அதிர்ஷ்டம்

Nov 15, 2025,12:56 PM IST

- சிவ.ஆ. மலர்விழி ராஜா


வாடி நின்ற மக்களுக்கு...

தேடி வந்து உயிர் கொடுத்து....

தடம் பதித்து தளிர் துளிர்க்க .....

இனம் செழிக்க...

இறைவன் அளித்த அதிர்ஷ்டம் .....

பட்டங்கள் பெற்ற பின்பும் .....

பரிதவிக்கும் இளைஞனுக்கு.....

சட்டங்கள் எதுவும் இன்றி ....

உயர்பதவி கிடைத்துவிட்டால்.....

அள்ளித் தரும் ஆனந்தம்.....




இன்பங்கள் கூடிவரும் அதிர்ஷ்டம் ......

பேரிடர் காலங்களில்.....

முகம் மறைக்கும் நீரினிலே....

கரம் கொடுக்க யாருமின்றி.....

தவிக்கின்ற நொடியினிலே.....

சிறைபிடிக்க வந்தது போல் ....

மரம் பற்ற கிடைத்து விட்டால்.....

மனம் மகிழும் நிலை அதுவே அதிர்ஷ்டம்.....!

தவறி  நாமும்  தவறு செய்தால் ......

தயக்கமின்றி தடுத்திடவே......

உண்மையான நட்பு மட்டும் .....

உரிமையுடன் கிடைத்துவிட்டால்.....

அதுவும் கூட அதிர்ஷ்டம்.....!

காத்திருக்கும் கன்னியவள்......

கரம் பிடித்து வந்த துணை....

கலங்கிடாமல் காலம் வரை ....

காத்து நின்றாள்.....

கடவுள் தந்த வாழ்க்கை அது அதிர்ஷ்டம் ..

அழுத நின்ற பிள்ளைக்கு அமுதாக பால் கொடுத்த....

அன்னை தந்தை காட்சி தரும் அவனியிலே.....

வாழ்வதுவும் பேரதிர்ஷ்டம் ......!


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?

news

அத்துணை அழகா புன்னகை.... ?

news

எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி

news

குழந்தைகளைக் கொண்டாடுவோம்.. வெறும் பேச்சளவில் இருந்தால் எப்படி...??

news

பெண்கள் கவலைப்படுவதை அல்லாஹ் ஏன் விரும்புவதில்லை?

news

அதிர்ஷ்டம்

news

விஷால் தொடர்ந்த அப்பீல் மனு.. விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் மறுப்பு.. வேறு பெஞ்சுக்கு பரிந்துரை

news

74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!

news

Gold price:அதிரடியாக குறைந்தது தங்கம் விலை...இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1,520 குறைவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்