மீண்டும் விறுவிறுப்படையும்.. வேட்டையன் ஷூட்டிங்.. மும்பை புறப்பட்டார் ரஜினிகாந்த்

May 02, 2024,12:28 PM IST

சென்னை:  நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்து வரும் வேட்டையன் படப்படிப்பிற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டார்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 170வது படம் வேட்டையன். இந்த படத்தை ஜெய் பீம் படத்தை  இயக்கிய இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாகவும் படம் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கடந்த ஆண்டில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதுடன் 600 கோடி அளவில் வசூலித்தது. அதனைத்தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து டிஜே  ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ள நிலையில், இப்படத்தின் பாடல் காட்சிகள் தற்போது மும்பையில் நடைபெற உள்ளது. 


இந்நிலையில், ரஜினிகாந்த்-மஞ்சு வாரியர் பாடல் காட்சிகள் மலையாள பட ஸ்டைலில் படமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, இன்று சென்னை விமான நிலையம் வந்த ரஜினி காரை விட்டு இறங்கி கம்பீரமாக நடந்து சென்ற காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ள நிலையில், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி.

சமீபத்திய செய்திகள்

news

Monday Motivational Poem: நிலா!

news

பிரேசிலின் உலகக்கோப்பை அதிர்ச்சித் தோல்வி.. ஓய்வை அறிவித்தார் சூப்பர் ஸ்டார் நெய்மர்!

news

விசிகவுடன் கூட்டணியில்லை என்று திமுகவே அறிவித்துவிட்டது" – திருமாவளவன் விளக்கம்

news

பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?

news

ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு

news

Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

news

குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்

news

Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்

news

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்