32 வயது.. கல்யாணமாகி 3 வருடமே ஆகிறது.. சுருண்டு விழுந்த இளைஞர்.. கிரிக்கெட் மைதானத்தில் ஷாக்!

Sep 18, 2024,10:48 AM IST

விழுப்புரம்:   திண்டிவனம் வட கொளப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் பாலாஜி. இவருக்கு வயது 32. இவருக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் தான் ஆகின்றன. இவர் கொளப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நொளம்பூர் அணிக்கும் கீழ்சேவூர் அணிக்கும் நட்பு ரீதியாக நடந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடினார். போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நொளம்பூர் அணி சார்பில் பந்து வீச சென்ற பாலாஜி திடீர் என மயங்கி கீழே விழுந்தார்.




அப்போது உடன் விளையாடியவர்கள் சாதாரண மயக்கம் தான் என்று எண்ணி முகத்தில் தண்ணீர் தெளித்துள்ளனர். தண்ணீர் தெளித்தும் பாலாஜி எழுந்திருக்கவில்லை. இதனால், அச்சமடைந்த நண்பர்கள் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.


இந்த சம்பவம் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தவர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன காரணத்தினால் அவர் இறந்தார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!

news

மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்

news

பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்

news

நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!

news

கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!

news

மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்

news

ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்