அண்ணன் எங்க அண்ணன்.. தங்கையைக் காண வந்த சிவக்குமார்.. ராதிகா சரத்குமார் எமோஷனல் பதிவு!

May 18, 2024,09:14 AM IST

சென்னை: தன்னைக் காண வீடு தேடி வந்த நடிகர் சிவக்குமார் குறித்து உருக்கமான பதிவு போட்டுள்ளார் நடிகை ராதிகா சிவக்குமார்.


திரையுலகில் பாச மலர்களாக பலர் வலம் வருவார்கள். அந்த வரிசையில் காலம் காலமாக முதலிடத்தில் இருப்பவர்கள் சிவாஜி கணேசன் - சாவித்திரி தான். இந்த பாச மலர்களைப் போல ஒரு அண்ணன் தங்கைப் பாசத்தை அதற்கு முன்பும் கூட பெரிதாக யாரும் பார்த்ததில்லை. பிறகும் கூட வந்ததில்லை.  திரையிலும் பாசத்தைக் கொட்டிய இவர்கள் நிஜத்திலும் கூடப் பிறந்த அண்ணன் தங்கையாகவே வாழ்ந்து முடிந்தவர்கள்.


சிவாஜி - சாவித்திரிக்கு அடுத்து என்று சொன்னால் அது சிவக்குமார் ராதிகாதான். இவர்கள் இருவருக்கும் இடையிலான பாசப் பிணைப்பு அந்த அளவுக்கு வலுவானது. உணர்வுப்பூர்வமானது. திரையில் அண்ணன் தங்கையாக நடித்த இவர்கள் நிஜத்திலும் அப்படியே இருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் அண்ணே என்று ராதிகா ஓடிச்செல்வத்தையும் பாசத்துடன் வாஞ்சையாக சிவக்குமார் பேசுவதையும் அடிக்கடி பார்த்திருக்கிறோம்.




நடிகர் சங்கத் தேர்தலின்போது சிவக்குமார் குடும்பம் ஒரு பக்கமும், ராதிகா, சரத்குமார் மறுபக்கமுமாக பிரிந்து நின்று கடுமையாக வார்த்தைகளை விட்டுப் பிரச்சாரம் செய்து மோதிக் கொண்ட போதும் கூட இந்த அண்ணன் தங்கை பந்தம் பாதிக்கப்படவில்லை. இன்று வரை இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பாசத்தைப் பொழிந்து கொண்டுள்ளனர்.


இந்த நிலையில் கால் வலி காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வரும் நடிகை ராதிகாவை சந்திக்க அவரது வீடு தேடி வந்தார் சிவக்குமார். அவரை வரவேற்று மகிழ்ந்த ராதிகா, நீண்ட நேரம் பேசி மகிழ்ந்துள்ளார். கையோடு தனது ஓவியங்களின் தொகுப்பையும் கொண்டு  ராதிகாவிடம் கொடுத்து விளக்கி மகிழ்ந்தார் சிவக்குமார்.


வீடியோ: சிவக்குமார் - ராதிகா சந்திப்பு


இதுகுறித்து ராதிகா கூறுகையில், சிவக்குமார் அண்ணனுடனான பந்தம் வாழ்நாள் முழுவதும் தொடரும். என்னைப் பார்க்க வந்திருந்தார். நிறைய படங்கள் ஓவியங்கள், எங்களது திரைப்பயணம் தொடர்பான படங்களையும் கொண்டு வந்து காட்டினார் என்று கூறி மகிழ்ந்துள்ளார்.


நடிகை ராதிகா சமீபத்தில் தனது கணவர் சரத்குமாருடன் இணைந்து பாஜகவில் சேர்ந்தார். அதன் பிறகு மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அவர் போட்டியிட்டார். இந்த தேர்தலுக்காக அவர் தீவிரப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம். 

சமீபத்திய செய்திகள்

news

அருப்புக்கோட்டையில் ஒரு அற்புத மனுஷி.. கல்விதான் உயர்த்திப் பிடிக்கும்.. வியக்க வைக்கும் பிரியா!

news

கரூர் உயிரிழப்பு சம்பவம்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது: சீமான்!

news

24ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அன்புமணி தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்வது நல்லது.. கட்சி தொடங்குமாறு 3 முறை சொல்லி விட்டேன்: ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

news

லன்ச் டைம் வந்துருச்சா.. அதுக்கு முன்னாடி.. இன்னிக்கு என்ன நாள் தெரியுமா.. உலக உணவு தினம்!

news

ரயில் பயணிகளுக்கு புதிய வசதி.. கேன்சல்லேஷன் கட்டணம் இல்லாமலேயே டிக்கெட்டை மாத்திக்கலாம்!

news

புதிய உச்சத்தில் தங்கம் விலை...ஒரு கிராம் ரூ.12,000 ஐ நெருங்கியது... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

news

ரஷ்ய எண்ணெயை வாங்க மாட்டோம்.. பிரதமர் மோடி உறுதியளித்ததாக டிரம்ப் தகவல்.. ராகுல் காந்தி கண்டனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்