தாத்தா (கவிதை)

Nov 08, 2025,02:12 PM IST

-மலர்விழி ராஜா


தாத்தா எனும் சொல்லாலே.......

அனைத்தும் கேட்காமல் 

தந்தார் தன் செயலாலே.....

தாத்தாவின் கதை கேட்டால்

எல்லாமே கவிதைகளாகும்

அன்பை கொடுத்து நற்பண்பை வளர்த்தார்.....

இன் முகம் காட்டி இதமாக......

பழங்கள் வாங்கி மடியில் கட்டி.....




குச்சி மிட்டாய்  குருவி ரொட்டி......

இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றால்....

செல்லமாக திட்டி......

அன்புடன் அணைத்து 

அறிவினை புகட்டி......

ஆனந்தமாக சேட்டைகள் அனைத்தையும்.....

ரசித்திருந்தாரே......

வாழும் முறையை தன் 

செயலில் காட்டி.....

வாழ்க்கையை ருசிக்க வைத்தார்

ரசிப்புடன் பார்க்க வைத்தார்

வரம்புகள் இல்லா வழக்கை தீர்த்து......

அன்பே சிவமென

நம்பிக்கையூட்டி.....

அறநெறியுடனே வாழ செய்தவரே.......

நெற்றியில் திருநீறிடும் அழகு.....

நேர்த்தியான வெண்ணிற உடையில் ...

முறுக்கு மீசை பாரதியைப்போல்......

வீர நடையில் சிவாஜியை நினைவூட்டி.....

உள்ளத்தில் குழந்தையாக......

புன்னகை தவழ....

இரக்கத்தின் இயக்கமாக வாழ்ந்த மாமனிதர்.....

ஆம்.....!!

கருணையே வடிவான கடவுள்.....

கடவுளுக்கேப் பிடித்த ஒரு மனிதர்

தாத்தா...... !!!


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தினசரி 2 முறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்

news

"வீட்டிலிருந்தபடியே ஓபி சீட்": அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு

news

TET ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை: ஐகோர்ட் அதிரடி!

news

ஆரோக்கியா பால் மற்றும் தயிர் விலை திடீர் உயர்வு - நாளை முதல் அமல்!

news

அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் : முதல்வர் விஜய் உத்தரவு

news

கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை...அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

news

Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

news

பூமியில் புதைந்த பூலான்தேவி

news

Tamil Poem: புதிய விடியல்

அதிகம் பார்க்கும் செய்திகள்