மனிதம் எங்கே?
ஆறறிவு கொண்ட மனிதனே....
மனம் படைத்ததால் நீ மனிதன் ஆனாய்...
குணம் கொண்ட நீ குன்றேற வேண்டாமோ?
குணத்தைத் தொலைத்து குன்றித்தான் போனாயோ!!!!!
தாய்ப்பாலுக்காகத் தாய் கணக்கு வைத்திட்டால் தரணி ஈடாகுமா?
இந்த தரணி ஈடாகுமா?
தன் இரத்தத்தை.
ஈகையாய் ஈந்திட்ட ஈரத்தை ... இதயத்தை ரணமாக்கி
வாடகைச் சொந்தங்களுக்கு இலவசமாய் கொடுத்தாயே!!!!
உன்னை பெற்றது என் பாவமா?
புவி சிறக்க வளர்த்தது தந்தை பாவமா?

முதியோர் இல்லமென்னும் மூலைச் சிற்றரை யினிலே
மூச்சடைக்க வைத்தாய் நீ..
வயதான காலத்தில் வாழ்வுக்கு போராட வைத்தாய்..
உனது வாக்கரிசி வேண்டாமப்பா என் மகனே....
உன் அன்பான மகன் உன்னை
பாதாளச்சிறையதிலே பதுக்காமல் பார்த்துக்கொள்!!!
உயிர் பிழைத்துக்கொள்....!
(About the Author. V.R. VIJAYALAKSHMI ,MA B.ED,PGDSE,MPHIL,GRADUATE TEACHER,KANCHIPURAM)
Iran War: ஈரான் மீதான போர் நிறுத்தி வைப்பு: அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் பாஜக-27, அமமுக-11, பாமக -18 தொகுதிகள் ஒதுக்கீடு
நான் ஒருவன் தான் உண்மையான எதிர்க்கட்சி...தமிழர் கட்சி சீமான் ஆவேசம்
ஒரு கார் வாங்க எங்களுக்கு தகுதி இல்லையா?...பிரஸ்மீட்டில் கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செம மழை காத்திருக்கிறது.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!
தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு வராத ஜி.கே.வாசன்...காரணம் இது தானா?
வீரத்தின் அடையாளம்.. மறக்க முடியாத பஞ்சாப் சிங்கம் பகத்சிங்!
திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை: நயினார் நாகேந்திரன் தாக்கு!
திருத்துறைப்பூண்டி பொன்னிறை புற்றடி மாரியம்மன் கோவில் திருவிழா
{{comments.comment}}