மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் தேசிய நெடுஞ்சாலையில், பைக் மீது கார் மோதிய கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் கனகவேல். கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு இன்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். கனகவேல் மகன் காரை ஓட்டி வந்துள்ளார். கார் சிவரக்கோட்டை அருகே வந்த போது கொய்யாபழ வியாபாரி பாண்டி இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது கொய்யாபழ வியாபாரி மீது மோதாமல் இருப்பதற்காக , காரை ஓட்டி வந்த மணி திடீர் என்று பிரேக் போட்டு நிறுத்த முயன்றுள்ளார்.
அப்போது, கார் மணியின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி இருசக்கர வாகனம் மீது மோதியது. அத்துடன் நில்லாமல் கார் தடுப்புகளை தாண்டி தலைக்குப்பற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மணிகண்டன், ரத்தினசாமி, மீனா, சிவா ஆதித்யா, சிவஸ்ரீ ஆகிய 5 பேர் மற்றும் கொய்யாப்பழ வியாபாரி பாண்டி உட்பட 6 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய படுகாயம் அடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விபத்து நடத்த இடத்திற்கு விரைந்து வந்தனர்.விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஏனையோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து அறிந்த கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரை ஓட்டி வந்த மணி என்பவர் மதுரை பஜார் பகுதியில் செல்போன் விற்பனை கடை வைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த இடம் மக்கள் சாலையைக் குறுக்கே கடக்கும் வகையில் உள்ளது. அந்த இடமே விபத்துக்களை வரவேற்கும் பகுதி போல இருக்கிறது. உடனடியாக இந்த இடத்தில் போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று மக்கல் கருத்து தெரிவிக்கின்றனர்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}