மனிதம் எங்கே?
ஆறறிவு கொண்ட மனிதனே....
மனம் படைத்ததால் நீ மனிதன் ஆனாய்...
குணம் கொண்ட நீ குன்றேற வேண்டாமோ?
குணத்தைத் தொலைத்து குன்றித்தான் போனாயோ!!!!!
தாய்ப்பாலுக்காகத் தாய் கணக்கு வைத்திட்டால் தரணி ஈடாகுமா?
இந்த தரணி ஈடாகுமா?
தன் இரத்தத்தை.
ஈகையாய் ஈந்திட்ட ஈரத்தை ... இதயத்தை ரணமாக்கி
வாடகைச் சொந்தங்களுக்கு இலவசமாய் கொடுத்தாயே!!!!
உன்னை பெற்றது என் பாவமா?
புவி சிறக்க வளர்த்தது தந்தை பாவமா?

முதியோர் இல்லமென்னும் மூலைச் சிற்றரை யினிலே
மூச்சடைக்க வைத்தாய் நீ..
வயதான காலத்தில் வாழ்வுக்கு போராட வைத்தாய்..
உனது வாக்கரிசி வேண்டாமப்பா என் மகனே....
உன் அன்பான மகன் உன்னை
பாதாளச்சிறையதிலே பதுக்காமல் பார்த்துக்கொள்!!!
உயிர் பிழைத்துக்கொள்....!
(About the Author. V.R. VIJAYALAKSHMI ,MA B.ED,PGDSE,MPHIL,GRADUATE TEACHER,KANCHIPURAM)
Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
{{comments.comment}}