-மலர்விழி ராஜா
தாத்தா எனும் சொல்லாலே.......
அனைத்தும் கேட்காமல்
தந்தார் தன் செயலாலே.....
தாத்தாவின் கதை கேட்டால்
எல்லாமே கவிதைகளாகும்
அன்பை கொடுத்து நற்பண்பை வளர்த்தார்.....
இன் முகம் காட்டி இதமாக......
பழங்கள் வாங்கி மடியில் கட்டி.....

குச்சி மிட்டாய் குருவி ரொட்டி......
இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றால்....
செல்லமாக திட்டி......
அன்புடன் அணைத்து
அறிவினை புகட்டி......
ஆனந்தமாக சேட்டைகள் அனைத்தையும்.....
ரசித்திருந்தாரே......
வாழும் முறையை தன்
செயலில் காட்டி.....
வாழ்க்கையை ருசிக்க வைத்தார்
ரசிப்புடன் பார்க்க வைத்தார்
வரம்புகள் இல்லா வழக்கை தீர்த்து......
அன்பே சிவமென
நம்பிக்கையூட்டி.....
அறநெறியுடனே வாழ செய்தவரே.......
நெற்றியில் திருநீறிடும் அழகு.....
நேர்த்தியான வெண்ணிற உடையில் ...
முறுக்கு மீசை பாரதியைப்போல்......
வீர நடையில் சிவாஜியை நினைவூட்டி.....
உள்ளத்தில் குழந்தையாக......
புன்னகை தவழ....
இரக்கத்தின் இயக்கமாக வாழ்ந்த மாமனிதர்.....
ஆம்.....!!
கருணையே வடிவான கடவுள்.....
கடவுளுக்கேப் பிடித்த ஒரு மனிதர்
தாத்தா...... !!!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
தாத்தா (கவிதை)
கோல்டன் பீகாக் விருது போட்டியில் சிவகார்த்திகேயனின் அமரன்.. கமல்ஹாசன் பெருமிதம்
{{comments.comment}}