மனிதம் எங்கே?
ஆறறிவு கொண்ட மனிதனே....
மனம் படைத்ததால் நீ மனிதன் ஆனாய்...
குணம் கொண்ட நீ குன்றேற வேண்டாமோ?
குணத்தைத் தொலைத்து குன்றித்தான் போனாயோ!!!!!
தாய்ப்பாலுக்காகத் தாய் கணக்கு வைத்திட்டால் தரணி ஈடாகுமா?
இந்த தரணி ஈடாகுமா?
தன் இரத்தத்தை.
ஈகையாய் ஈந்திட்ட ஈரத்தை ... இதயத்தை ரணமாக்கி
வாடகைச் சொந்தங்களுக்கு இலவசமாய் கொடுத்தாயே!!!!
உன்னை பெற்றது என் பாவமா?
புவி சிறக்க வளர்த்தது தந்தை பாவமா?

முதியோர் இல்லமென்னும் மூலைச் சிற்றரை யினிலே
மூச்சடைக்க வைத்தாய் நீ..
வயதான காலத்தில் வாழ்வுக்கு போராட வைத்தாய்..
உனது வாக்கரிசி வேண்டாமப்பா என் மகனே....
உன் அன்பான மகன் உன்னை
பாதாளச்சிறையதிலே பதுக்காமல் பார்த்துக்கொள்!!!
உயிர் பிழைத்துக்கொள்....!
(About the Author. V.R. VIJAYALAKSHMI ,MA B.ED,PGDSE,MPHIL,GRADUATE TEACHER,KANCHIPURAM)
அதிமுக - பாஜக கூட்டணி: யார் யாருக்கு எத்தனை சீட்.. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது!
கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கே...மலேசியாவில் அரசியல் பேச விஜய்க்கு தடை!
புத்தகப் பிரியர்களின் கவனத்திற்கு.. 49-வது சென்னை புத்தகத் திருவிழா தேதி மாற்றம்!
சார்பு ஆய்வாளர் தேர்வில்... தமிழ் கேள்விகளை நீக்கியுள்ள திமுக அரசிற்கு கண்டனம்: அண்ணாமலை
மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... விஜய் மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டம்...பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்!
பொங்கல் பரிசுடன் ரூ.5000 வழங்க வேண்டும்...எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உதயநிதியை முதல்வராக்குவதே திமுக.,வின் முக்கிய நோக்கம்...நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
வி..யில் தொடங்கும் தொகுதியில் போட்டியிடுவாரா விஜய்??.. பரபரக்கும் புதிய தகவல்!
பெங்களூருவின் அழகிய கலைப் பொக்கிஷம்.. பனசங்கரி சிற்பப் பூங்கா
{{comments.comment}}