- சிவ.ஆ. மலர்விழி ராஜா
அன்பென்ற மனம் படைத்தாய் .....
அழகாக உருவெடுத்தாய்....
கருணையே வடிவான இறைவா .....
உனை காணும் ஆசை தான் குறைவா.....
உனை காணும் ஆசை தான் குறைவா .....
உன் திருப்பாதம் நான் கண்டு
தினம் தினமும் போற்றுகிறேன்.....
கண் மலர்ந்து .....
பார்க்கையிலே இறைவா.....
உனை நானும் காண்பதுவும் கனவா....
உன்னை நானும் காண்பதுவும் கனவா.....

புவி மீது வாழ்ந்து நீயும் புண்ணியங்கள் .....
சேர்த்து வைத்தாய் நலிந்த மனம் .....
தேடுகின்ற இறைவா.....
உனதன்பை மீண்டும் நீ தரவா......
உனதன்பை மீண்டும் நீ தரவா .....
உன்னை காண ஏங்கி நின்றேன் ....
உறவாக தேடுகின்றேன்....
மனம் என்ற கோயிலிலே இறைவா .....
உனக்கு பாமாலை சூட்டுகிறேன்....
சாயி வா....!
உனக்கு பாமாலை சூட்டுகிறேன்
சாயி வா ......!
நெகிழ்வான மனம் கொண்டு
உனதன்பை பரிசென்று.....
மகிழ்வோடு தேடி வந்தேன் இறைவா.....
கனிவோடு உன் அருளை தரவா .....!
கனிவோடு உன் அருளை தரவா....!
நினைக்கின்ற நேரமெல்லாம் .....
தந்தை என காட்சி தந்தாய்
தயவோடு வர வேண்டும் இறைவா...
எனக்கென்று யாரும் இல்லை உறவா...!
எனக்கென்று யாரும் இல்லை உறவா .....!
வருகின்ற காலமெல்லாம் வயதாகி போகிறதே....
உனைத்தேடி நானும் வர இறைவா.....
உன் அருளை இனிதாக தரவா.....!
வருகின்ற காலம் எல்லாம் வயதாகி போகிறதே..... இறைவா ....!
கனிவோடு உன் அருளை தரவா .....!
சாயி கனிவோடு உன்னருளை தரவா ....!
சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
Pralay Missile: ஏவுகணைகளின் பிறப்பிடம் ஆகிறதா இந்தியா?.. பிரமிக்க வைக்கும் பிரளய்!
பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
{{comments.comment}}