வானத்திலிருந்து வீழும் முத்தங்கள்.. மனதுக்குள் பெய்யும்.. காதல் மழை!

Feb 26, 2025,02:57 PM IST

- தேவி


மழை மேகங்களை சிலிர்க்க வைத்து

காற்றினை உறையை வைத்து 

மலைகளை உருக வைத்து 

வானத்திலிருந்து முத்தங்களாக வெளி வருகின்றாய்!


மலரினை ரசிக்க வைத்து 

முத்துக்களாய் பிறப்பு எடுத்து 

இயற்கையாய்  யுத்தம் செய்து

மனதினுள் காதல் மழையை

பொழிய வைக்கின்றாய்!




இமைகளில் தவழ்ந்து 

இதயத்தை இசையாக்கி 

காதலர்களின் கவிதையாக திகழ்ந்து 

உன்னில் நினைந்தவரை 

தன்னில் பூக்க வைக்கின்றாய்.....


மௌனங்களாக வந்து 

புது பாஷையினை காதலிக்க வைத்து

குயிலினை கூவச் சொல்லி

மயிலினை ஆட வைத்து 

மனதினுள்  புதிய ராகத்தை 

பாட வைக்கின்றாய்!


பார்வையின் தேடலாக 

மனதினை உறைய வைத்து

உன்னைத் தீண்டும் நொடியில் 

மேகத்தினுள் புதைய வைத்து 

பார்வைகளை பாஷையாக்கி

இமைகளை வீணையாக்குகின்றாய்!

 

மௌனங்களே ஓசையாகி 

தென்றலாக மலர்ந்து உதிர்ந்து 

உன் வசம் அடைந்து 

நொடியில் சுவாசிக்க மறந்து 

உன்னை நேசித்து 

பூத்துயிர்  பெற வைக்கின்றாய்!


வானத்தின் மடியில் பிறந்து 

மேகங்களை இதழ்களால்  தள்ளிக் கொண்டு 

வானவில்லின் காதலை கண்களில் தூவிக்கொண்டு 

இதயத்தை நொடிப் பொழுதில்  திருடுகின்றாய்!


வாழ்க மழையே.. வீழ்க தினமே!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்