ஜீவனின் ஜீவிதம்!

Oct 27, 2025,01:48 PM IST

- மலர்விழி ராஜா


அன்பே  உனக்கு வேண்டுமானால் இறைவன் ஐந்தறிவை கொடுத்திருக்கலாம்......

ஆனால் நீ மனித இனத்தை விட மேலான மஹா ஆத்மா.....

எனது நிழலில் நீ வாழ ஆசைப் படுவாய்.....

என்னைப் பிரிந்தால் நீ

ஏங்கி தவிப்பதை நான் அறிவேன்......


உணவு தரவில்லை என்றாலும்  உன் அன்பினை அழகாக தெரிவித்தாய்.......

துணை யாருமின்றி தனிமையில் நான் வாடிய போதும்......

எனது முகம் பார்த்து உனது அன்பை தந்தாய்......

உன்னை விட உண்மையான அன்பை நானறியேன்......




நாயென  உன்னை ஏளனம் நினைக்கவில்லை.....

நான் அமரும் நேரம் காத்திருந்து ஓடி வந்து அருகே அமரும் உன் நினைவு.......

நெஞ்சம் கனக்கிறது.....

இதயம் வலிக்கிறது......


பிறப்பொன்று இருந்தால் மீண்டும் 

என்னிடம் வந்து விடு

செல்லமே.......


என்றும் உனது நினைவுகளில் எனது நன்றிகள் மலரட்டும்....

அன்பு பப்புவிற்கு சமர்ப்பணம்!


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டாவும் பாசமும் (சிறுகதை)

news

மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்

news

நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

news

கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!

news

ஜீவனின் ஜீவிதம்!

news

பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!

news

மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்

news

மங்கலா.. சமூகத்தில் ஒரு ஒளி.. (மீண்டும் மங்கலம்.. மினி தொடர்கதை - 6)

அதிகம் பார்க்கும் செய்திகள்