- சிவ.ஆ. மலர்விழி ராஜா
வாடி நின்ற மக்களுக்கு...
தேடி வந்து உயிர் கொடுத்து....
தடம் பதித்து தளிர் துளிர்க்க .....
இனம் செழிக்க...
இறைவன் அளித்த அதிர்ஷ்டம் .....
பட்டங்கள் பெற்ற பின்பும் .....
பரிதவிக்கும் இளைஞனுக்கு.....
சட்டங்கள் எதுவும் இன்றி ....
உயர்பதவி கிடைத்துவிட்டால்.....
அள்ளித் தரும் ஆனந்தம்.....

இன்பங்கள் கூடிவரும் அதிர்ஷ்டம் ......
பேரிடர் காலங்களில்.....
முகம் மறைக்கும் நீரினிலே....
கரம் கொடுக்க யாருமின்றி.....
தவிக்கின்ற நொடியினிலே.....
சிறைபிடிக்க வந்தது போல் ....
மரம் பற்ற கிடைத்து விட்டால்.....
மனம் மகிழும் நிலை அதுவே அதிர்ஷ்டம்.....!
தவறி நாமும் தவறு செய்தால் ......
தயக்கமின்றி தடுத்திடவே......
உண்மையான நட்பு மட்டும் .....
உரிமையுடன் கிடைத்துவிட்டால்.....
அதுவும் கூட அதிர்ஷ்டம்.....!
காத்திருக்கும் கன்னியவள்......
கரம் பிடித்து வந்த துணை....
கலங்கிடாமல் காலம் வரை ....
காத்து நின்றாள்.....
கடவுள் தந்த வாழ்க்கை அது அதிர்ஷ்டம் ..
அழுத நின்ற பிள்ளைக்கு அமுதாக பால் கொடுத்த....
அன்னை தந்தை காட்சி தரும் அவனியிலே.....
வாழ்வதுவும் பேரதிர்ஷ்டம் ......!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
சேப்பாக்கம் இனியும் சிஎஸ்கே கோட்டை இல்லை.. அபார வெற்றியைத் தட்டிய பஞ்சாப் கிங்ஸ்!
Sarfaraz Khan: சர்பராஸ் கான் அதிரடி கேமியோ.. ஜஸ்ட் 12 பந்துகளில் பட்டையைக் கிளப்பிய 32 ரன்கள்!
Ayush Mhatre.. ஐபிஎல் வரலாற்றிலேயே.. 19 வயசுக்கு முன்னாடியே.. புதிய வரலாறு படைத்த ஆயுஷ் மாத்ரே!
Ayush Mhatre: கட்டையைப் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸை.. தூக்கி செங்குத்தாக நிறுத்திய ஆயுஷ் மாத்ரே!
பாஜக வேட்பாளர்கள்: மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி.. அண்ணாமலை போட்டியிடவில்லை!
ஸ்ரீபெரும்புதூரில் செல்வப் பெருந்தகை.. பென்னாகரத்தில் தமிழ்க்குமரன்.. காங். வேட்பாளர் பட்டியல்
மனிதனை தாண்டும் நுண்ணறிவு.. Super Intelligence மற்றும் மனிதன்–AI இணைவு (9)
இது என் கதை.. உங்களது அனுபவத்தையும் பகிருங்கள் தோழியரே!
அது யாருக்கு சொந்தம்..? (ஒரு பக்க சிறுகதை)
{{comments.comment}}