சென்னை: நகைச்சுவை நடிகர் வையாபுரி வீட்டில் வைத்த இந்த வருட நவராத்திரி கொலுவுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் வருகை தந்து பாட்டெல்லாம் பாடி அசத்தியுள்ளனர்.
தமிழ்த் திரையுலகில் மிகவும் நீட்டான ஒரு நடிகராக அறியப்படுபவர் வையாபுரி. எதார்த்தமான மனிதர். இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகம் மிக்கவர். தேவையில்லாமல் எந்த வம்பு தும்புக்கும் போகாதவர். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். மிகவும் நல்ல மனிதர்களில் ஒருவரும் கூட.

வழக்கமாக அவரது வீட்டில் நவராத்திரியையொட்டி கொலு வைப்பார்கள். இந்த வருடமும் அப்படி கொலு வைத்திருந்தனர். இந்த முறைய நிறைய விஐபிக்களையும் அவர் அழைத்திருந்தார். அதில் பாடகர் வீரமணி ராஜுவும் ஒருவர். இவர் ஐயப்பன் பாடல்களுக்குப் பெயர் போனவர். கேரள மாநில அரசின் ஹரிவராசனம் விருதைப் பெற்றவர்.
வையாபுரி வீட்டுக்கு வந்திருந்த வீரமணி ராஜு, கொலுவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். பின்னர் தனது குரலில் பாடி பிரபலமான பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடலை பக்தி மணம் கமழ பாடி அனைவரையும் மகிழ்வித்தார். சும்மா சொல்லக் கூடாது.. அவரது பாடலால் கொலுவே மிகவும் பக்தி மயமாக மாறிப் போய் விட்டது.

இதேபோல நடிகர் சாம்ஸும் தனது குடும்பத்தோடு வருகை தந்து மகிழ்வித்தார். அவரையும் வையாபுரியின் மனைவி பாட்டுப் பாடச் சொன்னார். பாடினால்தான் சுண்டல் கிடைக்கும் என்று சொல்லவே, விடுவாரா சாம்ஸ்.. சூப்பராக பாட்டுப் பாடி அசத்தி விட்டார். நேர்த்தியான முறையில் அவர் பாடிய பக்திப் பாடல் அனைவரையும் கவர்ந்தது.
கொலு நிகழ்ச்சியில் நடிகர் பூவிலங்கு மோகனும் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டு வையாபுரி குடும்பத்தாரை மகிழ்வித்தனர். நவராத்திரி விழாவின் 9வது நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் கோலாகலமாக மக்களால் கொண்டாடப்படுகிறது. நாளை விஜயதசமி கொண்டாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}