- க.யாஸ்மின் சிராஜூதீன்
வாழ்க்கை முழுவதும் பயணிப்பாய்
எங்களுடனே நீ என்ன மாயமோ ...!!!
நாங்கள் பார்க்கவில்லையே உன்னை......
நீ எங்கள் காவலனா நாங்கள் உணரலையே.....
காலம் கடந்த பின்னே உணர்கிறோம்
நீ எங்கள் நிழலாய் இருந்ததை....
உன்னை அறிய விலை உண்டு
மீண்டும் பெற முடியாத வாழ்நாட்களே......
மீதமுள்ள நாட்கள் சிறப்பாய் சிந்தித்து வாழவும், இளைய சமூகத்திற்கு கூறவும்....
அனுபவம் உரைத்திடும் உண்மையே
மூத்தோர்சொல் அமிர்தமாகுமே ...!!!

இளையோர் கேட்டு வாழ்ந்தால் வாழ்கை சிறக்குமே...
பட்டுத்தான் தெளிவேன் என்றால்
காலம் கடக்குமே.....!!!
வழிகாட்டி ஆகுமே...!!!
அனுபவம் நம்மை ஏற்றிடும் ஏணியே
அறிந்து வாழ்ந்திட வேண்டுமே...!!!!
உற்றதுணையாக நம்முடனே பயணம் செய்து காத்திடுமே...
தன்னிகரில்லா நண்பனே எங்கள் அனுபவமே.......!!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
தவெக குழப்பத்தால்.. திமுக, அதிமுகவை வைத்து கொடி கட்டிப் பறக்கும் வதந்திகள்!
ஆட்சியமைக்க அழைக்கப்படாத விஜய்.. அடுத்து என்ன நடக்கும்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்
விஜய் ஆட்சி அமைக்க முடியாமல்.. மறு தேர்தல் நடந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
தவெக ஆட்சியமைக்கட்டும்.. தொந்தரவு செய்ய மாட்டோம்... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
பெரும்பான்மையை சட்டசபையில்தான் நிரூபிக்க வேண்டும்.. சுப்ரீம் கோர்ட் சொல்லிருக்கு.. கமல்ஹாசன்
விஜய் ஆட்சி அமைக்க பெருகும் ஆதரவு... இவங்களா இப்படி பேசுறாங்க? ஒரே வாரத்தில் மாறிய சூழல்!
விஜய்யை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. அபிஷேக் மனு சிங்வி
தவெகவை இந்தியா முழுவதும் அறிய வேண்டும் என்பதால் இந்தியில் பேசுகிறேன்.. கீர்த்தனா எம்எல்ஏ
ஜல்லிகட்டுப் போராட்டம் போல.. போராட தவெகவினர் திட்டமா?.. போலீஸ் கண்காணிப்பு அதிகரிப்பு
{{comments.comment}}