சென்னை: யூட்யூப் மூலம் பிரபலமாகி பின்னர் நடிகராக மாறிய பிஜிலி ரமேஷ் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். குடிப்பழக்கத்தால் இவரது உயிர் பறி போயுள்ளது.
பிளாக் ஷீப் youtube சேனல் மூலம் பிரபலமானவர் நடிகர் பிஜிலி ரமேஷ். இதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை படம் மூலம் திரைத்துறையில் ஒரு காமெடி நடிகராக அவதாரம் எடுத்தார். இதனைத் தொடர்ந்து தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவே பொன்மகள் வந்தாள், கோமாளி, ஏ ஒன், ஜாம்பி, நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
குடிப்பழக்கம் இருந்த பிஜிலி ரமேஷ் அளவுக்கு அதிகமாக குடித்துக் குடித்து உடலைக் கெடுத்துக் கொண்டார். கடந்த சில மாதங்களாகவே பிஜிலி ரமேஷுக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
46 வயதான அவர், இன்று அதிகாலை பிஜிலி ரமேஷ் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இன்று மாலை 5 மணிக்கு எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது. இதற்காக ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
குடிப்பழக்கத்தால் பலரும் உயிரிழந்து வருகின்றனர். குடிக்கு அடிமையாகி குடும்பத்தைத் தொலைத்து, உடல் நலனைத் தொலைத்து எத்தனையோ பேர் சீரழிந்து போகின்றனர். இதே சினிமா உலகில் குடிக்கு அடிமையாகி பின்னர் அதிலிருந்து மீண்டு படித்து பட்டம் பல பெற்று குடும்பத்தை சூப்பராக பார்க்கும் முத்துக்காளையும் ஒரு நடிகராக வலம் வந்து கொண்டுதான் உள்ளார். ஆனால் பிஜிலி ரமேஷ் அந்தக் குடியிலிருந்து மீள முடியாமல் கடைசியில் அதற்குப் பலியாகியிருப்பது பலரையும் வருத்தப்பட வைத்துள்ளது.
இதைப் பார்த்தாவது நாலு பேர் குடியை விட்டால் கூட நல்லது.. ஆனால் செய்வார்களா என்பதுதான் பெரும் கேள்வியாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}