- அ. தாமஸ்
குறையை குறைவாய்க் காண்போம் நிறையையோ நிறைவாய்க் காண்போம். குறையை குறைவாய்க் கண்டு நிறையை நிறைவாய்க் காண்பவர்களே குறையே இல்லாத மகிழ்வைக் காண்கிறார்கள்.
குறை காணா மனமே இறைவனின் வரம். நிறைவு வேண்டுமென்று நினைத்து இறையிடமே குறையைக் கண்டால் நிறைவு எப்படி குறைவில்லாமல் கிடைக்கும். எனவே தவிர்ப்போம் குறை காணும் மனதை.

உடல் ஊனத்தைக் கூட குறையாகக் காணாமல் அதிலும் ஒரு நிறைவைக் கண்டததால் தான் பல அறிஞர்கள் ஊனத்தைக் கடந்து உயர் ஞானத்தை அடைந்து இவ்வுலகை வென்றிருக்கிறார்கள்.
குறை காணும் மனதை விடுத்து குறையிலும் ஒரு நிறைவைக் காணும் மனதை நமதாக்கி தவறுவோரைத் தட்டிக் கொடுத்து" பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம்" என மகிழ்ந்து பாராட்டும் பொழுது பல உறவுகளும் நம் தவறுகளையும் மறந்து மகிழ்ச்சி பாராட்டும்.
அங்கே புது உறவுகளும் உணர்வோடு உதயமாகும், நாமும் பலர் விரும்பும் இதயமாவோம்.எனவே உடலிலும் உறவிலும் குறை கடந்து நிறைவைக் காண்போம். வாழ்வில் பல உயர்வைக் காண்போம்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
"முதல்ல உங்க கட்சியைக் காப்பாற்றும் வேலையை பாருங்கள்!" - எடப்பாடி பழனிச்சாமிக்கு தவெக பதிலடி
"நான் எங்கும் ஓடி ஒளியவில்லை" - காவல்துறைக்கு செந்தில் பாலாஜி எழுதிய கடிதத்தால் பரபரப்பு!
"அதிமுகவின் எம்.எல்.ஏ-க்களை விஜய் களவாடுகிறார்!" – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
யாரையும் நாங்கள் அழைக்கவில்லை.. குதிரை பேர புகாருக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!
வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி
தேர்தலில் தனித்துப் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் தயார்: சிபிஐ திடீர் அறிவிப்பு!
அப்பா படம் ஜனநாயகன் வருது.. மகன் படம் சிக்மாவை ஆகஸ்ட்டுக்கு ஒத்திவைக்கும் லைகா?
தமிழகத்தில் நடப்பது அன்பு சாம்ராஜ்யம் - அமைச்சர் அருண்ராஜ் புகழாரம்
Santhi Sinnathambi Poem: இறைவா தருவாயா??
{{comments.comment}}