தவெக மாநாடு.. இப்படித்தான் நடத்தப் போறோம்.. நிர்வாகிகளுடன் விஜய் நடத்திய முக்கிய ஆலோசனை!

Sep 09, 2024,06:21 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தொடர்பாக இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இந்த மாதம் இறுதிக்குள் தவெக கட்சி மாநாடு நடைபெற உள்ளதாகவும், இதற்கான பந்தல் அமைக்கும் பணி இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல்  ரீதியாகவும் சாதனை பெற்றுள்ளது.இதனை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் விஜயின் 69 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார்.இப்படமே விஜயின் திரை பயணத்திற்கு கடைசி அத்தியாயம்.இந்த ஒரு படத்தில் மட்டுமே நடித்து முடித்துவிட்டு முழு  அரசியல் பிரவேசம் காண இருக்கிறார் நடிகர் விஜய். 




இதற்கிடையே விஜய் ஆரம்பித்துள்ள புதிய கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்டமைப்பு பணிகள், நிர்வாகிகள் நியமனம், கொடி அறிமுகம், உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 23ஆம் தேதி நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த மாதம் மாநாடு நடத்த  தமிழக அரசிடம் முறையாக அனுமதி கேட்கப்பட்டிருந்தது. 


இது தொடர்பாக விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் மாநாடு தொடங்கும் நேரம், இடம், மாநாட்டில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள், எவ்வளவு பேர் கலந்து கொள்ள இருக்கின்றனர், உள்ளிட்ட 21 கேள்விகள் அடங்கிய,  நோட்டீசை அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி  ஆனந்துக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கேள்விகளுக்கு 5 நாட்களில் பதில் அளிக்கவும் வலியுறுத்தப்பட்டிருந்து.


இதனைத் தொடர்ந்து  பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 21 கேள்விகளுக்கும் எழுத்து வடிவிலான பதில் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை பரிசீலனை  செய்த டிஎஸ்பி, தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு  அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும் இதற்கான  அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.


இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் சென்னையில்  விஜயின் வீட்டில் இன்று நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது விஜய் தலைமையில் தவெக மாநாட்டிற்கான பணிகள், பந்தல் அமைத்தல், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமர்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் குறித்து  தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டது.மேலும் மாநாட்டை இந்த மாத  இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் விஜய் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. 


ஒவ்வொரு தொகுதி வாரியாக கட்சித் தொண்டர்களை எவ்வாறு அழைத்து வர வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான பந்தல் அமைக்கும் பணி இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்க இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்டா புயல்

news

திருச்செந்தூரில் நடைபெறும் சாயா அபிஷேகம் பற்றி தெரியுமா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 28, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிகள்

news

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!

news

மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்

news

பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்

news

நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்