இன்று ஒரு கவிதை.. விவசாயி!

Feb 25, 2025,02:05 PM IST

- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி

                      

எனை படைத்தவன் இறைவன்... என்றால் ...!!!

எனக்கு உணவு படைப்பவன்  நீயும்.. எனக்கு இறைவனே...!!!


உணவின்றி உயிர் வாழ முடியுமா..?

உயிர் கொடுப்பவன் நீயே அன்றோ..!!!

உணவளிக்கும் உன் உழைப்பே ... 

உயர்ந்தது அன்றோ அனைத்திற்கும்..!!!


உன் நாட்டின் விடுதலைக்கு ...

உழைத்தவர் மட்டும், தியாகி அல்ல.!!! 

உலக மக்களின் உணவிற்காக ...

உழைக்கும் நீயும் தியாகி தான்...!!!


உணவிற்காக ஊனினை உருக்கி...

உழைக்கும் நீ ..!!! 

உயிரை மய்த்துக் கொள்கிறாய்...

உன் வறுமையால்..!!!


உன்னை சுரண்டி தின்னும்...

உன் முதலாளி மட்டும்...!!!

உல்லாச உலகில் ... 

உற்சாகமாய்...வாழ்கிறான்...!!!




பணம் ஈட்டி வாழ , யாவர்க்கும் ...

பல்லாயிரம் தொழில் உண்டு...!!!

பசிக்கின்ற வயிற்றுக்கு உணவளிக்க... பவித்திரமான உன்  தொழில் மட்டுமே.!!!


நீயோ...!!!  உழைத்து.. உழைத்து...

நீர்த்து கருத்து கிடக்கிறாய்...!!!

நின் உழைப்பினை உறிஞ்சுவோன்...

நின்று ,தின்று, பருத்து, கிடக்கிறான்...!!!


மண்ணிலே போட்ட விதை...

மறுபிறப்பு எடுப்பது போல...!!!

உலகு  உய்ய... உன் மறுபிறப்பு...

உலகிற்கு  காலத்தின் கட்டாயம்..!!!


உன் வாழ்வில் ஒளி வீசட்டும்..!!

உன் வீட்டில் மகிழ்ச்சி பொங்கட்டும்..!!

உன் வாழ்வு என்றும் வளமாகட்டும்..!!

உன்னை இவ்வுலகம் போற்றட்டும்..!!


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்

news

ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?

news

IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

news

Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

news

தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா

news

இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்

news

ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்