கலை தந்த அறம்.. கலைஞர்.. காலம் போற்றும் கவின் மிகு சொல்லோவியம்!

Jun 03, 2025,03:43 PM IST
- முனைவர் மு. ஜோதிலட்சுமி

கலை தந்த அறம்
கலைஞர்
காலம் போற்றும்
கவின் மிகு சொல்லோவியம்
அரசு இயல் படைத்த
வள்ளுவர் வழி ....
அரசியல் நடாத்திய
செங்கோல் 
மேதினியில் ஏது இனி என மற்றவர் வியக்கும் மதிநுட்பம் ....
மாண்பமை மேனாள் முதல்வராய்
மக்கள் நலன் சார்ந்து
விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத்தரம்
உயர வகுத்திட்ட
திட்டங்கள்
வருகின்ற அரசியல் தலைமுறைகளும்
கற்க வேண்டிய
உயர்வியூகங்கள்




பகுத்தறிவு
பகலவனின் கொள்கைகளுக்கு ஒளிக்கதிராய் அறியாமை இருள் அகற்றிய அறிவொளியாய்
இந்தி திணிப்பில்
தமிழ் மொழி காக்கும்
போர் வாளாய்
பாமர மக்களின் ஏற்றமாய்
பகுத்தறிவாளர்களின் தோழமையாய்
தமிழக வரலாற்றில்
தனித்துவமிகு தலைவராய் விளங்கிய பெருந்தகை இவர்
தமிழன்னையின்
செல்வ மகனாய் 
செம்மொழி அங்கீகாரம்
பெற்று தந்த 
முத்தமிழ் அறிஞர்
தொல்காப்பிய பழமைக்கு புதுமையும்
சங்கத் தமிழுக்கு எழில் மிகு உரையும்
சிலப்பதிகார புரட்சியும் என இலக்கியத் தமிழ்
பறைசாற்றும்
இவர் தமிழ் இன உணர்வின் மேன்மைகள் 
திராவிட
இயக்கமும் 
எழுத்தும் இவரின்
இரு கண்கள்
இரண்டிற்கும்
இமை சோராமல்
இறுதி வரை
உழைத்த 
மாநிலம் போற்றும்
மகத்துவம்
காலம் எனும் வரலாற்றில்
அரசியல் சாசனத்தில்
தமிழகம்
தவிர்க்க முடியாத
மறக்க முடியாத
தனி ஆளுமை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்
 

முனைவர் மு. ஜோதிலட்சுமி
இணைப் பேராசிரியர்
தமிழாய்வுத்துறை
பிஷப்ஹீபர் கல்லூரி
திருச்சி - 17
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்