சென்னை: தன்னைக் காண வீடு தேடி வந்த நடிகர் சிவக்குமார் குறித்து உருக்கமான பதிவு போட்டுள்ளார் நடிகை ராதிகா சிவக்குமார்.
திரையுலகில் பாச மலர்களாக பலர் வலம் வருவார்கள். அந்த வரிசையில் காலம் காலமாக முதலிடத்தில் இருப்பவர்கள் சிவாஜி கணேசன் - சாவித்திரி தான். இந்த பாச மலர்களைப் போல ஒரு அண்ணன் தங்கைப் பாசத்தை அதற்கு முன்பும் கூட பெரிதாக யாரும் பார்த்ததில்லை. பிறகும் கூட வந்ததில்லை. திரையிலும் பாசத்தைக் கொட்டிய இவர்கள் நிஜத்திலும் கூடப் பிறந்த அண்ணன் தங்கையாகவே வாழ்ந்து முடிந்தவர்கள்.
சிவாஜி - சாவித்திரிக்கு அடுத்து என்று சொன்னால் அது சிவக்குமார் ராதிகாதான். இவர்கள் இருவருக்கும் இடையிலான பாசப் பிணைப்பு அந்த அளவுக்கு வலுவானது. உணர்வுப்பூர்வமானது. திரையில் அண்ணன் தங்கையாக நடித்த இவர்கள் நிஜத்திலும் அப்படியே இருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் அண்ணே என்று ராதிகா ஓடிச்செல்வத்தையும் பாசத்துடன் வாஞ்சையாக சிவக்குமார் பேசுவதையும் அடிக்கடி பார்த்திருக்கிறோம்.
நடிகர் சங்கத் தேர்தலின்போது சிவக்குமார் குடும்பம் ஒரு பக்கமும், ராதிகா, சரத்குமார் மறுபக்கமுமாக பிரிந்து நின்று கடுமையாக வார்த்தைகளை விட்டுப் பிரச்சாரம் செய்து மோதிக் கொண்ட போதும் கூட இந்த அண்ணன் தங்கை பந்தம் பாதிக்கப்படவில்லை. இன்று வரை இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பாசத்தைப் பொழிந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கால் வலி காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வரும் நடிகை ராதிகாவை சந்திக்க அவரது வீடு தேடி வந்தார் சிவக்குமார். அவரை வரவேற்று மகிழ்ந்த ராதிகா, நீண்ட நேரம் பேசி மகிழ்ந்துள்ளார். கையோடு தனது ஓவியங்களின் தொகுப்பையும் கொண்டு ராதிகாவிடம் கொடுத்து விளக்கி மகிழ்ந்தார் சிவக்குமார்.
வீடியோ: சிவக்குமார் - ராதிகா சந்திப்பு
இதுகுறித்து ராதிகா கூறுகையில், சிவக்குமார் அண்ணனுடனான பந்தம் வாழ்நாள் முழுவதும் தொடரும். என்னைப் பார்க்க வந்திருந்தார். நிறைய படங்கள் ஓவியங்கள், எங்களது திரைப்பயணம் தொடர்பான படங்களையும் கொண்டு வந்து காட்டினார் என்று கூறி மகிழ்ந்துள்ளார்.
நடிகை ராதிகா சமீபத்தில் தனது கணவர் சரத்குமாருடன் இணைந்து பாஜகவில் சேர்ந்தார். அதன் பிறகு மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அவர் போட்டியிட்டார். இந்த தேர்தலுக்காக அவர் தீவிரப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}