப்தி அடையாமல் இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என இறங்கி உள்ளார். இந்த மாம்பழங்களுக்கு இவர் பூச்சி மருந்து எதுவும் அடிப்பது கிடையாதாம். முற்றிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்படுவதால் இவற்றிற்கு ஜப்பான் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் டிமாண்ட் அதிகமாம்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்