வானத்திலிருந்து வீழும் முத்தங்கள்.. மனதுக்குள் பெய்யும்.. காதல் மழை!

Feb 26, 2025,02:57 PM IST

- தேவி


மழை மேகங்களை சிலிர்க்க வைத்து

காற்றினை உறையை வைத்து 

மலைகளை உருக வைத்து 

வானத்திலிருந்து முத்தங்களாக வெளி வருகின்றாய்!


மலரினை ரசிக்க வைத்து 

முத்துக்களாய் பிறப்பு எடுத்து 

இயற்கையாய்  யுத்தம் செய்து

மனதினுள் காதல் மழையை

பொழிய வைக்கின்றாய்!




இமைகளில் தவழ்ந்து 

இதயத்தை இசையாக்கி 

காதலர்களின் கவிதையாக திகழ்ந்து 

உன்னில் நினைந்தவரை 

தன்னில் பூக்க வைக்கின்றாய்.....


மௌனங்களாக வந்து 

புது பாஷையினை காதலிக்க வைத்து

குயிலினை கூவச் சொல்லி

மயிலினை ஆட வைத்து 

மனதினுள்  புதிய ராகத்தை 

பாட வைக்கின்றாய்!


பார்வையின் தேடலாக 

மனதினை உறைய வைத்து

உன்னைத் தீண்டும் நொடியில் 

மேகத்தினுள் புதைய வைத்து 

பார்வைகளை பாஷையாக்கி

இமைகளை வீணையாக்குகின்றாய்!

 

மௌனங்களே ஓசையாகி 

தென்றலாக மலர்ந்து உதிர்ந்து 

உன் வசம் அடைந்து 

நொடியில் சுவாசிக்க மறந்து 

உன்னை நேசித்து 

பூத்துயிர்  பெற வைக்கின்றாய்!


வானத்தின் மடியில் பிறந்து 

மேகங்களை இதழ்களால்  தள்ளிக் கொண்டு 

வானவில்லின் காதலை கண்களில் தூவிக்கொண்டு 

இதயத்தை நொடிப் பொழுதில்  திருடுகின்றாய்!


வாழ்க மழையே.. வீழ்க தினமே!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை பூமி பூஜையை அனுமதிக்கக் கூடாது.. பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் கோரிக்கை

news

சூலூர் சிறுமி கொலை வழக்கு.. கைது செய்யப்பட்ட 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

news

இனி நமக்குள் பிரிவில்லை.. இது எஃகு கோட்டை.. யாராலும் தகர்க்க முடியாது: அதிமுக ஐடி விங்

news

டெல்லியில் முதல்வர் சி. ஜோசப் விஜய்.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடியை சந்திக்கிறார்

news

சங்கத் தமிழ் இலக்கியப் பூங்காவின் திருப்பூர் திருவிழா.. முனைவர் கோ. லதாவுக்கு கெளரவம்

news

Creative writers: அரசுப் பள்ளி மாணவிகளின் இலக்கிய சாதனை!

news

சிந்தனைச் சிதறல்.. தீர்வுகள் இல்லாத பிரச்சனைகளே இல்லை!

news

மகிழ்வோம் தினம் தினம்.. வெற்றி என்றும் நிரந்தரம்!

news

அழகன்.. முருகனின் அருளைத் தரும் வைகாசி விசாகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்