சென்னை: என் மீதும், மெய்யழகன் மீதும் அன்பை பொழிந்ததற்கு உங்களுக்கு எவ்வளவு நன்றிக்கடன்பட்டுள்ளேன் என்பதை கூற முடியவில்லை என்று நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் ஸ்வாமி நடிப்பில் கடந்த 27ம் தேதி வெளியான படம் மெய்யழகன். கோவிந்த் வசந்தா இசையில், நடிகர் சூர்யா, ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, கருணாகரன் உள்ளிடோர் நடித்துள்ளனர்.

நடிகர் நாகர்ஜூனா இப்படத்தை பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், சகோதரர் கார்த்தி.. நீங்கள் நடித்த மெய்யழகன் படத்தை பார்த்தேன். நீங்களும் அரவிந்தசாமியும் நன்றாக நடித்திருந்தீர்கள். நீங்கள் வரும் காட்சி எல்லாம் புன்னகையோடு பார்த்து ரசித்தேன். பின்பு அதே புன்னகையோடு தூங்கச் சென்றேன். என் சிறு வயது நினைவுகளை நினைவூட்டியது, அதோடு பட நினைவுகளும் வந்தது. மெய்யழகன் படத்தை மக்களும் விமர்சனங்களும் மனதார பாராட்டுவதை பார்க்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மெய்யழகன் படக்குழுவிற்கு என்னுடைய வாழ்த்துகள் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நடிகர் கார்த்தி, நாகர்ஜூனாவுக்கு நன்றி தெரிவித்திருந்தார். அதில், நல்ல சினிமாக்களை நீங்கள் பாராட்டுவது எங்களை சிறந்து விளங்க தூண்டுகிறது என தெரிவித்திருந்தார். மெய்யழகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்தி.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மெய்யழகன் கதையை நான் படித்தபோது, என் மனம் அன்பால் நிறைந்து இருந்தது. அதே அன்பை நீங்களும் உணர வேண்டும் என விரும்பினேன். இது உங்களுக்கு புதிதாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். என் மீதும், மெய்யழகன் மீதும் அன்பை பொழிந்ததற்கு உங்களுக்கு எவ்வளவு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்பதை கூறமுடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!
இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு
நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!
{{comments.comment}}