அப்பாவைப் பெருமைப்படுத்திய ஸ்டாலின்.. நடிகர் மோகன்ராம் நெகிழ்ச்சி

Mar 29, 2023,12:18 PM IST

சென்னை: எனது தந்தை வி.பி.ராமன் பெயரை அவ்வை சண்முகம் சாலையின் ஒரு பகுதிக்கு சூட்ட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருப்பது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. முதல்வருக்கு நன்றி என்று நடிகர் மோகன்ராமன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரலாக திகழ்ந்தவர் வி.பி.ராமன் எனப்படும் வெங்கட பட்டாபி ராமன். திமுகவில் இணைந்து செயல்பட்டவரும் கூட. மிகச் சிறந்த சட்ட நிபுணராக அறியப்படும் இவரது மகன்தான் நடிகர் மோகன்ராமன். மோகன்ராமின் மகள் வித்யுலேகாவும் நடிகைதான்.



இந்த நிலையில் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில்தான் வி.பி.ராமன் வசித்த வீடு உள்ளது. இந்த வீடு உள்ள சாலைக்கு தங்களது தந்தையின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று ராமன் குடும்பத்தினர் தமிழ்நாடு அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் கோரிக்கை வைத்திருந்தனர். அதை ஏற்று வி.பி.ராமன் பெயரைச் சூட்ட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நடிகர் மோகன்ராமன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில்,  அவ்வை சண்முகம் சாலையின் ஒரு பகுதிக்கு எங்களது தந்தை வி.பி.ராமன் பெயர் சூட்ட உத்தரவிட்டிருப்பது மிகவும் கெளரவமானதாக உணர்கிறோம்.. மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எங்களது இதயப்பூர்வமான நன்றிகள். மிகப் பெரிய கெளரவம். சென்னை மேயர், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கும் எங்களது நன்றிகள் என்று மோகன்ராமன் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்