- மஞ்சுளா தேவி
தூத்துக்குடி: நடிகர் அபி சரவணன் எனப்படும் விஜய் விஸ்வா தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட 3000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். சென்னை வெள்ளத்தின்போதும் இதேபோல செய்தார் அவர் என்பது நினைவிருக்கலாம்.
தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரமாக கடும் மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் புகுந்து மின்சாரம், குடிநீர், உணவு உட்பட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் மக்கள் படாத பாடுபட்டு விட்டனர்.
பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அபி சரவணன் எனப்படும் விஜய் விஷ்வாவும் உதவிகள் செய்துள்ளார். தூத்துக்குடிக்குச் சென்ற அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, டூத் பேஸ்ட், பிரஷ், உடல் வலி மாத்திரைகள், ஓ ஆர் எஸ் குளுக்கோஸ், கோதுமை மாவு, பிஸ்கட், ஷாம்பு, நாப்கின் போன்ற பொருட்களை வழங்கினார்.

தனசேகர நகர், முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், ராஜிவ் நகர் போன்ற தெருக்களில் 3000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இன்னும் அடிப்படை வசதியின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். நாங்கள் பொருட்களை வழங்கிய போது அவர்கள் மிகுந்த நன்றியுடன் பொருட்களை வாங்கிக் கொண்டனர் என்று கூறியுள்ளார் நடிகர் விஷ்வா
பல இடங்களில் மின்சாரமும், குடிநீரும் வராத நிலையில் மக்கள் மிகுந்த அவதியுற்று வருகின்றனர்.
எங்களது பயணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு திரும்பும் போது உடல்நலம் சரியில்லாத குழந்தைகள் ,வயதான மூதாட்டி, உட்பட பலரை மீட்டுக் கொண்டு வந்தோம் .அப்போது அவர்கள் இங்கிருந்து வெளியே வந்தாலும் திரும்ப செல்ல முடியாத நிலையில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

பாம்பு, பூச்சி ,அட்டை எல்லாவற்றுடன் எங்கு பள்ளம், எங்க மேடு என்று தெரியாத நிலையில் கஷ்டப்பட்டு வருகிறோம். நம்மால் இயன்ற உதவிகளான உணவு மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வழங்கியதோடு முடிந்த அளவு ஆட்களை மீட்டு வெளியில் கொண்டு வந்து விட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.

அபி சரவணன் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் அட்டக்கத்தி படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். அதைத் தொடர்ந்து கேரள நாட்டிளம் பெண்களுடனே, சாகசம், டூரிங் டாக்கீஸ், பட்டதாரி, பிகில், மாயநதி, கொம்பு வச்ச சிங்கம்டா, சாயம் என பல படங்களில் நடித்துள்ளார்.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}