சென்னை : அம்மன் வழிபாட்டிற்கு உரிய ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான விரத நாள் ஆடிக்கிருத்திகை தினமாகும். முருகப் பெருமானுக்குரிய விரதங்களில் மிக முக்கியமானது கார்த்திகை விரதம்.
முருகப் பெருமான், சிவ பெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து அவதரித்தது விசாக நட்சத்திர தினத்தில் என்றாலும், முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை சிறப்பிக்கும் விதமாக கார்த்திகை நட்சத்திரம் முருகனுக்குரியது ஆனது. முருகனை தாயாக இருந்து வளர்ந்ததால் அன்னை பார்வதிக்கு இணையான பெருமையை பெற்றவர்கள் கார்த்திகை பெண்கள்.
சிவ பெருமானிடம், நட்சத்திரமாக இருக்கக் கடவது என வரம் பெற்ற கார்த்திகை பெண்களை, அம்மன் வழிபாட்டிற்குரிய ஆடி மாதத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். கார்த்திகா நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் வருகிறது என்றாலும், தை, கார்த்திகை மற்றும் ஆடி மாதங்களில் வரும் கார்த்திகை நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தாகும். இந்த நாட்களில் முருகப் பெருமானை விரதமிருந்து வழிபடுவது சிறப்பானது. இந்த ஆண்டு ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 09 ம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஆடிக்கிருத்திகை அன்று செவ்வரளி மாலை சூட்டி, ஷட்கோண கோலம் அமைத்து, சரவணபவ என எழுதி அதில் 6 விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும். ஓம் சரவண பவ மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபட வேண்டும். இதனால் சகல விதமான செல்வங்களும் கிடைக்கும். வாழ்வில் ஏற்பட்டுள்ள திருமண தடை, குழந்தை பாக்கிய தடை, வீடு அல்லது மனை சார்ந்த பிரச்சனைகள், செவ்வாய் தோஷம் ஆகிய அனைத்தும் நீங்கும். முருகப் பெருமான், செவ்வாய் கிரகத்திற்குரிய தெய்வம் என்பதால் முருகனை வழிபடுவதால் செவ்வாய் தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும்.
அதோடு கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய முக்கியமான சிறப்பு தலைமை பதவி தரக் கூடியதாகும். பதவி உயர்விற்காக காத்திருப்பவர்கள், பதவி உயர்வு பெற வேண்டும் என நினைப்பவர்கள் ஆடி கிருத்திகை நாளில் விரதம் இருந்து வழிபடலாம். முடிந்தவர்கள் உபவாசமாக இருந்து வழிபடலாம். முடியாதவர்கள் உப்பில்லாத உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதம் இருப்பது சிறப்பானது ஆகும்.
ஆடி மாதம் தட்சணாயன காலத்தின் துவக்க மாத என்பதால் தொடர்ந்து கிருத்திகை விரதம் இருக்க நினைப்பவர்கள் ஆடி மாதம் கிருத்திகையில் துவங்கி, தை மாதம் கிருத்திகை வரை தொடர்ந்து 6 மாதங்கள் கிருத்திகை விரதம் இருப்பார்கள். இதனால் முருகப் பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}