புதுடெல்லி: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்தியக் குடும்பங்களுக்குத் தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு (LPG) கிடைப்பதை உறுதி செய்ய உள்நாட்டு உற்பத்தி 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய அவர், சர்வதேச அளவில் நிலவும் சவால்களை எதிர்கொள்ள இந்தியா எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
உற்பத்தி அதிகரிப்பு மற்றும் விநியோகம்:
இந்தியாவின் சமையல் எரிவாயு தேவையில் சுமார் 65 சதவீதம் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இதில் 90 சதவீத இறக்குமதி, தற்போது போர் பதற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) வழியாகவே நடைபெறுகிறது. இதனால் விநியோகத்தில் சிக்கல் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவியது. இதை முறியடிக்கும் வகையில், மார்ச் 8-ம் தேதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகங்களுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, மற்ற ஹைட்ரோகார்பன் மூலப்பொருட்களைக் கொண்டு எல்பிஜி உற்பத்தியை அதிகப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. இதன் விளைவாக, உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரே இரவில் 25 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த கூடுதல் உற்பத்தி முழுவதும் வீட்டு உபயோக நுகர்வோருக்கு மட்டுமே வழங்கப்படுவதாக அமைச்சர் உறுதி அளித்தார்.
சுயசார்பு பாரதம்:

பிரதமர் நரேந்திர மோடியின் 'சுயசார்பு பாரதம்' (Atmanirbhar Bharat) கொள்கை மற்றும் கடந்த பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட எரிசக்தி மாற்ற வியூகங்களே இக்கட்டான சூழலில் இந்த உடனடி உற்பத்தி உயர்வுக்குக் காரணம் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டார். "இந்த மாற்றம் தற்செயலாக நடந்தது அல்ல; இது திட்டமிட்ட கொள்கை முடிவுகளின் பலன்" என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இந்தியா வந்த எரிவாயு :
விநியோகச் சங்கிலியைச் சீராக வைத்திருக்க மாற்று வழிகளில் கப்பல்கள் மூலம் எரிவாயு கொண்டு வரப்படுகிறது. இந்தியத் துறைமுகங்களுக்கு கடந்த சில நாட்களில் 6 எல்பிஜி கப்பல்கள் வந்து சேர்ந்துள்ளன.சமையல் எரிவாயு முன்பதிவு 84 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது முறையான விநியோகத்திற்கு வழிவகுக்கும். மேலும், காரிஃப் பருவத்திற்குத் தேவையான உரங்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார். சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருப்பதாகவும், எந்தவொரு எதிர்பாராத சூழலையும் எதிர்கொள்ளும் திறன் இந்தியாவிற்கு இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தனது உரையில் குறிப்பிட்டார்.
சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம்.. விவாதத்திற்குப் பின் நிறைவேறியது
பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாதது பெரும் ஏமாற்றம்: பாமக சௌமியா அன்புமணி பேச்சு!
கடன் வரம்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!
தமிழகத்தில் ஆகஸ்ட் 17 வரை மழைக்கு வாய்ப்பு...சென்னையிலும் மழை தொடரும்
நாளை ஆடி அமாவாசை நாளில் வரும் சூரிய கிரகணம் 2026 ஆகஸ்ட்...இதன் முக்கியத்துவம்
LPG கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் கவனத்திற்கு: e-KYC சரிபார்ப்பு ஆகஸ்ட் 15 வரை அவகாசம்
அபுதாபி செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இலவச நுழைவு விசா
Seenu Ramasamy comments: பட்ஜெட் பற்றிப் பேசுங்கள்.. வாசித்தவரைப் பற்றிய விவாதம் டைம் வேஸ்ட்!
அருணின் மாற்றம்.. திருக்குறள் கதை!
{{comments.comment}}