- தேவி
மழை மேகங்களை சிலிர்க்க வைத்து
காற்றினை உறையை வைத்து
மலைகளை உருக வைத்து
வானத்திலிருந்து முத்தங்களாக வெளி வருகின்றாய்!
மலரினை ரசிக்க வைத்து
முத்துக்களாய் பிறப்பு எடுத்து
இயற்கையாய் யுத்தம் செய்து
மனதினுள் காதல் மழையை
பொழிய வைக்கின்றாய்!
இமைகளில் தவழ்ந்து
இதயத்தை இசையாக்கி
காதலர்களின் கவிதையாக திகழ்ந்து
உன்னில் நினைந்தவரை
தன்னில் பூக்க வைக்கின்றாய்.....
மௌனங்களாக வந்து
புது பாஷையினை காதலிக்க வைத்து
குயிலினை கூவச் சொல்லி
மயிலினை ஆட வைத்து
மனதினுள் புதிய ராகத்தை
பாட வைக்கின்றாய்!
பார்வையின் தேடலாக
மனதினை உறைய வைத்து
உன்னைத் தீண்டும் நொடியில்
மேகத்தினுள் புதைய வைத்து
பார்வைகளை பாஷையாக்கி
இமைகளை வீணையாக்குகின்றாய்!
மௌனங்களே ஓசையாகி
தென்றலாக மலர்ந்து உதிர்ந்து
உன் வசம் அடைந்து
நொடியில் சுவாசிக்க மறந்து
உன்னை நேசித்து
பூத்துயிர் பெற வைக்கின்றாய்!
வானத்தின் மடியில் பிறந்து
மேகங்களை இதழ்களால் தள்ளிக் கொண்டு
வானவில்லின் காதலை கண்களில் தூவிக்கொண்டு
இதயத்தை நொடிப் பொழுதில் திருடுகின்றாய்!
வாழ்க மழையே.. வீழ்க தினமே!
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}