-மலர்விழி ராஜா
தாத்தா எனும் சொல்லாலே.......
அனைத்தும் கேட்காமல்
தந்தார் தன் செயலாலே.....
தாத்தாவின் கதை கேட்டால்
எல்லாமே கவிதைகளாகும்
அன்பை கொடுத்து நற்பண்பை வளர்த்தார்.....
இன் முகம் காட்டி இதமாக......
பழங்கள் வாங்கி மடியில் கட்டி.....

குச்சி மிட்டாய் குருவி ரொட்டி......
இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றால்....
செல்லமாக திட்டி......
அன்புடன் அணைத்து
அறிவினை புகட்டி......
ஆனந்தமாக சேட்டைகள் அனைத்தையும்.....
ரசித்திருந்தாரே......
வாழும் முறையை தன்
செயலில் காட்டி.....
வாழ்க்கையை ருசிக்க வைத்தார்
ரசிப்புடன் பார்க்க வைத்தார்
வரம்புகள் இல்லா வழக்கை தீர்த்து......
அன்பே சிவமென
நம்பிக்கையூட்டி.....
அறநெறியுடனே வாழ செய்தவரே.......
நெற்றியில் திருநீறிடும் அழகு.....
நேர்த்தியான வெண்ணிற உடையில் ...
முறுக்கு மீசை பாரதியைப்போல்......
வீர நடையில் சிவாஜியை நினைவூட்டி.....
உள்ளத்தில் குழந்தையாக......
புன்னகை தவழ....
இரக்கத்தின் இயக்கமாக வாழ்ந்த மாமனிதர்.....
ஆம்.....!!
கருணையே வடிவான கடவுள்.....
கடவுளுக்கேப் பிடித்த ஒரு மனிதர்
தாத்தா...... !!!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.. தவறி வந்த ஒரு வார்த்தை.. வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!
என்னைப் பற்றி அருவருப்பாக கீழ்த்தரமாக பேசுவதை நிறுத்துங்கள் - நடிகை திரிஷா
சொந்த நாட்டில் அகதிகளாகும் மீனவர்கள்.. இலங்கையின் அராஜகத்தை அடக்கப்போவது யார்?: தவெக தலைவர் விஜய்
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நீதிமன்றத்திலேயே நீதிக்கே பாதுகாப்பு இல்லையா? நயினார் நாகேந்திரன் கேள்வி
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் அதிரடி: தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!
மரத்திலேயே விளையும் விட்டமின் மாத்திரை.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 5)
பிப்ரவரி 21ம் தேதி 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு
மீண்டும் இந்தியாவைச் சந்திக்குமா பாகிஸ்தான்.. செமி பைனலா அல்லது இறுதிப் போட்டியா?
{{comments.comment}}