தூத்துக்குடி: தூத்துக்குடியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று நடிகர் பிரசாந்த் நிவாரண பொருட்களை வழங்கினார்.
வடகிழக்கு பருவமழை தீவிர அடைந்து கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த மழையில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவிகள் வழங்கி வருகின்றன. தமிழக அரசு சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.6000மும், மற்றவர்களுக்கு ரூ.1000மும் வழங்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் முகாம்களில் உள்ளவர்களுக்கு உதவிகள் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் பிரசாந்த் இன்று தூத்துக்குடி மற்றும் நெல்லையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சமீபத்தில்தான் நடிகர் விஜய் தூத்துகுடி, நெல்லை மக்களுக்கு நேரில் வந்து நலத்திட்ட உதவிகளை நேரில் வந்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பிரஷாந்த்தும் நேரில் வந்து உதவிகளை வழங்கி மக்களை மகிழ்வித்துள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}