மும்பை: நடிகரும், சிவசேனா கட்சியைச் சேர்ந்தவருமான கோவிந்தா, தனது வீட்டில் துப்பாக்கியைத் துடைத்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக டிரிக்கரில் கை பட்டு அது அழுத்தி தோட்டா, காலில் பாய்ந்து விட்டது. காயத்துடன் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இன்று காலையில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கோவிந்தாவுக்கு அபாயகரமான காயம் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது.

நடிகர் கோவிந்தா, பிரபல இந்தி நடிகர். இந்தி, போஜ்பூரி என பல்வேறு படங்களில் கோவிந்தா நடித்துள்ளார். முன்னணி நடிகரான அவர் சிவசேனா கட்சியிலும் இணைந்து செயல்பட்டு வருகிறார். இன்று காலை தனது வீட்டில் தன்னுடைய தனிப்பட்ட ரிவால்வரை அவர் துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கை டிரிக்கரை அழுத்தி விட்டது போலும். இதனால் தோட்டா அவரது காலில் பாய்ந்துள்ளது.
காலில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்ததால் வலியால் துடித்துள்ளார் கோவிந்தா. உடனடியாக அவரை வீட்டில் இருந்தோர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் அபாய கட்டத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?
முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?
இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இசைஞானி என்னும் இசைத்தோணி!
Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)
பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்
இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து
கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!
{{comments.comment}}