Summer rain.. மேலிருந்து வீழம் ஈரத் துளிகள் பட்டு.. மயங்கும் நிமிடங்களில்!

Mar 01, 2025,03:04 PM IST

- தேவி


மேலிருந்து வீழும்

உன் ஈர துளிகளைக்  கண்டு

மயங்கிய நிமிடங்களில்

உறைந்த இதயத்தில்

பூக்களாய் பூத்து

புதுமை அடைய செய்கின்றாய்....


வானத்தின் வண்ணமாக வந்து 

வார்த்தையின் எல்லையாக பரவி  

ஊடலின் உறைவிடமாக 

மயங்க வைக்கின்றாய்.....

உன்னை கண்ட நொடிகளில் 

என் இதயம் வீணையாக மாறி

உன் மழை ராகம் வுாசிக்கிறது




பட்டுத் தெறிக்கும் துளிகளுக்கு மத்தியில்

உன் பார்வை தேடி அலைகின்றேன் 

உன்னை கண்ட நொடியில்

வானவில்லில் கால் தடமும் 

என் முன்னே மௌனமாக காத்திருக்கின்றது

ஜில்லிட வைக்கும் உன் துளி பட்டு

பறவைகளின் காதல் கொஞ்சலும்

பாடலாக  ஒலிக்கின்றது


நித்தம் நித்தம்  கனவிலும் 

கனவைத் தாண்டி கடலிலும் கலக்கும் 

உன்னைக் கண்டு 

கவிதைகள் கொட்டுகின்றது

மரங்களில்  இடைவேளை 

உன்னால் மரணித்து போகின்றது


கடற்கரை பரந்த மணற் பரப்பில்

வீழும் உன் கால் தடயங்களைப் பற்றிக் கொண்டு 

காதல் ஓவியம் பாட வைக்கின்றாய்

மனதின் காதலை 

மவுனமாக உன்னிடம் அனுமதி கேட்டு 

மயங்கி விழ வைக்கின்றாய்


மனதினில் அவளையும் 

மயக்கத்தில் உன் அழகினையும்  

நினைத்து துடித்து

திரும்பத் திரும்ப புறப்படுகின்றேன் 

உன் ஈர விழிகளின் அசைவினில்

குயிலினின் காதலை ஓசையில் அறியலாம் 

மயிலினின் காதலை தோகையில் அறியலாம் 

என் ஆழ் மனதின் காதலை 

உன் வருகையினில் அறியலாம்....


அருகில் வரும் போதும்

அருவி போல கொட்டுகிறாய்

நெருங்கி வரும் போதும் 

தேன் துளிகளை தூவுகிறாய் 

நெஞ்சை அள்ளி போகிறாய் 

கொள்ளை கொண்டு போகிறது 

உன்னை காணும் போது 

என் மனம்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென்னையை வச்சா இளநீரு பிள்ளையை பெத்தா கண்ணீரு.. ஏன் அப்படி சொன்னாங்க தெரியுமா?

news

Monday Motivation.. வைராக்கியம் வாழவைக்கும்.. பொறாமை புரளி பேசவைக்கும்.. கோபம் உண்மையை உரைக்கும்!

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

news

பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது போல.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

சுவையான சூப்பரான கொத்தமல்லி தொக்கு ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் பண்ணுங்க!

news

ஏகாம்பரநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்.. பக்தி வெள்ளத்தில் மூழ்கிய கோவில் நகரம் காஞ்சிபுரம்!

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

அதிகம் பார்க்கும் செய்திகள்