-மலர்விழி ராஜா
தாத்தா எனும் சொல்லாலே.......
அனைத்தும் கேட்காமல்
தந்தார் தன் செயலாலே.....
தாத்தாவின் கதை கேட்டால்
எல்லாமே கவிதைகளாகும்
அன்பை கொடுத்து நற்பண்பை வளர்த்தார்.....
இன் முகம் காட்டி இதமாக......
பழங்கள் வாங்கி மடியில் கட்டி.....

குச்சி மிட்டாய் குருவி ரொட்டி......
இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றால்....
செல்லமாக திட்டி......
அன்புடன் அணைத்து
அறிவினை புகட்டி......
ஆனந்தமாக சேட்டைகள் அனைத்தையும்.....
ரசித்திருந்தாரே......
வாழும் முறையை தன்
செயலில் காட்டி.....
வாழ்க்கையை ருசிக்க வைத்தார்
ரசிப்புடன் பார்க்க வைத்தார்
வரம்புகள் இல்லா வழக்கை தீர்த்து......
அன்பே சிவமென
நம்பிக்கையூட்டி.....
அறநெறியுடனே வாழ செய்தவரே.......
நெற்றியில் திருநீறிடும் அழகு.....
நேர்த்தியான வெண்ணிற உடையில் ...
முறுக்கு மீசை பாரதியைப்போல்......
வீர நடையில் சிவாஜியை நினைவூட்டி.....
உள்ளத்தில் குழந்தையாக......
புன்னகை தவழ....
இரக்கத்தின் இயக்கமாக வாழ்ந்த மாமனிதர்.....
ஆம்.....!!
கருணையே வடிவான கடவுள்.....
கடவுளுக்கேப் பிடித்த ஒரு மனிதர்
தாத்தா...... !!!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
Pralay Missile: ஏவுகணைகளின் பிறப்பிடம் ஆகிறதா இந்தியா?.. பிரமிக்க வைக்கும் பிரளய்!
பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
{{comments.comment}}