தாத்தா (கவிதை)

Nov 08, 2025,02:12 PM IST

-மலர்விழி ராஜா


தாத்தா எனும் சொல்லாலே.......

அனைத்தும் கேட்காமல் 

தந்தார் தன் செயலாலே.....

தாத்தாவின் கதை கேட்டால்

எல்லாமே கவிதைகளாகும்

அன்பை கொடுத்து நற்பண்பை வளர்த்தார்.....

இன் முகம் காட்டி இதமாக......

பழங்கள் வாங்கி மடியில் கட்டி.....




குச்சி மிட்டாய்  குருவி ரொட்டி......

இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றால்....

செல்லமாக திட்டி......

அன்புடன் அணைத்து 

அறிவினை புகட்டி......

ஆனந்தமாக சேட்டைகள் அனைத்தையும்.....

ரசித்திருந்தாரே......

வாழும் முறையை தன் 

செயலில் காட்டி.....

வாழ்க்கையை ருசிக்க வைத்தார்

ரசிப்புடன் பார்க்க வைத்தார்

வரம்புகள் இல்லா வழக்கை தீர்த்து......

அன்பே சிவமென

நம்பிக்கையூட்டி.....

அறநெறியுடனே வாழ செய்தவரே.......

நெற்றியில் திருநீறிடும் அழகு.....

நேர்த்தியான வெண்ணிற உடையில் ...

முறுக்கு மீசை பாரதியைப்போல்......

வீர நடையில் சிவாஜியை நினைவூட்டி.....

உள்ளத்தில் குழந்தையாக......

புன்னகை தவழ....

இரக்கத்தின் இயக்கமாக வாழ்ந்த மாமனிதர்.....

ஆம்.....!!

கருணையே வடிவான கடவுள்.....

கடவுளுக்கேப் பிடித்த ஒரு மனிதர்

தாத்தா...... !!!


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!

news

திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்

news

ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!

news

சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)

news

ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)

news

கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க

news

வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!

news

தாயன்பு !

news

All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்