மும்பை: நடிகரும், சிவசேனா கட்சியைச் சேர்ந்தவருமான கோவிந்தா, தனது வீட்டில் துப்பாக்கியைத் துடைத்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக டிரிக்கரில் கை பட்டு அது அழுத்தி தோட்டா, காலில் பாய்ந்து விட்டது. காயத்துடன் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இன்று காலையில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கோவிந்தாவுக்கு அபாயகரமான காயம் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது.
நடிகர் கோவிந்தா, பிரபல இந்தி நடிகர். இந்தி, போஜ்பூரி என பல்வேறு படங்களில் கோவிந்தா நடித்துள்ளார். முன்னணி நடிகரான அவர் சிவசேனா கட்சியிலும் இணைந்து செயல்பட்டு வருகிறார். இன்று காலை தனது வீட்டில் தன்னுடைய தனிப்பட்ட ரிவால்வரை அவர் துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கை டிரிக்கரை அழுத்தி விட்டது போலும். இதனால் தோட்டா அவரது காலில் பாய்ந்துள்ளது.
காலில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்ததால் வலியால் துடித்துள்ளார் கோவிந்தா. உடனடியாக அவரை வீட்டில் இருந்தோர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் அபாய கட்டத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இனி அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது: டாக்டர் ராமதாஸ் போட்ட கண்டிஷன்!
புதுச்சேரி துணை நிலை ஆளுநருடன் மோதல்.. சமாதானமானார் முதல்வர் என். ரங்கசாமி!
மதுரையில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்: டாக்டர் அன்புமணி
பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா.. 29 தெலுங்கு நடிகர், நடிகைகள் மீது வழக்கு
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
தமிழக வெற்றிக் கழகம் என்று படகுகளில் எழுதினால் மானியம் மறுப்பதா.. விஜய் கண்டனம்
அதிமுகவை மீட்க முடியாதவர் பழனிச்சாமி தமிழகத்தை மீட்பேன் என்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
எதிர்க்கட்சித் தலைவர் சங்கிகள்... எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசித்து வருகிறார்: அமைச்சர் சேகர்பாபு
புதுப் புது வரலாறு படைக்கக் காத்திருக்கும் சுப்மன் கில்.. 4 உலக சாதனைகளுக்கு ஆபத்து!
{{comments.comment}}