சென்னை: கலை மற்றும் சமூகத்திற்கு என் தந்தை ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் , தமிழக அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகர் கார்த்தி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,

ஒரு நடிகராக பல தலைமுறைகளைக் கவர்ந்ததோடு, ஓவியக் கனவு மீது கொண்ட பேராதரவு அப்பாவின் வாழ்க்கையை தனித்துவம் ஆக்கியது.
கம்பன் என் காதலன், திருக்குறள் 100, மகாபாரத உரை போன்ற பெரும் இலக்கியங்களை மக்கள் மனங்களில் நவீனமாக பதிய வைத்து அவரின் பணி, தமிழ் மரபை பாதுகாக்கும் வாழ்நாள் அர்ப்பணிப்பு.
அப்பாவின் கலைச்சேவையை பெருமைப்படுத்தும் விதமாக, தமிழக முதலமைச்சர் கைகளால் அப்பாவுக்கு வழங்கப்பட்ட கௌரவ முனைவர் பட்டம், எங்களுக்கும், கலை உலகிற்கும் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. தமிழக முதலமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் எங்கள் அன்பார்ந்த நன்றிகள்.
இந்த அங்கீகாரம் அவரது ஆழ்ந்த உழைப்புக்கும் கலை இலக்கிய ஈடுபாடுக்கும் கிடைத்த உரிய மரியாதை.
ஒரு மகனாக நீங்கள் காட்டிய வழியில் நடப்பதை பெருமையாக உணர்கிறேன்.
இந்த தருணத்தில் கௌரவ முனைவர் பட்டம் பெற்ற திரு குருஸ்வாமி சந்திரசேகர் அவர்களுக்கும் எங்களின் அன்பான வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி
சந்தோஷம்!
{{comments.comment}}