"இப்படியே போனா அப்படியே போய்ரலாம்ல"..  காரைக் கொண்டு போய் கடலில் இறக்கிய ஜிபிஎஸ்!

May 06, 2023,09:29 AM IST
ஹவாய்: அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கைலுவா கோனா பகுதியில், இரண்டு சுற்றுலாப் பயணிகள், ஜிபிஎஸ் காட்டிய வழியைப் பின்பற்றி, கடைசியில்,கடலில் போய் விழுந்துள்ளனர். அவர்களது ஜிபிஎஸ் வழிகாட்டி தவறான பாதையை காட்டி அவர்களை கடலில் போய் தள்ளிவிட்டுள்ளது.

கடலில் விழுந்த காரில் இருந்த அந்த  இரு சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூரைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் பைபர் போட்டில் போய் மீட்டு கரைக்குக்கொண்டு வந்துள்ளனர். இந்த கலகலப்பான சம்பவத்தை கிறிஸ்டி ஹட்சின்சன் என்பவர் வீடியோவாகப் பதிவு செய்து போட்டுள்ளார்.



இதுகுறித்து கிறிஸ்டி கூறுகையில், நான் மழை பெய்து கொண்டிருந்ததால் அது நிற்பதற்காக காத்திருந்தேன். அப்போது ஒரு கார் மிதமான வேகத்தில் வந்து கொண்டிருந்தது. அந்தக் கார் நேராக கடலை நோக்கிப் போனது. எனக்குக் குழப்பமாகி விட்டது. ஆனால் காரில் இருந்தவர்கள் முகத்தில் கொஞ்சம்கூட  சலனமே இல்லை. மாறாக சிரித்தபடி இருந்தனர். க டலில் போய் கார் விழுந்தும் கூட அவர்கள் அச்சமடையவில்லை. மாறாக காரை ஓட்டி வந்த பெண் சிரித்தபடி சீட்டிலேயே அமர்ந்திருந்தார்.

காரில் இருந்த இருவரும் சுற்றுலாப் பயணிகள், சகோதரிகளும் கூட.  அதில் ஒரு பெண்ணின் கணவர் உள்பட அவர்களுடன் வந்தவர்கள் அருகாமையில்தான் படகோட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். சம்பவம் குறித்து அறிந்ததும் அவர்களும் ஓடி வந்து இருவரையும் மீட்கும் முயற்சிகளில் உதவினர்.

மன்டா ரே ஸ்னோர்கல் என்ற சுற்றுலா நிறுவனத்தின் இருப்பிடத்திற்குப் போவதற்காக அந்த இரு சகோதரிகளும் காரில் வந்துள்ளனர். அவர்களது ஜிபிஎஸ் வழிகாட்டி தவறாக வழி நடத்தி கடலில் போய் கொண்டு விட்டு விட்டது. 

ஆனால் ஜிபிஎஸ் எப்படி இப்படி தவறாக வழிகாட்டும் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இவ்வளவு மோசமாக வழிகாட்டிய அந்த ஜிபிஎஸ் மேப் எது என்றும் பலர் கேட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்