அத்தானை விழுந்து விழுந்து ரசிக்கும் ரசிகர்கள்.. மெய்யழகன் வெற்றிக்கு.. கார்த்தி நன்றி!

Sep 30, 2024,05:03 PM IST

சென்னை: என் மீதும், மெய்யழகன் மீதும் அன்பை பொழிந்ததற்கு உங்களுக்கு எவ்வளவு நன்றிக்கடன்பட்டுள்ளேன் என்பதை கூற முடியவில்லை என்று நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் ஸ்வாமி  நடிப்பில் கடந்த 27ம் தேதி வெளியான  படம் மெய்யழகன். கோவிந்த் வசந்தா இசையில், நடிகர் சூர்யா, ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, கருணாகரன் உள்ளிடோர் நடித்துள்ளனர்.




நடிகர் நாகர்ஜூனா இப்படத்தை பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், சகோதரர் கார்த்தி.. நீங்கள் நடித்த மெய்யழகன்  படத்தை பார்த்தேன். நீங்களும் அரவிந்தசாமியும் நன்றாக நடித்திருந்தீர்கள். நீங்கள் வரும் காட்சி எல்லாம் புன்னகையோடு பார்த்து ரசித்தேன். பின்பு அதே புன்னகையோடு தூங்கச் சென்றேன். என் சிறு வயது நினைவுகளை நினைவூட்டியது, அதோடு பட நினைவுகளும் வந்தது. மெய்யழகன் படத்தை மக்களும் விமர்சனங்களும் மனதார பாராட்டுவதை பார்க்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மெய்யழகன் படக்குழுவிற்கு என்னுடைய வாழ்த்துகள் என தெரிவித்திருந்தார். 


இதையடுத்து நடிகர் கார்த்தி, நாகர்ஜூனாவுக்கு நன்றி தெரிவித்திருந்தார். அதில், நல்ல சினிமாக்களை நீங்கள் பாராட்டுவது எங்களை சிறந்து விளங்க தூண்டுகிறது என தெரிவித்திருந்தார். மெய்யழகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்தி.


அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மெய்யழகன் கதையை நான் படித்தபோது, என் மனம் அன்பால் நிறைந்து இருந்தது. அதே அன்பை நீங்களும் உணர வேண்டும் என விரும்பினேன். இது உங்களுக்கு புதிதாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். என் மீதும், மெய்யழகன் மீதும் அன்பை பொழிந்ததற்கு உங்களுக்கு எவ்வளவு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்பதை கூறமுடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?

news

ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு

news

Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

news

குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்

news

Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்

news

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு

news

ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

news

"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!

news

சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்