- மஞ்சுளா தேவி
தூத்துக்குடி: நடிகர் அபி சரவணன் எனப்படும் விஜய் விஸ்வா தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட 3000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். சென்னை வெள்ளத்தின்போதும் இதேபோல செய்தார் அவர் என்பது நினைவிருக்கலாம்.
தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரமாக கடும் மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் புகுந்து மின்சாரம், குடிநீர், உணவு உட்பட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் மக்கள் படாத பாடுபட்டு விட்டனர்.
பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அபி சரவணன் எனப்படும் விஜய் விஷ்வாவும் உதவிகள் செய்துள்ளார். தூத்துக்குடிக்குச் சென்ற அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, டூத் பேஸ்ட், பிரஷ், உடல் வலி மாத்திரைகள், ஓ ஆர் எஸ் குளுக்கோஸ், கோதுமை மாவு, பிஸ்கட், ஷாம்பு, நாப்கின் போன்ற பொருட்களை வழங்கினார்.

தனசேகர நகர், முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், ராஜிவ் நகர் போன்ற தெருக்களில் 3000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இன்னும் அடிப்படை வசதியின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். நாங்கள் பொருட்களை வழங்கிய போது அவர்கள் மிகுந்த நன்றியுடன் பொருட்களை வாங்கிக் கொண்டனர் என்று கூறியுள்ளார் நடிகர் விஷ்வா
பல இடங்களில் மின்சாரமும், குடிநீரும் வராத நிலையில் மக்கள் மிகுந்த அவதியுற்று வருகின்றனர்.
எங்களது பயணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு திரும்பும் போது உடல்நலம் சரியில்லாத குழந்தைகள் ,வயதான மூதாட்டி, உட்பட பலரை மீட்டுக் கொண்டு வந்தோம் .அப்போது அவர்கள் இங்கிருந்து வெளியே வந்தாலும் திரும்ப செல்ல முடியாத நிலையில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

பாம்பு, பூச்சி ,அட்டை எல்லாவற்றுடன் எங்கு பள்ளம், எங்க மேடு என்று தெரியாத நிலையில் கஷ்டப்பட்டு வருகிறோம். நம்மால் இயன்ற உதவிகளான உணவு மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வழங்கியதோடு முடிந்த அளவு ஆட்களை மீட்டு வெளியில் கொண்டு வந்து விட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.

அபி சரவணன் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் அட்டக்கத்தி படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். அதைத் தொடர்ந்து கேரள நாட்டிளம் பெண்களுடனே, சாகசம், டூரிங் டாக்கீஸ், பட்டதாரி, பிகில், மாயநதி, கொம்பு வச்ச சிங்கம்டா, சாயம் என பல படங்களில் நடித்துள்ளார்.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}