மீண்டும் விறுவிறுப்படையும்.. வேட்டையன் ஷூட்டிங்.. மும்பை புறப்பட்டார் ரஜினிகாந்த்

May 02, 2024,12:28 PM IST

சென்னை:  நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்து வரும் வேட்டையன் படப்படிப்பிற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டார்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 170வது படம் வேட்டையன். இந்த படத்தை ஜெய் பீம் படத்தை  இயக்கிய இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாகவும் படம் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கடந்த ஆண்டில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதுடன் 600 கோடி அளவில் வசூலித்தது. அதனைத்தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து டிஜே  ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ள நிலையில், இப்படத்தின் பாடல் காட்சிகள் தற்போது மும்பையில் நடைபெற உள்ளது. 


இந்நிலையில், ரஜினிகாந்த்-மஞ்சு வாரியர் பாடல் காட்சிகள் மலையாள பட ஸ்டைலில் படமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, இன்று சென்னை விமான நிலையம் வந்த ரஜினி காரை விட்டு இறங்கி கம்பீரமாக நடந்து சென்ற காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ள நிலையில், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி.

சமீபத்திய செய்திகள்

news

சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு

news

ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்

news

எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி

news

அடுத்த வாரம் மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு

news

உலக யோகா தின விழா: மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

news

ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை

news

இன்று ஒரு புதிய உதயம்...ஆளுநர் நெகிழ்ச்சி பதிவு...எதுக்கு தெரியுமா?

news

நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!

news

எம்மை குளிர்விக்க வந்தவளே....!

அதிகம் பார்க்கும் செய்திகள்