உன்னை கண்டு மெய் மறந்தேன்..... உலகமே நீதான் என்றுணர்ந்தேன்!

Oct 30, 2025,12:16 PM IST
- சிவ.ஆ.மலர்விழி ராஜா

சாயி உந்தன் முகம் பார்த்தேன்.....!
மெய் தான் சிலிர்த்ததய்யா .......!

உள்ளம் உருகி தேடி நின்றேன்.....
கண்ணீர் பெருகுதய்யா...

( உள்ளம் உருகி  தேடி)

உன்னை தேடி வரும் நேரம்....
எத்தனை சுமைகளய்யா....

அத்தனையும் உன் அருளாலே.....
பனிபோல் மறைந்ததய்யா......

(அத்தனையும் உன்)

உன்னை கண்டு மெய் மறந்தேன்.....
உலகமே நீதான் என்றுணர்ந்தேன்.....



உள்ளம் மகிழ்ந்து எனை
மறந்தேன்.....
உன் புகழ் பாடி நின்றேன்......

(உள்ளம் மகிழ்ந்து)

சாயி..... உனது 
தரிசனமே......
உள்ளமும் உன்னிடம்....
சேர்ந்திடுமே....

எத்தனை இடர் களைந்தாய் சாயி.......
என் வாழ்வினில் வசந்தம் தந்தாய்.......

(எத்தனை இடர் களைந்தாய் )

உன்னை நினைத்திடவே
சாயி உள்ளமும் மகிழுதய்யா......

உன் திருவடி தரிசனத்தில் உலகம் 
உன்னதமானதய்யா....
சாயி....
உன்னதமானதய்யா...

சாயி என அழைத்தால் வருகின்ற துன்பமும் நீங்கி விடும்......

சாயி .....சாயி .........
என அழைத்தால் 
வருகின்ற துன்பமும் நீங்கி விடும்.....

துவாரகமாயினிலே சாயி துனிதனில்  
காட்சி தந்தாய்......

உன் புகழ் பாடி நின்றேன்.......

திருமுகம் தேடி வந்தேன் 
சாயி உன் மலரடி
சரணடைந்தேன்..... சாயி...

உன் மலரடி சரணடைந்தேன்...... சாயி...

மலரடி சரணடைந்தேன்.....!

(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

அதிகம் பார்க்கும் செய்திகள்