மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் தேசிய நெடுஞ்சாலையில், பைக் மீது கார் மோதிய கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் கனகவேல். கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு இன்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். கனகவேல் மகன் காரை ஓட்டி வந்துள்ளார். கார் சிவரக்கோட்டை அருகே வந்த போது கொய்யாபழ வியாபாரி பாண்டி இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது கொய்யாபழ வியாபாரி மீது மோதாமல் இருப்பதற்காக , காரை ஓட்டி வந்த மணி திடீர் என்று பிரேக் போட்டு நிறுத்த முயன்றுள்ளார்.
அப்போது, கார் மணியின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி இருசக்கர வாகனம் மீது மோதியது. அத்துடன் நில்லாமல் கார் தடுப்புகளை தாண்டி தலைக்குப்பற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மணிகண்டன், ரத்தினசாமி, மீனா, சிவா ஆதித்யா, சிவஸ்ரீ ஆகிய 5 பேர் மற்றும் கொய்யாப்பழ வியாபாரி பாண்டி உட்பட 6 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய படுகாயம் அடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விபத்து நடத்த இடத்திற்கு விரைந்து வந்தனர்.விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஏனையோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து அறிந்த கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரை ஓட்டி வந்த மணி என்பவர் மதுரை பஜார் பகுதியில் செல்போன் விற்பனை கடை வைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த இடம் மக்கள் சாலையைக் குறுக்கே கடக்கும் வகையில் உள்ளது. அந்த இடமே விபத்துக்களை வரவேற்கும் பகுதி போல இருக்கிறது. உடனடியாக இந்த இடத்தில் போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று மக்கல் கருத்து தெரிவிக்கின்றனர்.
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு
அமைதியின் சிகரம் யோகினி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் எதிரொலி.. இந்திய பங்குச்சந்தைகள் அதிரடி உயர்வு!
{{comments.comment}}