அவன்தான் பிடி உஸ் உஸ்...!

Oct 24, 2025,03:05 PM IST

- யாழ் தண்விகா


கண்கள் இரண்டும் விழிபிதுங்கி  

பற்கள் வெளித்தெறிய

பிடரி மயிர்கள் பறக்க

வெள்ளை நிற குதிரையில்

கண்ணெதிரே பார்த்திடாத உயரத்தில்

கடுஞ்சினத்துடன் 

கையில் அரிவாளை ஏந்தி

அருகே வேட்டை நாய்களின் துணையுடன்

பட்டுச்சரிகை வேட்டி கட்டி

பட்டால் துண்டும் கட்டி

வீற்றிருக்கும் வீச்சுக்கருப்பண்ணசாமிக்கு

திருவிழா நாட்களில் 




அபிஷேகம் ஆராதனை படையல்

என்று அமர்க்களப்படும்.

கோவிலைச் சுற்றி பக்தி பரவசமாக காட்சியளிக்கும். 

என்ன மாயமோ 

அவரிடம் 

நல்லவர்களும் வேண்டுவார்கள் கெட்டவர்களும் வேண்டுவார்கள்.

நினைப்பவர்கள் இரவுகளில் 

அந்த திசையைப் பாராமல்

கும்பிடுவதுடன் சரி. 

விசேஷம் எதுவுமற்ற காலங்களில்

காற்றின் மிதப்பில்

இருப்பார் சாமி.

சிலைக்கு நேர் எதிரே உள்ள

சாலையில் சிலை இருப்பதை

அறியாது 

சென்று கொண்டு இருந்தனர்

கற்பழிப்பு கொலை கொள்ளை

இன்னும் சொல்லவியலா பித்தலாட்டத்தனங்களை அரங்கேற்றியவர்கள் எல்லோரும்.

ஒரே திசையில்

எல்லோரையும் பார்த்தபடி இருக்கும்

குதிரையில் வீற்றிருப்பவர் குறைந்தபட்சம் 

அந்த நாயை அனுப்பியாவது

அவர்களை ஏதாவது செய்திருக்கலாம்.


(கவிஞர் யாழ் தண்விகா, அரசுப் பள்ளி ஆசிரியர். எட்டு கவிதை தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தாமரைக்குளம் இவரது சொந்த ஊர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்