சென்னை: தன்னைக் காண வீடு தேடி வந்த நடிகர் சிவக்குமார் குறித்து உருக்கமான பதிவு போட்டுள்ளார் நடிகை ராதிகா சிவக்குமார்.
திரையுலகில் பாச மலர்களாக பலர் வலம் வருவார்கள். அந்த வரிசையில் காலம் காலமாக முதலிடத்தில் இருப்பவர்கள் சிவாஜி கணேசன் - சாவித்திரி தான். இந்த பாச மலர்களைப் போல ஒரு அண்ணன் தங்கைப் பாசத்தை அதற்கு முன்பும் கூட பெரிதாக யாரும் பார்த்ததில்லை. பிறகும் கூட வந்ததில்லை. திரையிலும் பாசத்தைக் கொட்டிய இவர்கள் நிஜத்திலும் கூடப் பிறந்த அண்ணன் தங்கையாகவே வாழ்ந்து முடிந்தவர்கள்.
சிவாஜி - சாவித்திரிக்கு அடுத்து என்று சொன்னால் அது சிவக்குமார் ராதிகாதான். இவர்கள் இருவருக்கும் இடையிலான பாசப் பிணைப்பு அந்த அளவுக்கு வலுவானது. உணர்வுப்பூர்வமானது. திரையில் அண்ணன் தங்கையாக நடித்த இவர்கள் நிஜத்திலும் அப்படியே இருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் அண்ணே என்று ராதிகா ஓடிச்செல்வத்தையும் பாசத்துடன் வாஞ்சையாக சிவக்குமார் பேசுவதையும் அடிக்கடி பார்த்திருக்கிறோம்.
நடிகர் சங்கத் தேர்தலின்போது சிவக்குமார் குடும்பம் ஒரு பக்கமும், ராதிகா, சரத்குமார் மறுபக்கமுமாக பிரிந்து நின்று கடுமையாக வார்த்தைகளை விட்டுப் பிரச்சாரம் செய்து மோதிக் கொண்ட போதும் கூட இந்த அண்ணன் தங்கை பந்தம் பாதிக்கப்படவில்லை. இன்று வரை இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பாசத்தைப் பொழிந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கால் வலி காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வரும் நடிகை ராதிகாவை சந்திக்க அவரது வீடு தேடி வந்தார் சிவக்குமார். அவரை வரவேற்று மகிழ்ந்த ராதிகா, நீண்ட நேரம் பேசி மகிழ்ந்துள்ளார். கையோடு தனது ஓவியங்களின் தொகுப்பையும் கொண்டு ராதிகாவிடம் கொடுத்து விளக்கி மகிழ்ந்தார் சிவக்குமார்.
வீடியோ: சிவக்குமார் - ராதிகா சந்திப்பு
இதுகுறித்து ராதிகா கூறுகையில், சிவக்குமார் அண்ணனுடனான பந்தம் வாழ்நாள் முழுவதும் தொடரும். என்னைப் பார்க்க வந்திருந்தார். நிறைய படங்கள் ஓவியங்கள், எங்களது திரைப்பயணம் தொடர்பான படங்களையும் கொண்டு வந்து காட்டினார் என்று கூறி மகிழ்ந்துள்ளார்.
நடிகை ராதிகா சமீபத்தில் தனது கணவர் சரத்குமாருடன் இணைந்து பாஜகவில் சேர்ந்தார். அதன் பிறகு மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அவர் போட்டியிட்டார். இந்த தேர்தலுக்காக அவர் தீவிரப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}