- தேவி
மழை மேகங்களை சிலிர்க்க வைத்து
காற்றினை உறையை வைத்து
மலைகளை உருக வைத்து
வானத்திலிருந்து முத்தங்களாக வெளி வருகின்றாய்!
மலரினை ரசிக்க வைத்து
முத்துக்களாய் பிறப்பு எடுத்து
இயற்கையாய் யுத்தம் செய்து
மனதினுள் காதல் மழையை
பொழிய வைக்கின்றாய்!

இமைகளில் தவழ்ந்து
இதயத்தை இசையாக்கி
காதலர்களின் கவிதையாக திகழ்ந்து
உன்னில் நினைந்தவரை
தன்னில் பூக்க வைக்கின்றாய்.....
மௌனங்களாக வந்து
புது பாஷையினை காதலிக்க வைத்து
குயிலினை கூவச் சொல்லி
மயிலினை ஆட வைத்து
மனதினுள் புதிய ராகத்தை
பாட வைக்கின்றாய்!
பார்வையின் தேடலாக
மனதினை உறைய வைத்து
உன்னைத் தீண்டும் நொடியில்
மேகத்தினுள் புதைய வைத்து
பார்வைகளை பாஷையாக்கி
இமைகளை வீணையாக்குகின்றாய்!
மௌனங்களே ஓசையாகி
தென்றலாக மலர்ந்து உதிர்ந்து
உன் வசம் அடைந்து
நொடியில் சுவாசிக்க மறந்து
உன்னை நேசித்து
பூத்துயிர் பெற வைக்கின்றாய்!
வானத்தின் மடியில் பிறந்து
மேகங்களை இதழ்களால் தள்ளிக் கொண்டு
வானவில்லின் காதலை கண்களில் தூவிக்கொண்டு
இதயத்தை நொடிப் பொழுதில் திருடுகின்றாய்!
வாழ்க மழையே.. வீழ்க தினமே!
ஒவ்வொரு குடும்பத்திற்கு கருணைத் தொகையாக ரூ10,000 வழங்கப்படும்:எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு
இயற்கையுடன் போராடி வருகிறார் தோழர் நல்லகண்ணு.. சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்
வேலூர் விஜய் கூட்டத்துக்கு அனுமதி கொடுப்பதில் தாமதமா?.. போலீஸ் தந்த விளக்கம்
ரயில் சேவை ரத்தால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது: கனிமொழி
இனி எண்ட ஸ்டேட் கேரளா இல்ல .. கேரளம்.. பெயர் மாற்றத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தென் தமிழகத்தில் நாளை இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்... எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை!
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்து ஆட்சி அமைத்தவர் ஜெயலலிதா: ஓ.பன்னீர்செல்வம்
யாரையும் காலி பண்ண வரவில்லை.. நல்ல விஷயங்களைச் செய்யவே வந்திருக்கிறேன்.. சிவகார்த்திகேயன்
{{comments.comment}}