- ஸ்வர்ணலட்சுமி
விசுவா வசு வருடம் 20 25 ஜூன் மாதம் 25ஆம் தேதி ஆனி மாதம் 11ஆம் நாள் அமாவாசை திதி இன்று மாலை 5 மணி வரை இருக்கிறது பிறகு பிரதமை திதி.
ஒவ்வொரு வருடமும் வரும் ஆடி அமாவாசை, மகா ளய அமாவாசை , தை அமாவாசை போன்றே ஆனி மாதத்தில் வரும் ஆசாட அமாவாசையும் மிகவும் முக்கியமானதும் சிறப்பானதும் ஆக கருதப்படுகிறது.
வழிபாடு: முன்னோர் வழிபாடு செய்யவும், பித்ரு தோஷத்தில் இருந்து எளிதில் விடுபட அமாவாசை ஆன இன்று வழிபாடு செய்ய சிறந்த நாளாகும். சிலர் வீடுகளில் பித்ரு தர்ப்பணம் போன்ற சடங்குகள் செய்வார்கள். பருப்பு சாதம் , பூசணிக்காய் வாழைக்காய் அகத்திக்கீரை, வடை பாயசம் போன்றவற்றை உணவில் சமைத்து படையல் இட்டு வழிபடுவர். சிலர் புனித நதிகளில் நீராடுவார்கள்.
இது மூதாதையர்களுக்கு குறிப்பாக இறந்த பெற்றோருக்கு, முக்கியமாக மாமனார் இல்லாத பெண்கள் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு படையல் இட்டு வழிபட புனிதமான நாள்.

அமாவாசை என்பது "நிலவு இல்லாத நாள் "அதாவது "அ "என்றால் இருக்கவில்லை ,"மா" என்பது சமஸ்கிருதத்தில் சந்திரனை குறிக்கின்ற மற்றொரு வார்த்தையாகும்." வாசை" என்பது வாழுதல் என்பதற்கு அர்த்தமாகும். இவை அனைத்தும் சேர்ந்து "நிலவு இல்லாத நாள்" அல்லது வானத்தில் சந்திரன் வசிக்காத நாள் என்று பொருள்படுகிறது.
இந்த நாள் தான தர்மங்கள் செய்ய உகந்த நாளாகும். சிலர் பிராமணர்களுக்கு உணவு அளிப்பதும், ஜீவராசிகளான பசு, நாய், காகம் ,எறும்பு போன்ற உயிரினங்களுக்கு உணவு அளிப்பதும் சிறப்பானதாகும். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியமான செயலாகும்.
அமாவாசை அணை இன்று சந்திரனின் சக்தி குறைவாக இருக்கும் மேலும் வீடுகளில் பூஜை செய்து காயத்ரி மந்திரம் ஜெபிப்பது ,சிவன் வழிபாடு செய்யவும், முருகன் வழிபாடு செய்யவும் உகந்த நாள்.
மனதில் நல்லவை அல்லாத விஷயங்களை தவிர்த்து நல்ல எண்ணங்களை வைத்து இறைவனை பிரார்த்தனை செய்து ,அமாவாசை ஆன இன்று நல்ல செயல்கள் செய்ய நமக்கு நன்மை தரும் நாளாகும். இவ்வாறு ஒவ்வொரு விரதமும் ,வழிபாடுகளும், கடைபிடிப்பது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வாழ்க்கையில் மென்மேலும் உயரவும் கடவுள் நம்பிக்கையுடன் தன்னம்பிக்கையும் வளரும் என்பது நிச்சயம்.
ஆனி அமாவாசையான இன்று இறைவழிபாடும் முன்னோர்கள் வழிபாடும் செய்து அனைவரும் நல்வாழ்வு வாழ்வோமாக. மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}