மனிதம் எங்கே?

Dec 23, 2025,04:57 PM IST

மனிதம் எங்கே?

ஆறறிவு கொண்ட மனிதனே....

மனம் படைத்ததால் நீ மனிதன் ஆனாய்... 

குணம் கொண்ட நீ  குன்றேற வேண்டாமோ? 

குணத்தைத்  தொலைத்து குன்றித்தான் போனாயோ!!!!!


தாய்ப்பாலுக்காகத் தாய் கணக்கு வைத்திட்டால் தரணி ஈடாகுமா? 

இந்த தரணி ஈடாகுமா? 

தன்  இரத்தத்தை.                         

ஈகையாய் ஈந்திட்ட ஈரத்தை ... இதயத்தை ரணமாக்கி  

வாடகைச் சொந்தங்களுக்கு இலவசமாய் கொடுத்தாயே!!!! 

உன்னை பெற்றது என் பாவமா? 

புவி சிறக்க வளர்த்தது  தந்தை பாவமா? 




முதியோர் இல்லமென்னும் மூலைச் சிற்றரை யினிலே  

மூச்சடைக்க வைத்தாய் நீ.. 

வயதான காலத்தில்  வாழ்வுக்கு போராட வைத்தாய்.. 

உனது வாக்கரிசி வேண்டாமப்பா என் மகனே....

உன் அன்பான மகன் உன்னை 

பாதாளச்சிறையதிலே பதுக்காமல் பார்த்துக்கொள்!!! 

உயிர் பிழைத்துக்கொள்....!


(About the Author. V.R. VIJAYALAKSHMI ,MA B.ED,PGDSE,MPHIL,GRADUATE TEACHER,KANCHIPURAM)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுகவால் சொல்ல மட்டுமே முடியும்: எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்கம் தென்னரசு பதில்!

news

தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல வெறும் 0 தான் : எடப்பாடி பழனிச்சாமி

news

தேமுதிக இடம்பெறக்கூடிய கூட்டணி தான் இந்த முறை ஆட்சி அமைக்கும்: பிரேமலதா விஜயகாந்த்

news

தவெக தலைமை அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

news

விஜய்க்கு நீதிபதி கொடுத்த 2 ஆப்ஷன்... அடுத்து என்ன செய்ய போகிறார்?

news

தங்கத்தை வீட்டில் பூட்டி வைக்காதீர்கள்: முதலீட்டாளர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை

news

பீகார் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான பிரசாந்த் கிஷோரின் மனு தள்ளுபடி

news

பிப்ரவரி 28 இல்லங்க... மார்ச் 1... பிரதமர் மோடி தமிழகம் வருகையில் மாற்றம்!

news

சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்