நெகிழ்வான மனம் கொண்டு உனதன்பை பரிசென்று..... மகிழ்வோடு தேடி வந்தேன் இறைவா!

Nov 13, 2025,02:11 PM IST

- சிவ.ஆ. மலர்விழி ராஜா


அன்பென்ற மனம் படைத்தாய் .....

அழகாக உருவெடுத்தாய்....

கருணையே வடிவான இறைவா .....

உனை  காணும் ஆசை தான் குறைவா.....

உனை   காணும் ஆசை தான் குறைவா .....


உன் திருப்பாதம் நான் கண்டு 

தினம் தினமும் போற்றுகிறேன்.....

கண் மலர்ந்து .....

பார்க்கையிலே இறைவா.....

உனை நானும் காண்பதுவும் கனவா....

உன்னை நானும் காண்பதுவும் கனவா.....




புவி மீது வாழ்ந்து நீயும் புண்ணியங்கள் .....

சேர்த்து வைத்தாய் நலிந்த மனம் .....

தேடுகின்ற இறைவா.....

உனதன்பை மீண்டும் நீ தரவா......

உனதன்பை மீண்டும் நீ தரவா .....


உன்னை காண ஏங்கி நின்றேன் ....

உறவாக தேடுகின்றேன்....

மனம் என்ற கோயிலிலே இறைவா .....

உனக்கு பாமாலை சூட்டுகிறேன்....


சாயி வா....!

உனக்கு பாமாலை சூட்டுகிறேன்

சாயி வா ......!


நெகிழ்வான மனம் கொண்டு

உனதன்பை பரிசென்று.....

மகிழ்வோடு தேடி வந்தேன் இறைவா.....

கனிவோடு உன் அருளை தரவா .....!

கனிவோடு உன் அருளை தரவா....!


நினைக்கின்ற நேரமெல்லாம் .....

தந்தை என காட்சி தந்தாய் 

தயவோடு வர வேண்டும் இறைவா...

எனக்கென்று யாரும் இல்லை உறவா...!

எனக்கென்று யாரும் இல்லை உறவா .....!


வருகின்ற காலமெல்லாம் வயதாகி போகிறதே....

உனைத்தேடி நானும் வர இறைவா.....

உன் அருளை இனிதாக தரவா.....!

வருகின்ற காலம் எல்லாம் வயதாகி போகிறதே..... இறைவா ....!

கனிவோடு உன் அருளை தரவா .....!

சாயி கனிவோடு  உன்னருளை தரவா ....!


சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோவை கொடூரம்.. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு.. முதல்வர் விஜய்

news

அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் கோரிக்கை!

news

South West Monsoon: தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: சென்னையில் சட்டென மாறிய வானிலை

news

Chettinadu Recipe: தேன் போல தித்திக்கும்.. மாம்பழ குல்ஃபி ஐஸ்!

news

கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு.. அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம்

news

தவெக அரசில் சேர முடியாமல் போச்சே.. தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் வருந்தும் கட்சிகள்?

news

மே 23 ஆமைகள் தினம்.. மாணவர்களுக்கான நீதி கதை.. "கடைசியாக வந்த கோமதி"

news

Kalaimani: சிந்தனை.. எப்போது வெற்றி கிட்டும்!

news

Tamil Poem by Sasikala Viswanathan: அவலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்