சென்னை: நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவர் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவரைப் பற்றிய தவறான தகவல்கள் பரப்புவதை தவிர்க்கும் மாறும் அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சின்னத்திரையில் கனா காணும் காலம் சீரியல் தொடர் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஸ்ரீ வெள்ளித்திரையில் வழக்கு எண் 18 கீழ் 9 திரைப்படம் மூலம் அறிமுகமானார். இவர் அடித்த முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இதனை தொடர்ந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம் போன்ற படங்களில் மூலம் புகழ்பெற்றார். இறுதியாக நடிகர் ஸ்ரீ நடிப்பில் வெளியான இறுக்கப்பற்று திரைப்படமும் பல்வேறு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதன் பிறகு சமீப காலமாகவே வாய்ப்புகள் எதுவும் இன்றி, ஸ்ரீ நடிப்பில் படங்கள் ஏதும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தற்போது நடிகர் ஸ்ரீ யின் உடல்நிலை குறித்து சோசியல் மீடியாக்களில் வினோதமான வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகி பல்வேறு பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது இந்த வீடியோக்களில் நடிகர் ஸ்ரீ உடல் மெலிந்த தோற்றத்தில் காணப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் நடிகர் ஸ்ரீக்கு என்னாச்சு என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே சமயத்தில் நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து, நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், அவரது குடும்பத்தினர் அதற்கு முற்றுப் வைக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில்,
நடிகர் ஸ்ரீ தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். தற்போது மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி சமூக ஊடகங்களில் இருந்து சிறிது ஓய்வு எடுத்து வருகிறார் என்று நண்பர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
நடிகர் ஸ்ரீயின் உடல் நிலை குறித்த தவறான தகவல்களை தயவுசெய்து பரப்ப வேண்டாம்.அது அவரது மனநிலையை பாதிக்கக்கூடும். ஸ்ரீயின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவதூறு பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளனர்.
கல்விக் கடன் ரத்து, இலவச கேஸ் சிலிண்டர்.. மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்தது அதிமுக
ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீதி அழுகிறது.. சுப்ரீம் கோர்ட்டில் புதிய வரலாறு படைத்த மமதா பானர்ஜி!
சிப்ஸ் மெஷின் ஓகே... அது என்ன உள்ளாடை மெஷின்? டெல்லி மெட்ரோவின் 'புது முயற்சி' வைரல்!
தகுதியான தமிழ்த் திரைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.. விசிக கவலை
மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.5,040 உயர்வு!
லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி மகனுக்கு நேர்ந்த கதி.. பரபரப்பில் திரிபோலி!
எங்கள் கனவுகளைக் கேளுங்கள்.. செங்கல்பட்டு மாணவர்களின் அழகிய கவிதைகள்!
இல்லைன்னு சொல்லாதீங்க.. தெரிஞ்சுக்க முயலுங்க.. No God, no peace.. Know God, know peace!
{{comments.comment}}