சென்னை: மழைக்காலங்களில் நாம் படும் மிகப் பெரிய கஷ்டம் எது என்றால் மழை நீர் வடிகால் உள்ளிட்ட கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகள்தான். இந்த அடைப்புகளுக்குப் பெரும்பாலும் முக்கியக் காரணமாக அமைவது நாம் போடும் குப்பைகள்தான். அதுகுறித்த விழிப்புணர்வு மெசேஜ் ஒன்றை நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
மழைக்காலம் வந்து விட்டாலே மழை நீர் தேங்குவதும், கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் போக வழியில்லாமல் போவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. பெரும்பாலும் நாம் என்ன செய்கிறோம். வீட்டுக் குப்பைகளை தூக்கி அப்படியே வெளியே வீசுகிறோம். பலர் கால்வாய்களில் குப்பைகளைப் போடுவதை ஒரு கொள்கை போலவே வைத்துள்ளனர். அது சாக்கடைதானே.. அதில் போட்டால் என்ன தப்பு என்பது அவர்களின் வாதமாக இருக்கும்.
இப்படி காலி மனைகளில் போடும் குப்பைகள், கால்வாய்களில் போடும் குப்பைகள், மழை நீர் வடிகால் கால்வாய்களில் போடப்படும் குப்பைகள் எல்லாம் சேரும்போது மழை நீர் சரியாக போகும் வழியில்லாமல் சிக்கிக் கொள்கிறது. அதை எடுக்க தூய்மைப் பணியாளர்கள் கடும் சிரமப்படுகின்றனர். கன மழைக்காலங்களில் அவர்கள் படும் பாடு மிகக் கொடுமையானது.
நமது பகுதி நன்றாக இருக்க வேண்டும், தண்ணீர் சரியாக போக வேண்டும் என்பதற்காக அவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பணியாற்றுகின்றனர். இதையெல்லாம் மனதில் வைத்து நாம் குப்பைகளை, குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளை ஆங்காங்கு போடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இதுகுறித்து நடிகர் எஸ்.வி.சேகர் கூறுகையில், மழை நீர் வடிகால் வசதிகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளைப் போட்டு விடுகிறோம். அதனால்தான் பிளாக் ஆகி விடுகிறது. நம்ம வீட்டுக் குப்பையெல்லாம் வீட்டை விட்டுப் போனால் நல்லது என்று நாம் நினைக்கிறோம். அது என்னாகுது, அடைத்துக் கொள்கிறது. நான் எம்எல்ஏவாக இருந்தபோது ஜெட் லாடிங் மிஷின் வாங்கிக் கொடுத்தேன். கழிவு நீர் கால்வாய்களில் மனிதர்கள் இறங்காமல் மெஷின் மூலமாக குப்பைகளை, கழிவுகளை அகற்றக் கூடிய திட்டம் இது. ரூ. 90 லட்சத்தில் 2 வெஷின் வாங்கிக் கொடுத்தேன். எல்லோரும் வாங்கித் தர்றாங்க.
இதுபோன்ற இயற்கைப் பேரிடர் காலத்தில், இந்த சூழலில் நாமும் தற்காத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் இருங்க. அனைவரும் பத்திரமாக இருங்க என்று கூறியுள்ளார் எஸ்.வி.சேகர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}