- மலர்விழி ராஜா
அன்பே உனக்கு வேண்டுமானால் இறைவன் ஐந்தறிவை கொடுத்திருக்கலாம்......
ஆனால் நீ மனித இனத்தை விட மேலான மஹா ஆத்மா.....
எனது நிழலில் நீ வாழ ஆசைப் படுவாய்.....
என்னைப் பிரிந்தால் நீ
ஏங்கி தவிப்பதை நான் அறிவேன்......
உணவு தரவில்லை என்றாலும் உன் அன்பினை அழகாக தெரிவித்தாய்.......
துணை யாருமின்றி தனிமையில் நான் வாடிய போதும்......
எனது முகம் பார்த்து உனது அன்பை தந்தாய்......
உன்னை விட உண்மையான அன்பை நானறியேன்......

நாயென உன்னை ஏளனம் நினைக்கவில்லை.....
நான் அமரும் நேரம் காத்திருந்து ஓடி வந்து அருகே அமரும் உன் நினைவு.......
நெஞ்சம் கனக்கிறது.....
இதயம் வலிக்கிறது......
பிறப்பொன்று இருந்தால் மீண்டும்
என்னிடம் வந்து விடு
செல்லமே.......
என்றும் உனது நினைவுகளில் எனது நன்றிகள் மலரட்டும்....
அன்பு பப்புவிற்கு சமர்ப்பணம்!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
விஜய் பையில் கத்திரிக்கோல்.. ஆதவ் அர்ஜூனாவிடம் மது பாட்டில்.. பரபரத்த சென்னை ஏர்போர்ட்!
எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிப்பு...தமிழகத்தில் வேகமெடுக்கும் அரசு பணிகள்
Iran-Israel War: மேற்கு ஆசியப் போர் எதிரொலி - சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு
10 ஏவுகணைகளை ஏவி அதிரடி காட்டிய கிம்மின் வடகொரியா.. கிலியில் அண்டை நாடுகள்!
வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு மின்சார மானியம் அறிவிப்பு
மதுரை விமான நிலையம்.. திருத்தம்.. மதுரை சர்வதேச விமான நிலையம்.. மத்திய அரசு ஆணை!
மகேந்திரகிரியில் கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி : இஸ்ரோ அறிவிப்பு
NDA கூட்டணியில் தவெக விஜய்?.. நயினார் நாகேந்திரன் அளித்த அதிரடி விளக்கம்
தொகுதிப் பங்கீட்டில் இழுபறி - பிடிவாதம் காட்டும் இடதுசாரிகள்.. தேமுதிகவுக்கு அதிகம் தர எதிர்ப்பு!
{{comments.comment}}