சென்னை: தமிழ்நாட்டில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கு வருகிற மார்ச் 16ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் திமுக சார்பில் 4 இடங்களும், அதிமுக சார்பில் 2 இடங்களும் காலியாகின்றன.
2026 ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி என்.வி.என். சோமு ஆகியோர் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த எம். தம்பிதுரை, அதிமுக ஆதரவுடன் எம்.பி. ஆன தமாகா தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரது பதவிக்காலம் முடிவடைகிறது.
இதையடுத்து இந்த ஆறு இடங்களுக்கும் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 26ம் தேதி முதல் மார்ச் 5 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். மார்ச் 6ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மார்ச் 9ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். தேர்தலில் போட்டி இருந்தால், மார்ச் 16ம் தேதி காலை 9 மணி முதல் 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

சட்டசபை உறுப்பினர்கள் வாக்களித்து புதிய எம்.பிக்களை தேர்வு செய்வார்கள். சட்டசபையில் திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால், காலியாகும் 6 இடங்களில் பெரும்பாலான இடங்களை, அதாவது தற்போது உள்ள 4 இடங்களையும் திமுகவே கைப்பற்றும்.
அதிமுக சார்பில் யார் மீண்டும் தேர்வாகப் போகிறார்கள் என்று தெரியவில்லை. தம்பிதுரைக்கு மீண்டும் சீட் கிடைக்குமா அல்லது வேறு யாருக்கேனும் சீட் தரப்படுமா என்று தெரியவில்லை. அதேபோல ஜி. கே.வாசனுக்கு மீண்டும் சீட் கிடைக்குமா அல்லது வேறு யாருக்கேனும் தரப்படுமா என்றும் தெரியவில்லை.
மாநிலங்களவைத் தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே தமிழக சட்டசபைத் தேர்தலும் (ஏப்ரல்/மே 2026) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜ்யசபா தேர்தலை வைத்து திமுக, அதிமுக கூட்டணியில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. காரணம் தேமுதிக மற்றும் பாமக ஆகியவை தலா ஒரு ராஜ்யசபா சீட்டைக் கேட்டு வருகின்றன. அதில் அன்புமணி தற்போது அதிமுக கூட்டணியில்தான் உள்ளார். அவருக்கு சீட் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேபோல தேமுதிகவும் திமுக கூட்டணியில் இணைந்து ஒரு சீட்டைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்ப நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு!
இன்றைய உலகில் நம் பிள்ளைகளை வளர்ப்பதில் உள்ள சவால்கள்
சின்ன பொண்ணு வேணுமா பெரிய பொண்ணு வேணுமா... விஷாலின் விளையாட்டுக்கள் 11
ஓர் நதி ஓர் பௌர்ணமி ஓர் ஓடம்!
Idli Podi: இட்லி பொடி.. சுவையான பாரம்பரிய முறையில் எப்படி தயாரிக்கலாம்?
நிழல் மறைந்த நாள்.. தேவகோட்டை மாணவர்கள் பொதுமக்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு!
வயதானாலும் நாங்களும் நல்லுள்ளங்களே!
Kalaiarasi Poem: ஆசை !
சிங்கப்பூரில் சிறப்பாக நடந்தேறிய பொழில் இலக்கியச் சங்கமம் 2026
{{comments.comment}}