- க.யாஸ்மின் சிராஜூதீன்
வாழ்க்கை முழுவதும் பயணிப்பாய்
எங்களுடனே நீ என்ன மாயமோ ...!!!
நாங்கள் பார்க்கவில்லையே உன்னை......
நீ எங்கள் காவலனா நாங்கள் உணரலையே.....
காலம் கடந்த பின்னே உணர்கிறோம்
நீ எங்கள் நிழலாய் இருந்ததை....
உன்னை அறிய விலை உண்டு
மீண்டும் பெற முடியாத வாழ்நாட்களே......
மீதமுள்ள நாட்கள் சிறப்பாய் சிந்தித்து வாழவும், இளைய சமூகத்திற்கு கூறவும்....
அனுபவம் உரைத்திடும் உண்மையே
மூத்தோர்சொல் அமிர்தமாகுமே ...!!!

இளையோர் கேட்டு வாழ்ந்தால் வாழ்கை சிறக்குமே...
பட்டுத்தான் தெளிவேன் என்றால்
காலம் கடக்குமே.....!!!
வழிகாட்டி ஆகுமே...!!!
அனுபவம் நம்மை ஏற்றிடும் ஏணியே
அறிந்து வாழ்ந்திட வேண்டுமே...!!!!
உற்றதுணையாக நம்முடனே பயணம் செய்து காத்திடுமே...
தன்னிகரில்லா நண்பனே எங்கள் அனுபவமே.......!!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
தொகுதி மறுவரையறை.. அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு!
Double Meaning talks: மனிதர்கள் எப்போது டபுள் மீனிங் + கெட்ட வார்த்தையில் பேச ஆரம்பிக்கிறார்கள்?
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026 : அறிவிக்கப்பட்ட திட்டங்களும், ஒதுக்கப்பட்ட நிதியும்
தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகள் ஏமாற்றம்...எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையனுடன் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் திடீர் சந்திப்பு
பிரதமர் மோடியின் 2026-ஆம் ஆண்டு வெளிநாட்டு பயணச் செலவு: மத்திய அரசு வெளியிட்ட தகவல்!
“வெற்றிப் பயணம் தொடரட்டும்!”: அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27: திமுக, தேமுதிக.,வின் கருத்து என்ன?
முருக பக்தியின் மகத்துவம் பேசும் ஆடி கிருத்திகை –காவடி, பால்குடம், பக்தி பேரலை
{{comments.comment}}