- தேவி
மழை மேகங்களை சிலிர்க்க வைத்து
காற்றினை உறையை வைத்து
மலைகளை உருக வைத்து
வானத்திலிருந்து முத்தங்களாக வெளி வருகின்றாய்!
மலரினை ரசிக்க வைத்து
முத்துக்களாய் பிறப்பு எடுத்து
இயற்கையாய் யுத்தம் செய்து
மனதினுள் காதல் மழையை
பொழிய வைக்கின்றாய்!

இமைகளில் தவழ்ந்து
இதயத்தை இசையாக்கி
காதலர்களின் கவிதையாக திகழ்ந்து
உன்னில் நினைந்தவரை
தன்னில் பூக்க வைக்கின்றாய்.....
மௌனங்களாக வந்து
புது பாஷையினை காதலிக்க வைத்து
குயிலினை கூவச் சொல்லி
மயிலினை ஆட வைத்து
மனதினுள் புதிய ராகத்தை
பாட வைக்கின்றாய்!
பார்வையின் தேடலாக
மனதினை உறைய வைத்து
உன்னைத் தீண்டும் நொடியில்
மேகத்தினுள் புதைய வைத்து
பார்வைகளை பாஷையாக்கி
இமைகளை வீணையாக்குகின்றாய்!
மௌனங்களே ஓசையாகி
தென்றலாக மலர்ந்து உதிர்ந்து
உன் வசம் அடைந்து
நொடியில் சுவாசிக்க மறந்து
உன்னை நேசித்து
பூத்துயிர் பெற வைக்கின்றாய்!
வானத்தின் மடியில் பிறந்து
மேகங்களை இதழ்களால் தள்ளிக் கொண்டு
வானவில்லின் காதலை கண்களில் தூவிக்கொண்டு
இதயத்தை நொடிப் பொழுதில் திருடுகின்றாய்!
வாழ்க மழையே.. வீழ்க தினமே!
தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)
கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 15, 2025... இன்று நினைத்தது கைகூடும் நாள்
பீகார் தேர்தல்.. கருத்துக் கணிப்புகளை பொய்ப்பித்த Results.. வியத்தகு வெற்றி - ஒரு பார்வை!
தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்
ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு
அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல,உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது:முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
இன்றைக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? - இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
{{comments.comment}}