- தேவி
மழை மேகங்களை சிலிர்க்க வைத்து
காற்றினை உறையை வைத்து
மலைகளை உருக வைத்து
வானத்திலிருந்து முத்தங்களாக வெளி வருகின்றாய்!
மலரினை ரசிக்க வைத்து
முத்துக்களாய் பிறப்பு எடுத்து
இயற்கையாய் யுத்தம் செய்து
மனதினுள் காதல் மழையை
பொழிய வைக்கின்றாய்!

இமைகளில் தவழ்ந்து
இதயத்தை இசையாக்கி
காதலர்களின் கவிதையாக திகழ்ந்து
உன்னில் நினைந்தவரை
தன்னில் பூக்க வைக்கின்றாய்.....
மௌனங்களாக வந்து
புது பாஷையினை காதலிக்க வைத்து
குயிலினை கூவச் சொல்லி
மயிலினை ஆட வைத்து
மனதினுள் புதிய ராகத்தை
பாட வைக்கின்றாய்!
பார்வையின் தேடலாக
மனதினை உறைய வைத்து
உன்னைத் தீண்டும் நொடியில்
மேகத்தினுள் புதைய வைத்து
பார்வைகளை பாஷையாக்கி
இமைகளை வீணையாக்குகின்றாய்!
மௌனங்களே ஓசையாகி
தென்றலாக மலர்ந்து உதிர்ந்து
உன் வசம் அடைந்து
நொடியில் சுவாசிக்க மறந்து
உன்னை நேசித்து
பூத்துயிர் பெற வைக்கின்றாய்!
வானத்தின் மடியில் பிறந்து
மேகங்களை இதழ்களால் தள்ளிக் கொண்டு
வானவில்லின் காதலை கண்களில் தூவிக்கொண்டு
இதயத்தை நொடிப் பொழுதில் திருடுகின்றாய்!
வாழ்க மழையே.. வீழ்க தினமே!
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!
நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!
புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்
10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?
எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி
74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!
தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)
கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!
{{comments.comment}}