மும்பை: நடிகரும், சிவசேனா கட்சியைச் சேர்ந்தவருமான கோவிந்தா, தனது வீட்டில் துப்பாக்கியைத் துடைத்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக டிரிக்கரில் கை பட்டு அது அழுத்தி தோட்டா, காலில் பாய்ந்து விட்டது. காயத்துடன் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இன்று காலையில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கோவிந்தாவுக்கு அபாயகரமான காயம் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது.
நடிகர் கோவிந்தா, பிரபல இந்தி நடிகர். இந்தி, போஜ்பூரி என பல்வேறு படங்களில் கோவிந்தா நடித்துள்ளார். முன்னணி நடிகரான அவர் சிவசேனா கட்சியிலும் இணைந்து செயல்பட்டு வருகிறார். இன்று காலை தனது வீட்டில் தன்னுடைய தனிப்பட்ட ரிவால்வரை அவர் துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கை டிரிக்கரை அழுத்தி விட்டது போலும். இதனால் தோட்டா அவரது காலில் பாய்ந்துள்ளது.
காலில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்ததால் வலியால் துடித்துள்ளார் கோவிந்தா. உடனடியாக அவரை வீட்டில் இருந்தோர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் அபாய கட்டத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு
அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!
அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
{{comments.comment}}