- சிவ.ஆ. மலர்விழி ராஜா
வாடி நின்ற மக்களுக்கு...
தேடி வந்து உயிர் கொடுத்து....
தடம் பதித்து தளிர் துளிர்க்க .....
இனம் செழிக்க...
இறைவன் அளித்த அதிர்ஷ்டம் .....
பட்டங்கள் பெற்ற பின்பும் .....
பரிதவிக்கும் இளைஞனுக்கு.....
சட்டங்கள் எதுவும் இன்றி ....
உயர்பதவி கிடைத்துவிட்டால்.....
அள்ளித் தரும் ஆனந்தம்.....

இன்பங்கள் கூடிவரும் அதிர்ஷ்டம் ......
பேரிடர் காலங்களில்.....
முகம் மறைக்கும் நீரினிலே....
கரம் கொடுக்க யாருமின்றி.....
தவிக்கின்ற நொடியினிலே.....
சிறைபிடிக்க வந்தது போல் ....
மரம் பற்ற கிடைத்து விட்டால்.....
மனம் மகிழும் நிலை அதுவே அதிர்ஷ்டம்.....!
தவறி நாமும் தவறு செய்தால் ......
தயக்கமின்றி தடுத்திடவே......
உண்மையான நட்பு மட்டும் .....
உரிமையுடன் கிடைத்துவிட்டால்.....
அதுவும் கூட அதிர்ஷ்டம்.....!
காத்திருக்கும் கன்னியவள்......
கரம் பிடித்து வந்த துணை....
கலங்கிடாமல் காலம் வரை ....
காத்து நின்றாள்.....
கடவுள் தந்த வாழ்க்கை அது அதிர்ஷ்டம் ..
அழுத நின்ற பிள்ளைக்கு அமுதாக பால் கொடுத்த....
அன்னை தந்தை காட்சி தரும் அவனியிலே.....
வாழ்வதுவும் பேரதிர்ஷ்டம் ......!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.. தவறி வந்த ஒரு வார்த்தை.. வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!
என்னைப் பற்றி அருவருப்பாக கீழ்த்தரமாக பேசுவதை நிறுத்துங்கள் - நடிகை திரிஷா
சொந்த நாட்டில் அகதிகளாகும் மீனவர்கள்.. இலங்கையின் அராஜகத்தை அடக்கப்போவது யார்?: தவெக தலைவர் விஜய்
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நீதிமன்றத்திலேயே நீதிக்கே பாதுகாப்பு இல்லையா? நயினார் நாகேந்திரன் கேள்வி
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் அதிரடி: தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!
மரத்திலேயே விளையும் விட்டமின் மாத்திரை.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 5)
பிப்ரவரி 21ம் தேதி 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு
மீண்டும் இந்தியாவைச் சந்திக்குமா பாகிஸ்தான்.. செமி பைனலா அல்லது இறுதிப் போட்டியா?
{{comments.comment}}