- சிவ.ஆ. மலர்விழி ராஜா
வாடி நின்ற மக்களுக்கு...
தேடி வந்து உயிர் கொடுத்து....
தடம் பதித்து தளிர் துளிர்க்க .....
இனம் செழிக்க...
இறைவன் அளித்த அதிர்ஷ்டம் .....
பட்டங்கள் பெற்ற பின்பும் .....
பரிதவிக்கும் இளைஞனுக்கு.....
சட்டங்கள் எதுவும் இன்றி ....
உயர்பதவி கிடைத்துவிட்டால்.....
அள்ளித் தரும் ஆனந்தம்.....

இன்பங்கள் கூடிவரும் அதிர்ஷ்டம் ......
பேரிடர் காலங்களில்.....
முகம் மறைக்கும் நீரினிலே....
கரம் கொடுக்க யாருமின்றி.....
தவிக்கின்ற நொடியினிலே.....
சிறைபிடிக்க வந்தது போல் ....
மரம் பற்ற கிடைத்து விட்டால்.....
மனம் மகிழும் நிலை அதுவே அதிர்ஷ்டம்.....!
தவறி நாமும் தவறு செய்தால் ......
தயக்கமின்றி தடுத்திடவே......
உண்மையான நட்பு மட்டும் .....
உரிமையுடன் கிடைத்துவிட்டால்.....
அதுவும் கூட அதிர்ஷ்டம்.....!
காத்திருக்கும் கன்னியவள்......
கரம் பிடித்து வந்த துணை....
கலங்கிடாமல் காலம் வரை ....
காத்து நின்றாள்.....
கடவுள் தந்த வாழ்க்கை அது அதிர்ஷ்டம் ..
அழுத நின்ற பிள்ளைக்கு அமுதாக பால் கொடுத்த....
அன்னை தந்தை காட்சி தரும் அவனியிலே.....
வாழ்வதுவும் பேரதிர்ஷ்டம் ......!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
Pralay Missile: ஏவுகணைகளின் பிறப்பிடம் ஆகிறதா இந்தியா?.. பிரமிக்க வைக்கும் பிரளய்!
பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
{{comments.comment}}