அத்தானை விழுந்து விழுந்து ரசிக்கும் ரசிகர்கள்.. மெய்யழகன் வெற்றிக்கு.. கார்த்தி நன்றி!

Sep 30, 2024,05:03 PM IST

சென்னை: என் மீதும், மெய்யழகன் மீதும் அன்பை பொழிந்ததற்கு உங்களுக்கு எவ்வளவு நன்றிக்கடன்பட்டுள்ளேன் என்பதை கூற முடியவில்லை என்று நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் ஸ்வாமி  நடிப்பில் கடந்த 27ம் தேதி வெளியான  படம் மெய்யழகன். கோவிந்த் வசந்தா இசையில், நடிகர் சூர்யா, ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, கருணாகரன் உள்ளிடோர் நடித்துள்ளனர்.




நடிகர் நாகர்ஜூனா இப்படத்தை பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், சகோதரர் கார்த்தி.. நீங்கள் நடித்த மெய்யழகன்  படத்தை பார்த்தேன். நீங்களும் அரவிந்தசாமியும் நன்றாக நடித்திருந்தீர்கள். நீங்கள் வரும் காட்சி எல்லாம் புன்னகையோடு பார்த்து ரசித்தேன். பின்பு அதே புன்னகையோடு தூங்கச் சென்றேன். என் சிறு வயது நினைவுகளை நினைவூட்டியது, அதோடு பட நினைவுகளும் வந்தது. மெய்யழகன் படத்தை மக்களும் விமர்சனங்களும் மனதார பாராட்டுவதை பார்க்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மெய்யழகன் படக்குழுவிற்கு என்னுடைய வாழ்த்துகள் என தெரிவித்திருந்தார். 


இதையடுத்து நடிகர் கார்த்தி, நாகர்ஜூனாவுக்கு நன்றி தெரிவித்திருந்தார். அதில், நல்ல சினிமாக்களை நீங்கள் பாராட்டுவது எங்களை சிறந்து விளங்க தூண்டுகிறது என தெரிவித்திருந்தார். மெய்யழகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்தி.


அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மெய்யழகன் கதையை நான் படித்தபோது, என் மனம் அன்பால் நிறைந்து இருந்தது. அதே அன்பை நீங்களும் உணர வேண்டும் என விரும்பினேன். இது உங்களுக்கு புதிதாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். என் மீதும், மெய்யழகன் மீதும் அன்பை பொழிந்ததற்கு உங்களுக்கு எவ்வளவு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்பதை கூறமுடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக - பாஜக கூட்டணி: யார் யாருக்கு எத்தனை சீட்.. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது!

news

கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கே...மலேசியாவில் அரசியல் பேச விஜய்க்கு தடை!

news

புத்தகப் பிரியர்களின் கவனத்திற்கு.. 49-வது சென்னை புத்தகத் திருவிழா தேதி மாற்றம்!

news

சார்பு ஆய்வாளர் தேர்வில்... தமிழ் கேள்விகளை நீக்கியுள்ள திமுக அரசிற்கு கண்டனம்: அண்ணாமலை

news

மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... விஜய் மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டம்...பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்!

news

பொங்கல் பரிசுடன் ரூ.5000 வழங்க வேண்டும்...எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உதயநிதியை முதல்வராக்குவதே திமுக.,வின் முக்கிய நோக்கம்...நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

news

வி..யில் தொடங்கும் தொகுதியில் போட்டியிடுவாரா விஜய்??.. பரபரக்கும் புதிய தகவல்!

news

பெங்களூருவின் அழகிய கலைப் பொக்கிஷம்.. பனசங்கரி சிற்பப் பூங்கா

அதிகம் பார்க்கும் செய்திகள்