டில்லி : ஒருவர் தனது வங்கி கணக்கிற்கு நாமினியாக முன்மொழியும் நபர்களின் எண்ணிக்கையை 4 பேர் வரை உயர்த்தும் புதிய வங்கி சட்ட மசோதாவிற்கு லோக்சபாவில் நேற்று (டிசம்பர் 03) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கூட்டத் தொடரின் 7வது நாளான நேற்று, வங்கி நடைமுறை சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் தங்களின் வாரிசுதாரரை மாற்ற முடியாததால் கணக்குகள் முடங்குவதை தடுப்பதற்காக புதிய டெபாசிட் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரும் வகையில் சில மாற்றங்கள் கொண்டு வருவதற்காக இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்ட மசோதாவின் படி வங்கியில் பணம் டெபாசிட் செய்பவர் தங்களின் வாரிசுதாரராக ஒரே நேரத்திலோ அல்லது சிறிது காலத்திற்கு பிறகோ கூடுதலாக சிலரை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு பங்குதாரராகவோ அல்லது மொத்த பணத்திற்குமான வாரிசுதாரராகவோ நியமிக்க முடியும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இந்த சட்ட மசோதா தாக்கலின் போது பேசிய நிர்மலா சீதாராமன், 2014ம் ஆண்டு முதல் வங்கி கணக்குகளில் நம்பத்தன்மையை காக்க வேண்டும் என்பதில் அரசும், மத்திய ரிசர்வ் வங்கியும் மிகவும் கவனமுடன் செயல்பட்டு வருகின்றன. வங்கிகளின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஒழுங்குமுறை இணக்க பணிகளை முறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் இந்த பணிகளை ஒவ்வொரு 15 ம் தேதி மற்றும் மாதத்தில் கடைசி நாளிலும் செயல்படுத்தவும் இந்த புதிய சட்ட மசோதா வழி வகை செய்கிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}