மும்பை: நடிகரும், சிவசேனா கட்சியைச் சேர்ந்தவருமான கோவிந்தா, தனது வீட்டில் துப்பாக்கியைத் துடைத்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக டிரிக்கரில் கை பட்டு அது அழுத்தி தோட்டா, காலில் பாய்ந்து விட்டது. காயத்துடன் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இன்று காலையில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கோவிந்தாவுக்கு அபாயகரமான காயம் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது.

நடிகர் கோவிந்தா, பிரபல இந்தி நடிகர். இந்தி, போஜ்பூரி என பல்வேறு படங்களில் கோவிந்தா நடித்துள்ளார். முன்னணி நடிகரான அவர் சிவசேனா கட்சியிலும் இணைந்து செயல்பட்டு வருகிறார். இன்று காலை தனது வீட்டில் தன்னுடைய தனிப்பட்ட ரிவால்வரை அவர் துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கை டிரிக்கரை அழுத்தி விட்டது போலும். இதனால் தோட்டா அவரது காலில் பாய்ந்துள்ளது.
காலில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்ததால் வலியால் துடித்துள்ளார் கோவிந்தா. உடனடியாக அவரை வீட்டில் இருந்தோர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் அபாய கட்டத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி
சந்தோஷம்!
{{comments.comment}}