- கவிஞர் பொ. கிருபாவதி, சென்னை
எந்தக் குழந்தையும் நல்லகுழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அவன் நல்லவனாவதும் தீயவனாவதும்
அன்னை வளர்ப்பினிலே! என்றான் கவிஞனொருவன்
ஆனால் இன்று!
நல்லவனாவதும் தீயவனாவதும் திறன் பேசி கைகளிலே !
சோறுண்ணவும் அலைபேசி
தூங்கிடவும் திறன்பேசி
பொழுதுபோக்கிட கைபேசி
அறிவை வளர்த்திட அலைபேசி என
அலைபேசி கடலில் மூழ்கியே அழிகிறதே
இச்சமுதாயம்!

ஆயிரம் கனவுகளுடன் பெற்ற பிள்ளை
அறிவுரைகளை ஏற்க மறுத்து
நம்மை அலட்சியப்படுத்திட
வாசமில்லா மலர்களாய்
வெப்பமில்லா சூரியனாய்
குளிர்ச்சியில்லா சந்திரனாய்
தென்றலில்லா காற்றாய்
மழையில்லா மேகங்களாய்
வாழ்க்கையை செயற்கையாய் வாழ்கிறதே!
தாமரை இலை நீரென வாழ்கிறதே
இயந்திரங்களோடு இயந்திரமான வாழ்க்கை
அலைபேசி எனும் அரக்கனால்
எதிர்காலச்சமுதாயமே கேள்விக்குறியானதே?
எல்லாம் அறிந்தும் ஏதும் செய்ய இயலா நிலையில் நாம்
நாம் கூறும் எதையும் ஏற்க இயலாநிலையில் இன்றைய சமுதாயம்
சுமக்கும் போதும் பெற்றெடுத்தபோதும்
பலபல கனவுகளுடன்
குழ்நதையை உருவாக்க நினைத்தோம்
எல்லாமே கானல்நீராய் மாறிட
துடுப்பில்லா படகாக
காற்றில் தடுமாறும் கொடியாக
இசையில்லா வீணையாக
இன்றைய குழந்தைகள்
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிந்துவிட்டோம்
அதை மீட்டிட வரியொன்று கூறாயோ சிவசக்தி!
Pralay Missile: ஏவுகணைகளின் பிறப்பிடம் ஆகிறதா இந்தியா?.. பிரமிக்க வைக்கும் பிரளய்!
பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
{{comments.comment}}