- மலர்விழி ராஜா
அன்பே உனக்கு வேண்டுமானால் இறைவன் ஐந்தறிவை கொடுத்திருக்கலாம்......
ஆனால் நீ மனித இனத்தை விட மேலான மஹா ஆத்மா.....
எனது நிழலில் நீ வாழ ஆசைப் படுவாய்.....
என்னைப் பிரிந்தால் நீ
ஏங்கி தவிப்பதை நான் அறிவேன்......
உணவு தரவில்லை என்றாலும் உன் அன்பினை அழகாக தெரிவித்தாய்.......
துணை யாருமின்றி தனிமையில் நான் வாடிய போதும்......
எனது முகம் பார்த்து உனது அன்பை தந்தாய்......
உன்னை விட உண்மையான அன்பை நானறியேன்......

நாயென உன்னை ஏளனம் நினைக்கவில்லை.....
நான் அமரும் நேரம் காத்திருந்து ஓடி வந்து அருகே அமரும் உன் நினைவு.......
நெஞ்சம் கனக்கிறது.....
இதயம் வலிக்கிறது......
பிறப்பொன்று இருந்தால் மீண்டும்
என்னிடம் வந்து விடு
செல்லமே.......
என்றும் உனது நினைவுகளில் எனது நன்றிகள் மலரட்டும்....
அன்பு பப்புவிற்கு சமர்ப்பணம்!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
தமிழ்நாடு தலைகுனியாது.. 234 தொகுதிகளிலும்.. பிரச்சாரத்தைத் தொடங்கும் திமுக
விஜய்யின் நிலைப்பாடு என்ன என புரியவில்லை... செங்கோட்டையன் விவகாரம் குறித்து டிடிவி தினகரன் விளக்கம்
ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு
திமுக - அதிமுக ஜல்லிக்கட்டு.. எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட 2 முக்கிய அறிவிப்புகள்!
கல்விக்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்ன ஆனது? திமுக அரசிற்கு ராமதாஸ் கேள்வி!
மதுரையிலிருந்து ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்.. எம்.எல்.ஏ தளபதிக்கு ஜோதிமணி கேள்வி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்!
மக்கள் பாதுகாப்பைப் பறிக்கும் திமுக அரசின் முடிவுகாலம் வெகு தொலைவிலில்லை: நயினார் நாகேந்திரன்
{{comments.comment}}