ஜீவனின் ஜீவிதம்!

Oct 27, 2025,01:48 PM IST

- மலர்விழி ராஜா


அன்பே  உனக்கு வேண்டுமானால் இறைவன் ஐந்தறிவை கொடுத்திருக்கலாம்......

ஆனால் நீ மனித இனத்தை விட மேலான மஹா ஆத்மா.....

எனது நிழலில் நீ வாழ ஆசைப் படுவாய்.....

என்னைப் பிரிந்தால் நீ

ஏங்கி தவிப்பதை நான் அறிவேன்......


உணவு தரவில்லை என்றாலும்  உன் அன்பினை அழகாக தெரிவித்தாய்.......

துணை யாருமின்றி தனிமையில் நான் வாடிய போதும்......

எனது முகம் பார்த்து உனது அன்பை தந்தாய்......

உன்னை விட உண்மையான அன்பை நானறியேன்......




நாயென  உன்னை ஏளனம் நினைக்கவில்லை.....

நான் அமரும் நேரம் காத்திருந்து ஓடி வந்து அருகே அமரும் உன் நினைவு.......

நெஞ்சம் கனக்கிறது.....

இதயம் வலிக்கிறது......


பிறப்பொன்று இருந்தால் மீண்டும் 

என்னிடம் வந்து விடு

செல்லமே.......


என்றும் உனது நினைவுகளில் எனது நன்றிகள் மலரட்டும்....

அன்பு பப்புவிற்கு சமர்ப்பணம்!


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்.. மு.க.ஸ்டாலின்

news

அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கு : அமலாக்கத் துறை மனு தள்ளுபடி

news

தவெக எம்எல்ஏ.,விடம் குதிரை பேரம் நடத்திய வழக்கு விசாரணைக்கு சென்னை ஹைகோர்ட் தடை

news

கைது செய்யப்பட்ட உதயநிதியை விசாரணைக்குப் பின்.. இன்றே விடுவிக்க வேண்டும்.. ஹைகோர்ட்

news

உதயநிதி ஸ்டாலின் கைது... அதிமுக பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து என்ன?

news

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குபதியப்பட்ட 9 சட்டப் பிரிவுகள் எவை? ஜாமீன் கிடைக்குமா?

news

உதயநிதி ஸ்டாலின் கைது.. தவெக கொண்டாட்டம்.. திமுக போராட்டம்.. தலைவர்கள் சொல்வது என்ன?

news

நான் அப்படி பேசவே இல்லை: கைது பற்றி உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

news

உதயநிதி ஸ்டாலின் கைது : டெல்லியில் எம்.பிக்கள்.. தமிழ்நாடு முழுவதும் திமுக.,வினர் ஆர்ப்பாட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்