தலைமை பதவியையும் நன்மைகளையும் தரும் ஆடிக் கிருத்திகை

Aug 09, 2023,10:27 AM IST

சென்னை : அம்மன் வழிபாட்டிற்கு உரிய ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான விரத நாள் ஆடிக்கிருத்திகை தினமாகும். முருகப் பெருமானுக்குரிய விரதங்களில் மிக முக்கியமானது கார்த்திகை விரதம். 


முருகப் பெருமான், சிவ பெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து அவதரித்தது விசாக நட்சத்திர தினத்தில் என்றாலும், முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை சிறப்பிக்கும் விதமாக கார்த்திகை நட்சத்திரம் முருகனுக்குரியது ஆனது. முருகனை தாயாக இருந்து வளர்ந்ததால் அன்னை பார்வதிக்கு இணையான பெருமையை பெற்றவர்கள் கார்த்திகை பெண்கள்.




சிவ பெருமானிடம், நட்சத்திரமாக இருக்கக் கடவது என வரம் பெற்ற கார்த்திகை பெண்களை, அம்மன் வழிபாட்டிற்குரிய ஆடி மாதத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். கார்த்திகா நட்சத்திரம் ஒவ்வொரு  மாதமும் வருகிறது என்றாலும், தை, கார்த்திகை மற்றும் ஆடி மாதங்களில் வரும் கார்த்திகை நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தாகும். இந்த நாட்களில் முருகப் பெருமானை விரதமிருந்து வழிபடுவது சிறப்பானது. இந்த ஆண்டு ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 09 ம் தேதி கொண்டாடப்படுகிறது.


ஆடிக்கிருத்திகை அன்று செவ்வரளி மாலை சூட்டி, ஷட்கோண கோலம் அமைத்து, சரவணபவ என எழுதி அதில் 6 விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும். ஓம் சரவண பவ மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபட வேண்டும். இதனால் சகல விதமான செல்வங்களும் கிடைக்கும். வாழ்வில் ஏற்பட்டுள்ள திருமண தடை, குழந்தை பாக்கிய தடை, வீடு அல்லது மனை சார்ந்த பிரச்சனைகள், செவ்வாய் தோஷம் ஆகிய அனைத்தும் நீங்கும். முருகப் பெருமான், செவ்வாய் கிரகத்திற்குரிய தெய்வம் என்பதால் முருகனை வழிபடுவதால் செவ்வாய் தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும்.


அதோடு கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய முக்கியமான சிறப்பு தலைமை பதவி தரக் கூடியதாகும். பதவி உயர்விற்காக காத்திருப்பவர்கள், பதவி உயர்வு பெற வேண்டும் என நினைப்பவர்கள் ஆடி கிருத்திகை நாளில் விரதம் இருந்து வழிபடலாம். முடிந்தவர்கள் உபவாசமாக இருந்து வழிபடலாம். முடியாதவர்கள் உப்பில்லாத உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதம் இருப்பது சிறப்பானது ஆகும். 


ஆடி மாதம் தட்சணாயன காலத்தின் துவக்க மாத என்பதால் தொடர்ந்து கிருத்திகை விரதம் இருக்க நினைப்பவர்கள் ஆடி மாதம் கிருத்திகையில் துவங்கி, தை மாதம் கிருத்திகை வரை தொடர்ந்து 6 மாதங்கள் கிருத்திகை விரதம் இருப்பார்கள். இதனால் முருகப் பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

அதிகம் பார்க்கும் செய்திகள்