ஹைதராபாத்: ஹைதராபாத்தில் புஷ்பா 2 படம் பார்க்க சென்று உயிரிழந்த ரசிகைக்கு நடிகர் அல்லு அர்ஜூன் இரங்கல் தெரிவித்ததுடன், ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் புஷ்பா 2. இந்த படம் கடந்த 5ம் தேதி உலகம் முழுவதிலும் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. சந்தன மரக்கடத்தலை மையப்படுத்தி இந்த படத்தின் மையக்கரு அமைந்துள்ள நிலையில், முதல் நாள் மட்டும் ரூ.265 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில்,தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையங்கில் புஷ்பா2 படத்தின் முதல் காட்சியை பார்க்க குடும்பத்துடன் சென்ற ரேவதி என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த தியேட்டருக்கு நடிகர் அல்லு அர்ஜூனும் வந்ததால் கூட்டம் அதிகரித்துள்ளது. ரேவதி என்பவர் உயிரிழந்த நிலையில், அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். நடிகர் அல்லு அர்ஜூன் வந்ததால் தான் கூட்டம் ஏற்பட்டதாக கூறி போலீசார் அல்லு அர்ஜூன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜூன் இச்சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த செய்தி படக்குழுவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ரேவதியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அந்த குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்போம். ரேவதியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த அதிர்ச்சி செய்தியால் எங்களால் கொண்டாட்டங்களில் பங்கேற்க முடியவில்லை.
பாதிக்கப்பட்ட ரேவதியின் குடும்பத்திற்கு தன்னுடைய சார்பில் ரூ.25 லட்சம் நிவராணமாக வழங்கப்படும். மேலும் படக்குழுவினர் எந்த உதவி வேண்டுமாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் அவர்கள் வலியை உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ரேவதியின் மகனின் மருத்துவ செலவையும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!
{{comments.comment}}