நெகிழ்வான மனம் கொண்டு உனதன்பை பரிசென்று..... மகிழ்வோடு தேடி வந்தேன் இறைவா!

Nov 13, 2025,02:11 PM IST

- சிவ.ஆ. மலர்விழி ராஜா


அன்பென்ற மனம் படைத்தாய் .....

அழகாக உருவெடுத்தாய்....

கருணையே வடிவான இறைவா .....

உனை  காணும் ஆசை தான் குறைவா.....

உனை   காணும் ஆசை தான் குறைவா .....


உன் திருப்பாதம் நான் கண்டு 

தினம் தினமும் போற்றுகிறேன்.....

கண் மலர்ந்து .....

பார்க்கையிலே இறைவா.....

உனை நானும் காண்பதுவும் கனவா....

உன்னை நானும் காண்பதுவும் கனவா.....




புவி மீது வாழ்ந்து நீயும் புண்ணியங்கள் .....

சேர்த்து வைத்தாய் நலிந்த மனம் .....

தேடுகின்ற இறைவா.....

உனதன்பை மீண்டும் நீ தரவா......

உனதன்பை மீண்டும் நீ தரவா .....


உன்னை காண ஏங்கி நின்றேன் ....

உறவாக தேடுகின்றேன்....

மனம் என்ற கோயிலிலே இறைவா .....

உனக்கு பாமாலை சூட்டுகிறேன்....


சாயி வா....!

உனக்கு பாமாலை சூட்டுகிறேன்

சாயி வா ......!


நெகிழ்வான மனம் கொண்டு

உனதன்பை பரிசென்று.....

மகிழ்வோடு தேடி வந்தேன் இறைவா.....

கனிவோடு உன் அருளை தரவா .....!

கனிவோடு உன் அருளை தரவா....!


நினைக்கின்ற நேரமெல்லாம் .....

தந்தை என காட்சி தந்தாய் 

தயவோடு வர வேண்டும் இறைவா...

எனக்கென்று யாரும் இல்லை உறவா...!

எனக்கென்று யாரும் இல்லை உறவா .....!


வருகின்ற காலமெல்லாம் வயதாகி போகிறதே....

உனைத்தேடி நானும் வர இறைவா.....

உன் அருளை இனிதாக தரவா.....!

வருகின்ற காலம் எல்லாம் வயதாகி போகிறதே..... இறைவா ....!

கனிவோடு உன் அருளை தரவா .....!

சாயி கனிவோடு  உன்னருளை தரவா ....!


சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தினசரி 2 முறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்

news

"வீட்டிலிருந்தபடியே ஓபி சீட்": அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு

news

TET ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை: ஐகோர்ட் அதிரடி!

news

ஆரோக்கியா பால் மற்றும் தயிர் விலை திடீர் உயர்வு - நாளை முதல் அமல்!

news

அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் : முதல்வர் விஜய் உத்தரவு

news

கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை...அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

news

Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

news

பூமியில் புதைந்த பூலான்தேவி

news

Tamil Poem: புதிய விடியல்

அதிகம் பார்க்கும் செய்திகள்