தலைமை பதவியையும் நன்மைகளையும் தரும் ஆடிக் கிருத்திகை

Aug 09, 2023,10:27 AM IST

சென்னை : அம்மன் வழிபாட்டிற்கு உரிய ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான விரத நாள் ஆடிக்கிருத்திகை தினமாகும். முருகப் பெருமானுக்குரிய விரதங்களில் மிக முக்கியமானது கார்த்திகை விரதம். 


முருகப் பெருமான், சிவ பெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து அவதரித்தது விசாக நட்சத்திர தினத்தில் என்றாலும், முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை சிறப்பிக்கும் விதமாக கார்த்திகை நட்சத்திரம் முருகனுக்குரியது ஆனது. முருகனை தாயாக இருந்து வளர்ந்ததால் அன்னை பார்வதிக்கு இணையான பெருமையை பெற்றவர்கள் கார்த்திகை பெண்கள்.




சிவ பெருமானிடம், நட்சத்திரமாக இருக்கக் கடவது என வரம் பெற்ற கார்த்திகை பெண்களை, அம்மன் வழிபாட்டிற்குரிய ஆடி மாதத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். கார்த்திகா நட்சத்திரம் ஒவ்வொரு  மாதமும் வருகிறது என்றாலும், தை, கார்த்திகை மற்றும் ஆடி மாதங்களில் வரும் கார்த்திகை நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தாகும். இந்த நாட்களில் முருகப் பெருமானை விரதமிருந்து வழிபடுவது சிறப்பானது. இந்த ஆண்டு ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 09 ம் தேதி கொண்டாடப்படுகிறது.


ஆடிக்கிருத்திகை அன்று செவ்வரளி மாலை சூட்டி, ஷட்கோண கோலம் அமைத்து, சரவணபவ என எழுதி அதில் 6 விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும். ஓம் சரவண பவ மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபட வேண்டும். இதனால் சகல விதமான செல்வங்களும் கிடைக்கும். வாழ்வில் ஏற்பட்டுள்ள திருமண தடை, குழந்தை பாக்கிய தடை, வீடு அல்லது மனை சார்ந்த பிரச்சனைகள், செவ்வாய் தோஷம் ஆகிய அனைத்தும் நீங்கும். முருகப் பெருமான், செவ்வாய் கிரகத்திற்குரிய தெய்வம் என்பதால் முருகனை வழிபடுவதால் செவ்வாய் தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும்.


அதோடு கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய முக்கியமான சிறப்பு தலைமை பதவி தரக் கூடியதாகும். பதவி உயர்விற்காக காத்திருப்பவர்கள், பதவி உயர்வு பெற வேண்டும் என நினைப்பவர்கள் ஆடி கிருத்திகை நாளில் விரதம் இருந்து வழிபடலாம். முடிந்தவர்கள் உபவாசமாக இருந்து வழிபடலாம். முடியாதவர்கள் உப்பில்லாத உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதம் இருப்பது சிறப்பானது ஆகும். 


ஆடி மாதம் தட்சணாயன காலத்தின் துவக்க மாத என்பதால் தொடர்ந்து கிருத்திகை விரதம் இருக்க நினைப்பவர்கள் ஆடி மாதம் கிருத்திகையில் துவங்கி, தை மாதம் கிருத்திகை வரை தொடர்ந்து 6 மாதங்கள் கிருத்திகை விரதம் இருப்பார்கள். இதனால் முருகப் பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்