வானத்திலிருந்து வீழும் முத்தங்கள்.. மனதுக்குள் பெய்யும்.. காதல் மழை!

Feb 26, 2025,02:57 PM IST

- தேவி


மழை மேகங்களை சிலிர்க்க வைத்து

காற்றினை உறையை வைத்து 

மலைகளை உருக வைத்து 

வானத்திலிருந்து முத்தங்களாக வெளி வருகின்றாய்!


மலரினை ரசிக்க வைத்து 

முத்துக்களாய் பிறப்பு எடுத்து 

இயற்கையாய்  யுத்தம் செய்து

மனதினுள் காதல் மழையை

பொழிய வைக்கின்றாய்!




இமைகளில் தவழ்ந்து 

இதயத்தை இசையாக்கி 

காதலர்களின் கவிதையாக திகழ்ந்து 

உன்னில் நினைந்தவரை 

தன்னில் பூக்க வைக்கின்றாய்.....


மௌனங்களாக வந்து 

புது பாஷையினை காதலிக்க வைத்து

குயிலினை கூவச் சொல்லி

மயிலினை ஆட வைத்து 

மனதினுள்  புதிய ராகத்தை 

பாட வைக்கின்றாய்!


பார்வையின் தேடலாக 

மனதினை உறைய வைத்து

உன்னைத் தீண்டும் நொடியில் 

மேகத்தினுள் புதைய வைத்து 

பார்வைகளை பாஷையாக்கி

இமைகளை வீணையாக்குகின்றாய்!

 

மௌனங்களே ஓசையாகி 

தென்றலாக மலர்ந்து உதிர்ந்து 

உன் வசம் அடைந்து 

நொடியில் சுவாசிக்க மறந்து 

உன்னை நேசித்து 

பூத்துயிர்  பெற வைக்கின்றாய்!


வானத்தின் மடியில் பிறந்து 

மேகங்களை இதழ்களால்  தள்ளிக் கொண்டு 

வானவில்லின் காதலை கண்களில் தூவிக்கொண்டு 

இதயத்தை நொடிப் பொழுதில்  திருடுகின்றாய்!


வாழ்க மழையே.. வீழ்க தினமே!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி

news

சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

news

"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை

news

விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு...விரைவில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

news

டெலிகிராம் தடைக்கு எதிராக வழக்கு: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து நிறுவனம் மனு!

news

டெலிகிராம் தடையால் 15 கோடி பயனாளர்கள் பாதிப்பு.. CEO பவெல் துரோவ் அதிருப்தி

news

பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு எதிர்ப்பு...ஜூன் 22-ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

news

கலையின் ஹைக்கூ கவிதைகள்!

news

ஆலோலம் பாட்டுக் கேட்குதே

அதிகம் பார்க்கும் செய்திகள்